
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
இந்த வாரம் எப்படி 23-5-2022 முதல் 29-5-2022 வரை
ராசி அதிபதி சனி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும். அவ்வப்போது சில சங்கடங்கள் தோன்றினாலும் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வார்கள்.
சகோதர சச்சரவுகள் விலகும். உடன் பிறந்தவர்களின் சுப காரியங்களை முன்னின்று நடத்தும் கடமையும், பொறுப்பும் உங்களைத் தேடி வரும்.புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு தொழிலை விரிவுபடுத்த தேவையான தொழில் கடன் கிடைக்கும்.அஷ்டமாதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிற்பதால் பூர்வீகம் தொடர்பான சில தடைகள், தாமதங்கள், மனக்குழப்பம் ஏற்படலாம்.
திருமண வயது ஆண், பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கூடிவரும். நோய்த் தாக்கம் குறையும். வார ஆரம்பத்தில் சில அசவுகரியங்கள் ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி உண்டு. அமாவாசையன்று காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் மகர ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன ஸ்தானத்தில் செவ்வாயும், சகாய ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது வருமானம் திருப்தி தரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த காரியம் தாமதப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். இக்காலத்தில் மருத்துவச் செலவு கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தடைகளும், மனப் போராட்டமும் அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்கக் கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.
புதனின் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இந்த வக்ர காலம் உங்களுக்கு இனிய காலம்தான். உத்தியோக மாற்றம் உருவாகலாம். மணவாழ்வில் இருந்த கருத்து வேறுபாடு அகலும். தனவரவிற்கு குறைவிருக்காது. வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். 6, 9-க்கு அதிபதி புதன் 5-ம் இடத்திற்குச் செல்லும் இந்த நேரத்தில் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய வாய்ப்புகளை வரவழைத்துக்கொள்வீர்கள். நீண்ட நாளைய சச்சரவுகள் மாறும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாகத் தீரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலம்.
மகரச் சனியின் வக்ர காலம்
உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்கும் சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம்பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. உடல்நலத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். தடைகளை வென்று முன்னோக்கிச் செல்ல வேண்டிய நேரம் இது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் பணிநீக்கம் ஏற்படலாம். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி, பல நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 16, 17, 23, 24, 28, 29, ஜூன்: 9, 10, 12, 13மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வெளிர் நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச்செய்வது நல்லது. பணப்புழக்கம்நன்றாக இருந்தாலும் மனக்குழப்பமும் அதிகரிக்கும். கணவன் - மனைவி உறவில் பாசமும் நேசமும் குறையும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. சகப் பணியாளர்களால் திடீர், திடீரெனப் பிரச்சனைகள் உருவாகும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
ஆண்டு பலன் - 2022
சனிபகவானின் ஆசி பெற்ற மகர ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வருட கிரகங்களின் சஞ்சாரம் சுமாராகவே உள்ளது. உங்களை சர்வ சாதாரணமாக எண் ணியவர்கள் உணரும்படி தடைகளைத் தாண்டி வெற்றி நடை போடுவீர்கள். மதிப்புமிக்கவர்களின் நட்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாக்கும். குறுக்குவழி வருமானத் திற்காக சிலர் உங்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். தகுதி இல்லாவர்களை நம்பி ஏமாறாமல் எது நல்ல வழி எனசிந்தித்து செயல்படுவது நல்லது. பண வரவில் ஏற்ற இறக்கம் நீடித்தாலும் தேவைகள் பூர்த்தியாகும் என்பதால் வருத்தம் கொள்ளத் தேவையில்லை. ஆடம்பரச் செலவை குறைத்து கடன் வாங்குவதை தவிர்த்தால் இந்த புத்தாண்டின் அனைத்து நாட்களும் இன்பமாகவே இருக்கும்.
குரு சஞ்சார பலன்: இந்த புத்தாண்டில் ஏப்ரல் 13, 2022 வரை வருட குருபகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனவரவு தாரளமாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க புதிய பாதை தென்படும். கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். ஆனால் குரு விரையாதிபதியாகி தனஸ்தானத்தில் நிற்பது வரவிற்கு மீறிய செலவை உண்டாக்கும். விரையத்தை வீடு, வாகனம் வாங்குவது, பிள்ளைகளின் திருமணச் செலவு, நகை வாங்குவது, எதிர்கால சேமிப்பு திட்டங்களில் சேமிப்பது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது என சுப விரயமாக மாற்றியமைப்பது புத்திசாலித்தனம்.
