
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
இந்த வாரம் எப்படி 23-5-2022 முதல் 29-5-2022 வரை
ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் உங்கள் மனதில் உதயமாகும் திட்டங்கள் செயல் வடிவம் பெறும். 3-ம் அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் தன ஸ்தான அதிபதி சூரியனுடன் சஞ்சரிப்பதால் உப ஜெய ஸ்தானங்களான 3,11-ம் இடங்கள் வலுப்பெறுகிறது. இதனால் வழக்குகளில் வெற்றி சகோதர, சகோதரிகளால் ஆதாயம் கிடைக்கும். அனைத்து விதமான முயற்சிகளும் வெற்றி பெறும். சொத்து வாங்க முழுத்தொகையும் செலுத்தி தடைபட்டிருந்த பத்திர பதிவு இந்த வாரத்தில் முடிந்து விடும்.
இதுவரை தொழில், வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் இணையும் சூழ்நிலை அமையும். கண்டகச்சனியால் குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நிலவிய பிரச்சினைகள் சுமூகமாக தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.நன்மைகள் பெருகும். மாமனார் மூலம் பணம் அல்லது சொத்து கிடைக்கும்.
24.5.2022 மாலை 4.26 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.அமாவாசை நாளில் ஆன்மீக தலங்களுக்குச் சென்று புனித நீராடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
மற்றவர்களின் தயவை எதிர்பார்க்காமல் வெற்றிபெறும் கடக ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்தில் செவ்வாயும், சப்தமத்தில் சனியும் இருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் காரியங்கள் எப்படியாவது கடைசி நேரத்தில் கைகூடிவிடும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அவர், பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் உடன்பிறப்பு களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன்சுமை குறையும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பிரச்சினை, சொத்து பிரச்சினை அதிகரிக்கும். கொடுக்கல் -வாங்கல்களில் ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். விரயத்தால் மன நிம்மதி குறையும். வாங்கிய சொத்துக்களை விற்கக்கூடிய நிர்பந்தம் உருவாகும். ஆரோக்கியம் பாதிக்கும்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாவதால் விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். வழக்குகள் சாதகமாக அமையும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். எனவே வருமானம் திருப்தி தரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகள் விலகுவர். சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும். ‘புதிய கிளைத் தொழில் தொடங்கலாமா?’ என்று சிந்திப்பீர்கள். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.
மகரச் சனியின் வக்ர காலம்
உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஓரளவு நன்மைகள் கிடைக்கும். இருப்பினும் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். கூட்டுத் தொழில்புரிவோர், கணக்கு வழக்குகளில் கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் வீண்பழி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனப் பழுது வாட்டம் தரும். வாழ்க்கைத் துணை வழியே விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் ஆதியந்தப் பிரபுவை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 15, 16, 24, 25, 30, 31, ஜூன்: 4, 5மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் கண்டகச் சனியும், அஷ்டமத்துச் செவ்வாயும் இருப் பதால் மனக்கசப்பு தரும் சம்பவங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியக் குறைபாடு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. குரு பார்வை இருப்பதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். மனக்குழப்பம் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் பிரச்சினைகள் வரலாம்.
ஆண்டு பலன் - 2022
சந்திரனின் ஆசி பெற்ற கடக ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் வருட கிரகங்களால் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சாதகமான பலன்கள் உண்டாகும். ஏப்ரல் 2022க்குப் பிறகு தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் துரிதமாகும். முன்னேற்றத்திற்கான பாதை தென்படும்.
நேர்மை உங்களை சுமூகமாக வழி நடத்தும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்படும். ராசியை சனி பார்ப்பதால் தேவையற்ற கோபமும் முயற்சியில் தடை, தாமதம் உண்டாகும். கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். இந்த புத்தாண்டிற்கான விரிவான பலன்களைக் காணலாம்.
குரு சஞ்சார பலன்: ஏப்ரல் 13, 2022 வரை அஷ்டம ஸ்தானத்தில் குரு இருப்பதால் உங்கள் முயற்சி வெற்றியடைய நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். உங்களின் புகழ், அந்தஸ்தை நிலை நிறுத்த கடின உழைப்பு அவசியம். கடின உழைப்பால் அசௌகரியங்கள் ஏற்படலாம். தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும்.
பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். பேச்சாற்றலால் சிக்கலான காரியங்களைக் எளிதாக சாதிப்பீர்கள். பணிகளை மேற்கொள்ளும் போது தடை தாமதங்கள் வந்தாலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.
குடும்பத்திற்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்க்கை ஏற்படும்.அந்த புது வரவு களத்திரமாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். இளைய சகோதர வழியில் சொத்து தொடர்பான வில்லங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் செயல்பாடுகளில் மந்த நிலையும் மெத்தன போக்கும் ஏற்படும். தொழில் தொடர்பான சிறு தூர பயணம் ஏற்படும். காது நரம்பு தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.
