
நாயகியாக டெல்லி மாடல் அழகி சமீரா நாயகியாக நடித்துள்ளார். 2-வது நாயகனாக சந்தோஷ் நடித்திருக்கிறார்.
மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல், அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக சந்தைப்படுத்துதல் என்று விரியும் காமெடி திரில்லர்படமாக இது உருவாகி இருக்கிறது.
தன்ஷி இசை அமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் - ரமணி. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

இது பற்றி கூறிய இயக்குனர் ரமணி....
“சென்னையைச் சேர்ந்த பிரபல நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களைத் துணிச்சலாகச் சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறோம்” என்றார்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட குரங்குபொம்மை இயக்குநர் நித்திலன் பெற்றுக்கொண்டார்.
‘ஒளடதம்’ படத்தை கீழக்கரை அஜ்மல் வெளியிடுகிறார்.