குடும்ப உறவுகளிடம் இருந்து வந்த பகை மறையும். இளவயது மகர ராசியினருக்கு திருமணம், குழந்தை பேறு உண்டாகும். மத்திம வயதினருக்கு மகன், மருமகள் பேரன், பேத்தி கிடைக்கும். வயது முதிர்ந்தவர்கள் தொழில் உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு ஓய்வு பெறுவார்கள்.மருத்துவ செலவு குறையும். எதிரிகள் விலகுவார்கள்.
ஏப்ரல் 13-க்கு பிறகு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் விரையாதிபதியாக ஆட்சி பலம் பெறுபவதும் சிறப்பு அல்ல. சகோதர, சகோதரிகளுக்காக சூழ்நிலை கைதியாக விட்டுக் கொடுத்து வாழும் சூழ் நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களின் திருமணம் அல்லது அவர்களின் குடும்பத்தை பராமரிப்பது, அவரின் கடனை ஏற்பது அல்லது அவருக்கு கடன் கொடுப்பது என விரயங்கள் மிகுந்து கொண்டே இருக்கும்.
இந்த காலகட்டத்தில் தடைபட்ட நீண்ட நாள் முயற்சிகள் பேச்சுவார்த்தையில் சுமூகமாகலாம். கருத்து வேறுபாட்டால் பிரிக்காமல் கிடந்த முன்னோர்களின் பூர்வீகச் செத்துக்கள் பிரிக்கப்படலாம். வெகு சிலர் கோப மிகுதியில் முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை அங்காளி, பங்காளிகளுக்குத் தாரை வார்க்கலாம். ராசியில் சனி இருப்பதால் உங்களின் சித்தப்பா நல்லவராக நடித்து உங்களை ஏமாற்றுவார் என்பதால் கவனம் தேவை. சிலர் வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கப் பெற்று உத்தியோக நிமித்தமாக இடம் பெயரலாம். சிலர் குறுகிய கால ஒப்பந்த அடிப்படை தொழில் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்லலாம்.
சனியின் சஞ்சார பலன்கள்: ராசிநாதன், தனாதிபதி சனி ராசியில் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. ஆனால் சனி, சந்திரன் சேர்க்கை ராசியில் இருப்பது காரியத் தடையையும் மன சஞ்சலத்தையும் மிகைப்படுத்தும். நிம்மதியான தூக்கம் இருக்காது. கோப உணர்வு மிகுதியாகும். எல்லாரிடமும் சகஜமாக மனம் ஒன்றி பழக முடியாது. எதையும் முறையாக திட்டமிட்டு செய்ய முடியாது. நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவே இருக்கும். ஜென்மச் சனி என்பதால் விரக்தி அதிகமாகும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் பணம் கடன் கொடுத்தாலோ அல்லது பண உதவி செய்தாலோ திரும்ப கிடைக்காது.
26.2.2022 முதல் 6. 4. 2022 வரை 4, 11-ம் அதிபதியான செவ்வாய் ராசி அதிபதி சனியுடன் ராசியில் இணைகிறார்கள். மகரத்திற்கு செவ்வாய் நான்காம் அதிபதி என்பதால் பலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்கும் பாக்கியம் உண்டாகும். வலது பக்கத்து வீட்டுக்காரருடன் நிலவிய எல்லைத் தகராறு சுமூகமாகும். தடைபட்ட வீடுகட்டும் பணி துரிதமாகும். ஜனன கால ஜாதகத்தில் தசா - புத்தி சாதகமாக இருந்தால் பல மகராசியினருக்கு புதிய பல திருப்புமுனைகள் உண்டாகும். தாயின் அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்கும். தாயின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தாய்வழிச் சொத்திற் காக தாய் மாமாவுடன் ஏற்பட்ட வழக் கின் தீர்ப்பு சாதகமாகும். வாழ்வில் செட்டில் ஆகுவதற்கு தேவையான நல்ல வழிகள் தென்படும். பலருக்கு திருமணத் தடை அகலும். சிலர் பெற்றோரின் அனுமதியின்றி திருமணம் செய்வார்கள். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டாகும். பல வழிகளில் பணம் வந்து பையை நிரப்பும். டல்லான வியாபாரம் துளிர் விடும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய் நாட்டுக் வந்து செட்டிலாக முயற்சிக்கலாம். சிலருக்கு தவறான பெண் நட்பால் அவமானம் உண்டாகும். ஆரோக்கிய குறைபாடு அதிகரித்து அதிக வைத்திய செலவு செய்ய நேரும். சிலர் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யலாம்.