ஏப்ரல் 13க்குப் பிறகு குரு பாக்கிய ஸ்தானத்திற்குச் செல்லும் போது உடல் தேஜஸ் பெரும். தங்களுடைய பணிகளை விரைவாகவும் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செய்து முடிப்பீர்கள். மிக மிக சிறப்பான நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தொட்டது எல்லாம் துலங்கும். ஜனவசியம் ஏற்படும். தெளிவான மன நிலையோடு செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு மகழ்ச்சி தரும்.
பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். வாழ்வில் வசந்தம் உலா வரும். மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இளைய சகோதர வழியில் ஆதாயம் ஏற்படும். உங்களின் சகோதர, சகோதரிகளின் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை ஸ்தானத்தில் இருந்து உங்களின் சகோதர, சகோதரி திருமணத்தை ஏற்று நடத்தி ஆனந்தம் அடைவீர். காரிய சித்தி ஏற்படும். தாயின் அன்பு, ஆதரவு, ஆசீர்வாதம் நிறைந்து இருக்கும். தாய்வழி உறவினர்களின் அனுசரனை இருக்கும். தாய் வழிச் சொத்து, உயில் ஆதாயம் உண்டு.
சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொழிவு குறையும். மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். ஞாபக மறதி மிகும். நம்மை உதவி செய்து கை தூக்கி விட யாருமில்லை என்ற எண்ணம் மிகைப்படுத்தலாக இருக்கும். அதிர்ஷ்டம் என்னைத் தேடி வருமா என அதிர்ஷ்டத்தைத் தேடி காலம் தள்ளுவீர்க்ள். 26.2.2022 முதல் 6.4.2022 வரை கடகத்திற்கு 5, 10ம் அதிபதியான செவ்வாய் 7, 8ம் அதிபதியான சனியுடன் 7ல் இணைகிறார். கடகத்திற்கு 5ம் அதிபதி செவ்வாய், 8ம் அதிபதி சனியுடன் இணைவதால் விபரீத ராஜ யோகம் உண்டாகும்.
சிலருக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். பல தலைமுறையாக தீராத சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். புத்திர பிராப்தம் உண்டாகும். உணவுப் பொருட்கள், கேட்டரிங், ஹோட்டல்கள் தொழில் நடத்துபவர்களின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குல தெய்வம் பூர்வீகம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்ள முயல்வீர்கள். பூர்வீகத் தொழிலால் கௌரவம் கிடைக்கும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய தொழில் ஆரம்பிப்பார்கள்.
ராகு/கேது சஞ்சார பலன்: ஏப்ரல் 12, 2022 வரை 11ல் நிற்கும் ராகுவாலும் 5ல் நிற்கும் கேதுவாலும் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். பிள்ளைகளின் கடமைகளை செய்து முடிப்பீர்கள். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடிப்பீர்கள்.
பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தருவதாக மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து அதிர்ஷ்டப் பொருட்களை வாங்கி குவித்து ஏமாறுவீர்கள். அநாவசிய ஆடம்பர செலவு செய்துவிட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். தந்தையின் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர் பூர்வீகத்திற்கு வந்து செல்வார். மூத்த சகோதரருடன் நல்லிணக்கம் உண்டாகும். உங்களின் பூர்வீகச் சொத்துக்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதன் மூலம் பெரிய பணம் கிடைக்கும்.
ஏப்ரல் 12, 2022க்குப்பிறகு 10ல் ராகுவும், 4ல் கேதுவும் மாறும் பொழுது தொடர்ந்து தொழில் அபிவிருத்தி உண்டாகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம், வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வீடு, நிலம், தோட்டம், வாகன யோகமும் உண்டாகும்.
சிலர் வீட்டை செப்பனிட்டு அழகு பார்ப்பார்கள். 4ல் கேது இருப்பதால் ராசி அதிபதி நிலம் தொடர்பான முதலீட்டில் கவனம் தேவை. தாயின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். சிலருக்கு அடமானத்தில் உள்ள சொத்து மீண்டு வரும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற காலம்.
திருமணம்: பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். உங்கள் ராசியைப் சம சப்தமமாகப் பார்க்கும் சனி பகவானால் கோட்சார ரீதியான புனர் பூ தோஷம் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 2022ல் குரு மீனத்திற்குச் சென்றவுடன் திருமண வாய்ப்புகள் விறுவிறுப்பாக தேடி வரும்.
ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். பலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். இதனால் குடும்பஉறுப்பினர்களிடையே சிறு சலசலப்பு மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும்.
பெண்கள்: கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டு சட்ட உதவியை நாட வைக்கும் என்பதால் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். குழந்தைகளின் நலனுக்காக கடன் வாங்க நேரலாம். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்க நேரும். வீட்டிற்கு தெரியாமல், நகை சீட்டு, ஏலச் சீட்டு கட்டுவதை தவிர்த்து அரசுடைமை வங்கிகளில் உபரி பணத்தை சேமிக்க வேண்டும்.
உத்தியோகஸ்தர்கள்: அரசு உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மிகுதியான பொறுப்புகள் வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மேலதிகாரிளிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். பல சாதகங்கள் நடந்தாலும் மிகைப்படுத்தலான மன உளைச்சலும் இருக்கும்.
முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட தொழில் ஆர்வம் உருவாகும். தொழிலுக்கு தேவையான உபரி மூலதனம் கிடைக்கும். ஏழாமிட சனி புதிய தொழில் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் தருவார். வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்யும் சூழல் நிலவும். யாரையும் நம்பி பணப் பொறுப்பை ஒப்படைக்க கூடாது.நம்பிக்கை இல்லாத புதிய நபர்களிடம் தொழில் தொடர்பு வைக்க கூடாது. முதலாளி,தொழிலாளர்களிடையே சிறு சிறு பிணக்குள் அவ்வப்போது தோன்றி மறையும்.
அரசியல்வாதிகள்: சில கடக ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். பெயர், புகழை காப்பாற்றிக் கொள்ள அதிகம் பாடுபட வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக அதிகம் செலவு செய்ய நேரும். பிறரைப் பற்றிய தேவையில்லாத விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும்.சில அரசியல் பிரமுகர்களுக்கு ஆரோக்கிய குறைபாடு உண்டாகும்.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு கால் நடைகள் மூலமாகவும் அதிக விளைச்சலாலும் வருமானம் அதிகரிக்கும் காலம். பெரும் முதலீட்டு விவசாயிகளுக்கு விளைச்சல் அமோக நற்பலன் தரும்.கார்பரேட் விவசாய நிறுவனங்களுக்கு உபரி உற்பத்தி கிடைக்கும்.
மாணவர்கள்: கடக ராசி மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். 5ல் கேது இருப்பதால் படிப்பதை எளிதாக புரிந்து கொள்வீர்கள். நீங்கள் 1 வருடமாக இரவும் பகலும் படித்த படிப்பு உங்களுக்கு கைகொடுக்கும். ஏப்ரல் 2022 போட்டி பந்தயங்கள், போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
புனர்பூசம் 4ம் பாதம்: இதுவரை பாராமுகமாக இருந்த உறவுகளின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகப்படுத்தும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் இந்த புத்தாண்டில் விரும்பிய மாற்றத்தை தரும். வியாழக்கிழமை வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகனை வழிபடவும்.
பூசம்: நல்ல வேகமும், விவேகமும் உண்டாகும். தொழில் சார்ந்த எண்ணம் ஈடேறும். வரக்கூடிய இடர்பாடுகளையும், அவமானங்களையும் உணரும் உள்ளுணர்வு உருவாகும். சுப பலன்களை அதிகரிக்க சனிக் கிழமை காளியை வழிபடவும்.
ஆயில்யம்: கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத சில உதவிகள் தேடி வரும். பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புதன்கிழமை விநாயகருக்கு அருகம்புல் அணிவித்து வழிபட நல்லது நடக்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விளம்பி வருட பலன்
கற்பனையுணர்வு மிகுந்தகடக ராசியினருக்கு தமிழ் புத்தாண்டு நிறைந்த பொருளாதாரத்தை வழங்க நல் வாழ்த்துக்கள்.
இந்த புத்தாண்டில் ராகு பகவான்10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். கேது பகவான் 4ம் இடமான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். சனி பகவான் 7, 8ம் இடங்களில் சஞ்சரிக்கிறார். இந்த சுப கிருது ஆண்டு முழுவதும் பாக்கியாதிபதி குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. கண்டகச் சனியின் பாதிப்புகள் குறையும்.
கடந்த 5 மாதங்களாக அஷ்டம குருவால் ஏற்பட்ட இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். பத்தில் சஞ்சரிக்கும் ராகு நிலையான தொழிலால் உங்களைவளம் செய்யப் போகிறார். குருபகவான் ராசியை பார்ப்பதால் தடை பட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். மனக் குழப்பம் நீங்கி தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள் மொத்தத்தில் ஆரவாரம் நிறைந்த புத்தாண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
குடும்பம்: ராசி, 5 மற்றும் 9ம்மிடம் குருவின் பார்வையால் புனிதமடைவதால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையான உறவுகளின் அன்பில் ஆனந்தம் அடைவீர்கள். பிரிந்த குடும்ப உறவுகளின் வருகை ஆறுதலையும் நிம்மதியையும் தரும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். சிலருக்கு மருமகன், மருமகள் வருவார்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.விவகாரத்து வழக்கு சாதகமாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
ஆரோக்கியம்: 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் கேது நிற்பதால்சிலருக்கு யூரினரி இன்பெக்சன், கல்லடைப்பு போன்ற கணையம், சிறுநீரகம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். தொழில் அலைச்சலால் நேரத்திற்கு உண்ண, உறங்க முடியாது.ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் உடல் உபாதைகள் எளிதில் கட்டுப்படும்.
திருமணம்:பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும்.சிலருக்கு சடங்கு சம்பிரதாயங்களை கடைபிடிக்காத காதல் கலப்பு திருமணமாகவே இருக்கும். 2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகப் போவதால் 2022க்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது.