ராகு/கேது சஞ்சார பலன்: ஏப்ரல் 12, 2022 வரை 5ல் ராகுவும் 11-ல் கேதுவும் இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். சிலர் குறுகிய காலம் பூர்வீகம் விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று தங்கலாம். அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகரிக்கும். புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற லௌகீக ஆசைக்கு மனம் ஏங்கும். இளவயதினருக்கு எதிர்பாலினரிடம் மிகுதியான ஈடுபாடு உண்டாகும். சில இளவயது மகர ராசிப் பிள்ளைகள்
தவறான நட்பு வலையில் மாட்டி வாழ்க்கையை கேள்விக் குறியாக்குவார்கள். பால்ய வயது மகர ராசியினர் எது சரி? எது தவறு என்று பகுத்தாய்ந்து செயல்பட வேண்டும். மிகக் குறிப்பாக பெற்றோர்களின் அறிவுரையை மதிக்க வேண்டும். பங்குச் சந்தையில் நாட்டம் மிகுதியாகும். பலருக்கு குறுகிய காலத்தில் பங்குச் சந்தையில் எதிர்பாராத மிகுதியான பொருள் வரவு உண்டாகும்.
கோட்சார ராகு ஏப்ரல் 12-ல் 4-ம் இடத்திற்கும் கேது 10-ம் இடத்திற்கும் பெயர்ச்சி யாகிறார்கள். கோட்சாரத்தில் 10-ல் கேது வரும் போது தொழில் ரீதியான இழப்புகள் மிகுதியாகும். மேலும் இது ஜென்மச் சனியின் காலம் என்பதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். பண வரவும் பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.சாட்சி கையெழுத்து, ஜாமீன் கையெழுத்து , கேரண்டி கையெழுத்து போடுவது குற்றவாளி கூண்டில் நிறுத்தும். சிலர் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து மானம் காக்க வீடு, வாகனம், நிலபுலன் ,நகை அனைத்தையும் இழந்து ஜாமீன் தொகையை கட்ட நேரும் என்பதால் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
அரசின் உதவித் தொகை வருவதில் தடை, தாமதம் ஏற்படும். முன்னோர்கள் கடைபிடித்து வந்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது உரிய ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும். அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படும்.
திருமணம்: மகர ராசியினருக்கு குரு விரயாதிபதி. பன்னிரன்டாம் அதிபதி குரு ராசியில் அமரும் போது திருமணம் நடக்கும் வாய்ப்பு குறைவு. 2021 குருவின் சாதகமற்ற நிலையுடன் ஜென்மச் சனியின் காலம் என்பதால் திருமண முயற்சியில் காலம், பணம் என பல விரயங்கள் நடந்து இருக்கும். சனிபகவானின் கடும் பகைவரான ராகு தசை நடப்பவர்களுக்கு ஜென்மச் சனி முடியும் வரை திருமண வாய்ப்பு குறைவு. ஜனன கால ஜாதகத்தில் ராகு நின்ற இடத்தைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். மேலும் கோட்சார குரு ஏப்ரல் 2022-ல் மீன ராசிக்கு சென்று களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் திருமண முயற்சி கைகூடும் வாய்ப்பு உண்டாகும்.
பெண்கள்: குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். உபரி வருமானத்தை அரசுடைமை வங்கிகளில் சேமிக்க வேண்டும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிதி நிறுவனங்களில் சேமிக்க கூடாது. பெண் நண்பிகளிடம் விலை உயர்ந்த நகைகளை இரவல் கொடுப்பது வாங்குவதை தவிர்க்கவும். நம்பிக்கை குறைவான இடங்களில் சேமிக்கும் பணமும், அடுத்தவர்களிடம் கொடுக்கும் தங்க நகையும் வீடு திரும்பாது.
விவசாயிகள்: விவசாயிகளுக்கு போதிய நீராதாரம் கிடைக்கும். விளைச்சல் சீராக இருக்கும். விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கும். அரசின் உதவிகள், நலத்திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும். ஏப்ரல் 2022-க்கு மேல் கிணறு தோண்டுவதை தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்கள்: கண் துடைப்பிற்கான பதவி உயர் வே தவிர பிரயோஜனம் எதுவும் இருக்காது. வேலைப் பளு அதிகமாக இருக்கும்.இரண்டு நபர்களுக்கான வேலை செய்து ஒரு நபரின் சம்பளத்தை பெற நேரும்.உத்தியோகஸ்தர்கள் கம்பெனி சார்பாக வெளிநாட்டில் சென்று பணிபுரிகின்ற வாய்ப்பு இருக்கும்.
முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் உங்களின் தனித்திறமையால் சமாளிப்பீர்கள். சனி பகவான் 10-ம் பார்வையால் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். ஏப்ரலில் கேது பத்தாமிடம் சென்றவுடன் சிறிய லாபத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். தொழிலில் நிலையற்ற தன்மை இருக்கும். கூட்டுத் தொழிலில் பிரிவினை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அரசியல்வாதிகள்: அரசியலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு மேலிடம் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நல்லிணக்கம் உண்டாகும். பகைமை மறையும். மிகப் பெரிய அரசியல் தலைவர்களின் நட்பு நன்மையை தரும். மிகப் பெரிய கட்சியில் இணையும் வாய்ப்பு கிட்டலாம்.பெரிய பதவிகளும் உங்களுக்கு கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது.
மாணவர்கள்: கோட்சார ராகு 4,5 ம் இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் சில குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டக் குறைவு, மெத்தனப் போக்கும் நிலவும். சோம்பலும் மறதியும் மிகுதியாகும். பருவ வயது குழந்தைகள் பெற்றவர்களைப் பிரிந்து ஹாஸ்டலில் தங்கி படிக்கலாம்.
உத்திராடம் 2 ,3,4: தொழில் உத்தியோகத்தில் நிலவும் சாதகமற்ற சூழ்நிலையால் திடீர் பக்தி உருவாகும். தொழில் நிலைக்குமா? வேலை பறிபோகுமா? கடன் தீருமா? என்ற பயத்தில் நிம்மதியான தூக்கம் இருக்காது. சனிக்கிழமை சிவனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபட பயம் நீங்கி சோதனைகள் சாதனைகளாகும்.
திருவோணம்: உங்களுடைய மூத்த சகோதரர் உங்களுக்கு பக்க பலமாக இருந்து உதவுவார். இதுவரை இருந்த வந்த சகோதர/சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வெள்ளிக்கிழமை குல தெய்வக் கோவிலுக்கு சென்று சர்க்கரைப் பொங்கல் படையலிட முன்னேற்றம் உண்டாகும்.
அவிட்டம் 1 ,2: சனியின் 3ம்பார்வை 3ம் இடத்திற்கு இருப்பதால் நீங்கள் எவ்வளவு உதவி செய்தாலும் உடன் பிறந்தவர்களுக்கு மன நிறைவு இருக்காது. நல்லவர்களாக இருந்த சகோதர, சகோதரிகளின் குணத்தில் கூட மாற்றம் உண்டாகும். செவ்வாய் கிழமை அரளிப்பூவினால் அர்ச்சனை செய்து முருகனை வழிபடுவதால் இன்னல்கள் நீங்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விளம்பி வருட பலன்
நீதிமான்களான மகர ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் தடைக்கற்கள் படிக்கற்கலாக அமைய நல்வாழ்த்துக்கள்.
ராசிக்கு 4ல் ராகுவும், 10ல் கேதுவும் பயணிக்கிறார்கள். குருபகவான் 3,இடத்திலும், சனி பகவான் ராசி மற்றும் 2ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள். 3ம்மிட குருபகவான் உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தருவார். தொழில், உத்தியோகத்தில் இடப் பெயர்ச்சியைத் தருவார். பாகப்பிரிவினை தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடக்கும். முக்கியமான ஆவணங்களை கை மறதியாக வைத்துவிட்டு தேடுவீர்கள். சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சி பலிதமாகும்.
ராகு 4ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சொத்துக்கள் தொடர்பான செயல்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தாயின் ஆரோக்கியத்திற்கு வைத்தியம் செய்ய வேண்டிய நேரம். 10ம்மிட கேதுவால் தொழில் ரீதியான பய உணர்வு, மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.கடுமையாக உழைக்க நேரும். உழைப்பிற்கான ஊதியம் கிடைக்க காலதாமதமாகும். ராசி அதிபதி சனிராசியில் ஆட்சி பலம் பெற்று நிற்பதால் உழைப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு.உங்கள் இயல்பான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பம்:குடும்ப ஸ்தானாதிபதி சனிஆட்சி பலம் பெறுவதால் உங்களின் பேச்சுக்கள் குடும்ப நபர்களை வசீகரிக்கும். மனைவி மற்றும் பிள்ளைகளின் தேவைகளை நிறைவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கும்.அது வாழ்க்கைத் துணையாகவோ குழந்தையாகவோ இருக்கலாம். பாக்கிய, லாபஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தாய்வழி சொத்து தொடர்பான விசயத்தில் தாயின் ஆதரவு சகோதர, சகோதரிகளுக்கே கிடைக்கும்.ஆனால் மூத்த சகோதரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும்.இழந்த அனைத்து விதமான இன்பங்களையும் இந்த புத்தாண்டில் கிடைக்கப் பெறுவீர்கள்.