பெண்கள்:இந்த ராகு கேது பெயர்ச்சி மகிழ்ச்சியை மிகைப்படுத்தி தரும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். உற்றார் உறவினர்களுடன் நிலவிய மன பேதங்கள் மறையும். குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். தாய் வழிச் சொத்து கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வீட்டுக் கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். இந்த ஆண்டு அனைத்து வகையிலும் திருப்புமுனையாக அமையும்.
மாணவர்கள்:மாணவ - மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நல்ல காலம். உயர் கல்விக்கான வாய்ப்பு மிகச் சுலபமாக கிடைக்கும். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் விடுதியில் சென்று தங்கி படிக்கும் வாய்ப்பு உருவாகும்.4ல் கேது இருப்பதால் பரிட்சைக்கு செல்லும் முன்பு விநாயகரை வழிபடவும்.
உத்தியோகஸ்தர்கள்:உத்தி யோகத்தில் இருப் பவர்களுக்கு பொறு ப்புகள் அதிகமாக வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும்.வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். சக ஊழியர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும்.
முதலீட்டாளர்கள்:சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். 10ல் ராகு இருப்பதால் நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்கள் கூட அதை காற்றில் பறக்க விட்டு குறுக்கு வழியில் தொழிலை வளர்க்க விரும்புவார்கள்.சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான நல்ல நேரம். உற்பத்தி, கொள்முதல் அதிகரித்துக் கொண்டே இருக்கும் தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும். 17.1.2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகுவதால் தொழில் தொடர்பான அனைத்து விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
அரசியல்வாதிகள்:சனியின் சஞ்சாரம் சற்று சுமாராக இருப்பதால் அரசியல் வாதிகளுக்கு பொது மக்களுக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் வாக்குறுதி கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அநாவசியமான விமர்சனங்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
கலைஞர்கள்:கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். படப்பிடிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்காக கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கிட்டும்.இசைக் கலைஞர்கள், சினிமா பத்ரிக்கையாளர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள் வசனகர்த்தாக்கள் ஆகியோர்க்ளுக்கு விருது கிடைக்கும்.
விவசாயிகள்:செவ்வாயின் வீட்டில் சஞ்சரிக்கும் ராகு அபரிமிதமான நற்பலன்களை வழங்குவார். எதையும் தைரியமாக எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்குஅதிக விளைச்சல் மற்றும் கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் அதிகரிக்கும். விளை நிலங்கள் தொடர்பான பங்காளி சண்டை பேச்சுவார்த்தை மூலமாக சரியாகும்.
ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 10ல் நிற்கும் ராகுவாலும் 4ல் நிற்கும் கேதுவாலும் சில சங்கடங்கள் உருவாகலாம். ஜாதகரின் பல்வேறு தொழில் வாய்ப்புகளுக்கு ராகு உறுதுணையாக இருந்தால் கூடதொழில் மூலம் பெயருக்கு ஒரு கலங்கமும் ஏற்படலாம்.
உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் சட்டச் சிக்கல் மற்றும் வாஸ்து குற்றம் நிறைந்த வீடு, மனைகளை வாங்க நேரலாம்.குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்கலாம். அதிக மதிப்பு உள்ள சொத்தை குறைந்த விலைக்கு விற்கலாம்.சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகலாம். மின்சாதனங்கள், வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும்.
குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 7ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படலாம். அல்லது தொழில் உத்தியோகம் தொடர்பாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். சிலருக்கு திருமண வாழ்க்கையில் பிடிப்பு குறையும்.நம்பியவர்களே துரோகம் செய்யலாம். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். எந்த ஒரு நிலையிலும் அவசரம் வேண்டாம்.
பரிகாரம்:வியாழக்கிழமை காலை 11--12சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்க நன்மை உண்டாகும்.
கடன் சுமை தீரும்
5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடன் பிரச்சனையிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் நிலவிய சிக்கல்கள் தீரும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எதிர் பாராத தனவரவினால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும். வங்கியில் உபரித் தொகை சேமிப்புத் தொகை உயரும். கரைந்த சேமிப்புகள் வளரும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
கண்டகச் சனியின் ஆதிக்கம், கடமையில் கவனம் இனி தேவை!
கடக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 7-ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். இதைக் ‘கண்டகச் சனி’ என்று சொல்வது வழக்கம். இப்போது சனியின் நேரடிப்பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது.
‘கண்டகச் சனி’ என்றதும், ‘ஏதேனும் ‘கண்டம்’ வந்து விடுமோ’ என்று நினைக்க வேண்டாம். சனி மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் கூடும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதற்கேற்ப சனியின் கடுமையைக் குறைக்கும். இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது.
ஏழாமிடத்தில் சனி
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக, உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ உடலில் சிறு அச்சுறுத்தல்கள் தோன்றினாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 1, 4, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே உடல் ஆரோக்கியம், அறிவாற்றல், முன்னேற்றம், உற்சாகம், சுகஜீவனம், வாகனம், தாய்வழி உறவு, பூர்வீகம், பாக்கியம் ஆகிய அனைத்து ஆதிபத்யங்களிலும் வரும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் நேரடிப் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்படும். சனியின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் கல்வியில் கரையேற கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த இலக்கை அடைவது கடினம் என்றாலும், குரு பார்வை இருப்பதால் மகர குருவின் சஞ்சார காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் நிறைவேறும். சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தனவரவு தாராளமாக வந்து சேரும். தனாதிபதியாகவும், குடும்ப ஸ்தானாதிபதியாகவும் சூரியன் விளங்குவதால், மங்கல ஓசை மனையில் கேட்க வாய்ப்பு கிட்டும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதனாக சந்திரன் இருப்பதால் வெளிநாட்டு முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். மின்னணுத் துறையிலும், கலைத்துறையிலும் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாக அமையும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வில் வெளிவரும் சூழ்நிலையும் ஒருசிலருக்கு ஏற்படும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வீடு, இடம் சம்பந்தப்பட்ட வகையில் எடுத்த முடிவு வெற்றி தரும். வீட்டை விரிவு செய்து கட்டுவதில் அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பதில் ஆர்வம் கூடும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். இந்த நேரத்தில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கப் போகின்றார். அப்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் ஏற்பட்டாலும், கும்ப ராசி சனிக்கு சொந்த வீடு என்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கலாம். சொந்தங்களின் பகையை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் குரு வருவதால் ஏற்றமும், இறக்கமும் கலந்த நிலை உருவாகும். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, மிகச்சிறந்த பலன் உங்களுக்கு கிடைக்கும். குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே தொழில் தொடங்க வாய்ப்புகள் கைகூடி வரும். 4-ல் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அடிக்கடி தொல்லைகள் உண்டு. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் அகலும். வாகனங்கள் வாங்கிப் பயணம் செய்யும் முயற்சி கைகூடும். கேதுவின் ஆதிக்கத்தால் சகோதர வர்க்கத்தில் சச்சரவுகள் ஏற்படலாம். அவர்கள் மூலம் வாங்கிய தொகையால் பிரச்சினைகள் உருவாகலாம்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
புதன்கிழமை தோறும் விரதமிருந்து ராமபிரான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். ராமர் பட்டாபிஷேக படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து ராமர், சீதா, அனுமன் ஆகியோருக்குரிய பாடல்களைப் பாடி வழிபடுவது நல்லது. ராமபிரான் வழிபாடு நம்பிக்கையை நிறைவேற்றி வைக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
ஒன்பதாமிட குருவின் பொது பலன்கள்: ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம். 6,9ம் அதிபதி குரு 9ல் ஆட்சிபலம் பெறுகிறார்.9ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு 7, 8ம் அதிபதி சனியின் பார்வை 17.1.2023 வரை உள்ளது. 9ம் இடத்திற்கு சனி, குரு சம்பந்தம் இருப்பதால் பலர் ஜீவனத்திற்காக இடம் பெயரலாம். 6ம் அதிபதி 9ல் ஆட்சி பலம் பெறுவதுடன் சனிப் பார்வை இருப்பதால் சுபமும் அசுபமும் சேர்ந்த பலனே நடக்கும்.
குருவின் 9ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு உள்ளது. பலர் 6ம்மிடம் என்றால் பொருள் கடன் என்று நினை க்கிறார்கள். பிறவிக்கடன், பொருள் கடன் சேர்ந்தது தான் 6ம் பாவகம். குருவின் 9ம் பார்வைக்கு பாக்கிய பலன்களை அதிகரிக்கும்சக்தி உள்ளது. மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும் கர்மாவோடு தொடர்புடையது.
பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவுகளிடம் ஒன்றை நாம்பெற்றுக் கொள்கிறோம்,அல்லது இழக்கிறோம். இந்த கர்மாவின் தொடர்ச்சியில் சில உறவுகள் கர்ம பந்தமாகிறது. பல உறவுகள் கர்ம வினையாகிறது. அடுத்தவருக்கு ஏதேனும் ஒரு உபகாரம் செய்கிறோம்.சில சமயங்களில் ஏமாற்ற ப்படுகிறோம். பல சமயங்களில் ஏமாற்றுகிறோம்.சிலருக்கு நல்லது செய்கிறோம்.பலரிடமிருந்து அளவுக்கு அதிகமாக நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.
இந்த கொடுக்கல் வாங்கலே ருண பந்தம் எனப்படுகிறது. ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல. ஒருவரிடம் இருந்து பெற்ற அன்பும் உதவியும் கூட கடன் தான். ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்பிற்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால் ருண பந்தம் கர்ம வினையாக மாறி ஜனன கால ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாமிடம் பலம் இழக்கும்.
குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு கிடைக்கும் இந்த காலத்திற்கு பெற்றோர்கள், தாத்தா, பாட்டி வாழ்ந்து கொண்டுஇருந்தால் அவர்களுக்கு தேவையான உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து உங்களது உணர்வுகளை சாந்தமாக வெளிப்படுத்துங்கள், அவர்களின் நல்லாசிகளைப் பெறுங்கள். பெற்றோர்கள் மறித்த பிறகு எவ்வளவு பித்ருக்கள் பூஜை செய்தாலும் கிடைக்காத பாக்கிய பலன் ஒரு நொடியில் கிடைத்துவிடும்.
பெற்றோர்கள் வாழ்ந்து மறைந்திருந்தால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது குறிப்பாக விடியற்காலை 5 - 6க்குள் மானசீகமாக பேசுங்கள். நல்லாசிக்காக ஆத்மார்த்தமாக வழிபடுங்கள். அடுத்த நொடியில் உங்கள் குறைகள் பரிசீலிக்கப்படும். உங்களுக்கு பிறவி கொடுத்தவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பிரதி உபகாரம் தீரும்.
குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு முறையான பித்ருக்கள் பூஜை செய்து வழிபட பிறவிக்கடன் மற்றும் பொருள் கடன் தீரும். கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்த இயலாத சூழ்நிலையில் இருந்தால் கால அவகாசம் கொடுங்கள். மிரட்டி தற்கொலைக்கு அல்லது தலைமறைவாக காரணமாக இருக்காதீர்கள். உண்மையில் கொடுக்க கூடிய சந்தர்ப்பம் இருந்தும் ஏமாற்றுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை ராசிக்கு இருப்பதால்இயற்கையிலேயே அழகான நீங்கள் மேலும் அழகு பெறுவீர்கள். உங்களுக்கு என்று தனி கொள்கை வைத்து அதன் அடிப்படையில் செயல் படுவீர்கள். சட்ட திட்டத்திற்கு இணங்கி நடப்பீர்கள். தங்களின் தோற்றம், செயல்பாடுஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். நடை, உடை, பாவனைகளில் கம்பீரம் ஏற்படும். மிடுக்கான தோற்றம் ஏற்படும். தடை பட்டசெயல்கள் வெகு விரைவில்செயலாக்கம் பெறும். உங்களின் செயல்பாடுகள் வியக்க தக்க வகையில் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பல்வேறுஅனுகூலமானபலன்கள் நடைபெறும்.உங்களுடைய தகுதி, திறமைஉயரும். சமூதாய அங்கீகாரம்ஏற்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும்.
7ம் பார்வை பலன்கள்: குருவின்7ம் பார்வை 3ம் இடமான சகாய ஸ்தானத்தில் பதிகிறது.அனைத்து விதமான தடைகளும் தகர்ந்து முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். உங்களின் முயற்சிகள் தக்க சமயத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். உங்கள் முயற்சிகளையும், உழைக்கும் ஆற்றலையும் பல மடங்கு உயர்த்திக் கொண்டு முறையாக பயன்படுத்த ஏற்ற காலம். எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் இருந்தகருத்து வேறுபாடு மறையும். உடன் பிறந்தவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடன் நன்றாக இருப்பார்கள். சகோதரர் தொழில் அல்லது உத்தியோகத்திற்கு பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.வேலையில் தொழிலில் இடமாற்றம் உண்டாகும். சிலர் வீடு மாற்றம் செய்யலாம். சிலர் வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு கட்டி குடியேறலாம்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம்பார்வை 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. குருவின் பார்வை படும் இடம் பூரிப்பாகும். உங்களைப் பிரிந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு மீண்டும் இல்லம் திரும்புவார்கள். அரசு உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகாதவர்களுக்கு பணி நிரந்தரமாகும். கவுரவப் பதவிகள், விருதுகள் கிடைக்கும். ஆன்மீகத் தொண்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக குருமார்களின் நல்லாசி கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும்.
வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசித்த கணவன், மனைவி இப்பொழுது தம்பதியராக ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தும் நேரம் வந்துவிட்டது.அடமானத்தில் இருந்த நகைகள் மீண்டு வரும். புதியஅணிகலன்கள், அழகு ஆடம்பரப்பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவனுக்கோ, மனைவிக்கோதிடீர் அதிர்ஷ்டம், பெரும் பணம்போன்றவைலாட்டரி, பங்குச் சந்தை, உயில் மூலம் ஆதாயம் கிடைக்கும்.சகோதர, சகோதரிகள் அல்லது பிள்ளைகளின் திருமணத்தை முன் நின்று விமரிசையாக நடத்துவீர்கள். பாகப் பிரிவினைகள் சுமுகமாகும். எதிர்பாலின நட்பு கிடைக்கும். மகப்பேறு கிடைக்காதவர்களுக்கு குல தெய்வ அருளால் ஆண் குழந்தை பிறக்கும். வீடு, வாகன யோகம் கிட்டும். அவரவர் வயதிற்கும், தசா புக்திக்கும் ஏற்ற அனைத்து சுப நிகழ்வுகளும் நடக்கும்.
குருவின் வக்ர பலன்:29.7.2022 முதல் 23.11.2022 வரை
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரமடையும் காலத்தில் உங்கள் ஆற்றலையும் திறமையையும் பார்த்து மற்றவர்கள் வியப்பார்கள். மனதை ஆட்டிப்படைத்த இனம் புரியாத வேதனைகள் மறையும்.உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிறருக்கு பொறுப்பு கையெழுத்திட்ட ஜாமீன் தொகை வந்து சேரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். தாய், தந்தை உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவிய இன்னல்கள் அகலும் ராசிக்கு சனி பார்வையும் இருப்பதால் ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்க செய்யும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
திருமணம்:குருப் பார்வை ராசிக்கு இருப்பதால் பல வருடங்களாக திருமணத்தடையை சந்தித்த கடக ராசியினருக்கு திருமணம் நடந்து முடியும். ஒரு சிலருக்கு சட்ட சிக்கலான இரண்டாம் திருமணமும் நடக்கும். 2023ல் அஷ்டமச் சனி ஆரம்பமாகப் போவதால் 2022க்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நல்லது.
பெண்கள்:குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிலவிய பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். உங்களை புரிந்து கொள்ளாத குடும்ப உறுப்பினர்கள் உங்கள் நல்ல குணம் அறிந்து சரணடைவார்கள்.
பரிகாரம்: பொதுவாக கர்ம காரகன் சனி கடக ராசிக்கு அஷ்டமாதிபதி என்பதால் இயல்பிலேயே பித்ரு தோஷ தாக்கம் மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 9ல் ஆட்சி பலம் பெற்று இருக்கும் இந்த கால கட்டத்தில் முறையான முன்னோர் வழிபாடு செய்து வர 2023 ஜனவரியில் ஏற்படப் போகும் அஷ்டமச் சனியால் பெரிய பாதிப்பு இருக்காது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
பத்தில் ராகு/ நான்கில் கேது
அன்பான கடக ராசியினரே ராகு/கேதுக்கள் 10,4ம் இடத்திலும், குருபகவான் 9,10ம் இடத்திலும் சனி பகவான் 7,8ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்.
பத்தாமிட ராகுவின் பலன்கள்:கடந்த ஒன்றை ஆண்டுகளாக லாப ஸ்தானத்தில் சஞ்சரித்த ராகு தொடர்ந்து உங்களுக்கு நட்புக் கரம் நீட்டுகிறார். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொழிலை இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்தவர்கள் கூட நல்ல மாற்றத்தைக் காண்பார்கள்.
கடக ராசியினர் பல்வேறு தொழில் தந்திரங்களை பயன்படுத்தி தொழிலில் புதிய சாதனை படைக்கப் போகிறார்கள்.
நியாயம், தர்மத்திற்கு கட்டுப்பட்டு தொழில் நடத்தியவர்கள் கூட அதை காற்றில் பறக்க விட்டு குறுக்கு வழியில் தொழிலை வளர்க்க விரும்புவார்கள். சுய தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு மிகச் சிறப்பான நல்ல நேரம். உற்பத்தி, கொள்முதல் அதிகரித்துக் கொண்டே இருக்கும். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகும்.
பணப்புழக்கம் சரளமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் உதவியுடன் ராகு பகவான் பல்வேறு பாக்கிய பலன்களை வாரி வழங்கவுள்ளார்.
ராசிக்கு 7, 8ம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பலம் பெற்றவுடன் அஷ்டமச் சனி ஆரம்பமாகிறது. சனி பகவானால் சிலருக்கு விபரீத ராஜ யோகமும் ஏற்படப் போகிறது.ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார். அதனால் ஏற்படப் போகும் பலன்களைப் பார்க்கலாம்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் கடகத்திற்கு தனாதிபதி. பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எதிர் பாராத தனவரவினால் பொருளாதார மாற்றமும் ஏற்றமும் மன மகிழ்வை தரும்.அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் வீட்டிற்கு தேடி வந்து கடன் கொடுப்பார்கள். ராகு இரண்டாம் அதிபதியின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் அசட்டுத்தனமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு கர்மாவை அதிகரிக்க நேரும்.
எனினும் கொடுத்த வாக்கை காப்பாற்ற அதிகமாக போராட நேரும். உங்களின் வார்த்தையின் கடுமையால் பாதிக்கப்பட்டவர் உங்களை சபிக்கலாம். உங்களின் பேச்சால் ஒருவர் கோபப்பட்டால் காலப்போக்கில் மன்னிப்பு கேட்டு சரி செய்து விடலாம். சாபம் வாங்கினால் சரி செய்வது மிகவும் கடினம் என்பதால் கவனம் தேவை.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் கடகத்திற்கு 4,11ம் அதிபதி. எந்த மாயமும்,எதிர்ப்பும் இல்லாமல் தாய் வழி பூர்வீகச் சொத்துகள் எளிமையாக உங்கள் பெயருக்கு மாறிவிடும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் உங்களின் மூத்த சகோதரர், சகோதரிகள் பூர்வீகச் சொத்தை உங்களுக்கு விட்டுக் கொடுப்பார்கள். சிலரின் பூர்வீகச் சொத்துக்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு அதன் மூலம் பெரிய பணம்கிடைக்கும். சிலருக்கு பிள்ளை இல்லாதவர்களின் அதிர்ஷ்ட சொத்து கிடைக்கும். அழகு, ஆடம்பர மற்றும் அதிர்ஷ்டப் பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற ஆடம்பரப் பொருட்களை மீடியாக்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து குவித்து ஏமாறுவீர்கள்.
அநாவசிய ஆடம்பர செலவு செய்விட்டு பின்னர் சேமிப்பை பற்றி சிந்திப்பீர்கள். தாயின் ஆஸ்தியும், ஆரோக்கியமும் கிடைக்கும். தாயின் ஆயுள், ஆரோக்கியம் சிறக்கும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 4ல் சஞ்சாரம் செய்யும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணம் செய்யும் காலம். அதாவது ராகுவும்கேதுவும் தங்களின் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கும் காலத்தில் உங்கள் அறியாமை மற்றும் அவசர புத்தியால் சட்டச் சிக்கல் மற்றும் வாஸ்து குற்றம் நிறைந்த வீடு, மனைகளை வாங்க நேரலாம்.
குறைந்த மதிப்புள்ள சொத்தை அதிக விலை கொடுத்து வாங்கலாம். இரண்டு சக்கரவாகனம் வைத்து இருப்பவர்கள் நான்கு சக்ர வாகனங்கள் வாங்கி மகிழ்வார்கள். மின்சாதனங்கள், வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக் கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும்.
நான்காமிட கேதுவின் பலன்கள்:நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம். பொதுவாக கேது என்பவர் தடை தாமத்தை ஏற்படுத்துபவர். நிதானமற்ற வேகத்துடன் செல்பவர்களுக்கு விவேகம் எனும் தடை தாமதத்தை கொடுத்து வாழ்வின் எதார்த்தத்தை புரிய வைப்பார். விதிக்கு மீறிய சுக போக வாழ்க்கைக்கு ஆசைப்படக் கூடாது என்று உணர்த்துவார். நியாயம் மற்றும் தர்மமே எத்தனை பிறவி எடுத்தாலும் வரப்போகும் சொத்து என்பதை புரிய வைப்பார்.
தற்போது நான்காமிடத்தில் கேது இருப்பதால் சொத்து வாங்குதல் , விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை. கணப்பொழுதில் தவறான பத்திரப் பதிவு, தவறான விலை நிர்ணயம், பூமி தோஷம் உள்ள இடம் விருத்தியில்லாத வீடு போன்ற வில்லங்கத்தில் மாட்டி மீள முடியாத விரயத்தை தந்து விடும். சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு உண்டாகலாம்.கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு கடகத்திற்கு 6,9ம் அதிபதி. கோட்சார குரு 9ல் ஆட்சி பலம் பெறுகிறார்கள். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும்.
தடைபட்ட பித்ருக்கள் பூஜை செய்து பாக்கிய பலனை அதிகரிக்க ஏற்ற நேரம். சிலர் ஆன்மீக நாட்ட மிகுதியால் கோவில் கோவிலாக ஏறி இறங்குவார்கள். சிலர் கோவில் திருப்பணிகள் அல்லது உலவாரப் பணிகளில் கலந்து கொள்வார்கள். தந்தைக்கு தடைபட்ட அரசின் உதவித் தொகை கிடைக்கும். தந்தையின் ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். தந்தைக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சில குழந்தைகள் தாத்தா, பாட்டி வீட்டில் வளர்வார்கள் அல்லது தந்தை தொழில் நிமித்தம் அல்லது ஏதேனும் காரணத்திற்காக தந்தை குடும்பத்தை பிரிந்து வாழ நேரும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் 10ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் மன நிறைவான சுகபோக வாழ்வில் ஆசை ஏற்படும். அதற்காக கடுமையாக போராட நேரும் . எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியத்தையும் தருவார்.கடக ராசியினரை எதிர்த்து யாரும் நிற்க முடியாத வகையில் பல்வேறு தொழில் தந்திரங்களை கற்றுக் கொடுப்பார். துரும்பைக் கூட தூணாக மாற்றும் அளவிற்கு தொழில் அனுபவங்கள் வளரும். ஜாதகரின் பல்வேறு வாய்ப்புகளுக்கு உறுதுணையாக இருந்தால் கூட பெயருக்கு ஒரு கலங்கமும் ஏற்படும்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் கடகத்திற்கு 5, 10ம் அதிபதி கடகத்திற்கு செவ்வாய் 5, 10ம் அதிபதி. 5ம் இடம் பதவி ஸ்தானம், புத்திர ஸ்தானம். 10ம் இடம் கர்ம ஸ்தானம் என்பதால் உத்தியோகம், தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். உங்களின் சமுதாய இன வளர்ச்சிக்கு உதவி செய்து உங்களை வெளியுலகத்திற்கு காட்டி முக்கிய பிரமுகராக அடையாளம் காட்ட முனைவீர்கள். சிலருக்கு கௌரவப் பதவி கிடைக்கும். புகழ், அந்தஸ்து உயரும்.சில கடக ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத அரசியல் பதவிகள் தேடி வரும். செல்வாக்கு உயரும் .குழந்தை பாக்கியத்திற்கு தவம் இருந்தவர்களுக்கு கர்மம் செய்ய ஆண் வாரிசு கிடைக்கும்.
ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் இந்த ஓராண்டு காலம் யாராலும் உங்களை அசைக்க முடியாது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406