ஆரோக்கியம்:சுக ஸ்தானத்தில் உள்ள நான்காமிட ராகுவால் உடலில் அசதி, கை, கால் வலி அதிகமாக இருக்கும்.உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.ஆயுள் தீர்க்கம். சிறு, சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம்.முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும்.
திருமணம்:ஜென்மச் சனியால் சிலருக்குதிருமணத் தடை நீடிக்கும் அல்லது திருமண முயற்சியில் நேரம், காலம், பணம் போன்ற விரயங்கள் இருக்கும். சனிபகவானின் கடும் பகைவரான ராகு தசை நடப்பவர்களுக்கு ஜென்மச் சனி முடியும் வரை திருமண வாய்ப்பு குறைவு. 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சிலருக்கு ஜென்மச் சனியால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும். ராகு தசை நடப்பவர்களுக்கு ஜனவரி 2023, சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடை பெறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெண்கள்:பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பீர்கள். குடும்ப உறவுகளுடன் சுப நிகழ்ச்சிகள், ஆடம்பர விருந்து உபச்சாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். தான, தர்மம் செய்வதில் விருப்பம் அதிகரிக்கும்.
மாணவர்கள்:பிள்ளைகள் அதிக நேரம் ஒதுக்கி படித்தால் பள்ளி இறுதி தேர்வில் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு. 4ம்மிட ராகுவால் சில மாணவர்கள் பள்ளியை மாற்றுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள்:4ம் இட ராகுஅர்தாஷ்டமச் சனி காலத்தில் ஏற்படும் கெடுதலுக்கு இணையான அசுப பலன்களை வழங்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். அடுத்தவர் விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. சில அரசு ஊழியர்கள் பதவி உயர்வு என்ற பெயரில் பிடிக்காதஊருக்கு சென்று கடமையாற்றும் சூழல் உண்டாகும்.
முதலீட்டாளர்கள்:பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. 10மிட கேது பரம பதம் போன்று தீடீரென ஏற்றத்தையும் எதிர்பாராத இறக்கத்தையும் தர வாய்ப்பு உள்ளது. யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. பெரிய தொழில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மிகப் பெரிய புகழ் கிடைக்கும். கையில் பணம் புரளுமா? வங்கி கணக்கில் உபரி பணம் சேமிப்பாக இருக்குமா? என்பது சந்தேகம்.
அரசியல்வாதிகள்:அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். வீண் அவமானம் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. அரசியல் வாதிகளுக்கு மறைமுக எதிர்ப்பு ஏற்படும். கட்சி தொடர்பான வழக்குகளில் சிக்கினால் உங்களின் எதிர்காலமேகேள்விக்குறியாகும்.
கலைஞர்கள்:கலைத்துறையினருக்கு பெயரை நிலை நிறுத்தும் வகையிலான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்டசெயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
விவசாயிகள்:உங்கள் விளை நிலத்திற்கு போதிய நீர் ஆதாரம் கிடைக்கும். தரமான பொருட்கள் விளையும். விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.விவசாயத்திற்கு தேவையான தளவாடப் பொருட்கள் வாங்க கடன் உதவி கிடைக்கும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்
ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 4 ல் ராகுவும் 10ல் கேதுவும் இருக்கிறார்கள்.எந்த செயலாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். வேகத்தை விட விவேகம் முக்கியம். இந்த காலகட்டத்தில் சில படிப்பினைகளை ராகு/கேதுக்கள் வழங்குவார்கள். சிலர் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கலாம்.
குரு:29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசியில் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான் வக்ரம் அடையும் காலத்தில் ஜென்மச் சனி என்பதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 3ம் இடத்தில் சஞ்சரிப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும். சிலருக்கு எதிர் பாலினத்தினரால் வம்பு, மனச் சங்கடம் உருவாகும். சில ஆண்கள் மற்றும் பெண்கள் இது போன்ற காலகட்டத்தில் மன ஆறுதலுக்காக குடும்ப விஷயத்தை பிறருடன் பகிரக் கூடாது. பூர்வீக சொத்து தொடர்பான செயல்களை ஒத்தி வைக்கவும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாகபூர்வீகத்தை விட்டு வெளியேறலாம்.
பரிகாரம்:வியாழக்கிழமை மாலை 5--8 மணிக்குள் லஷ்மி குபேர பூஜை செய்து வர கடன் தொல்லை குறைந்து பொருளாதார மேம்பாடு உண்டாகும்.
சொந்த வீடு கட்டும் யோகம்
லாப ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் வட்டிக்கு வட்டி கட்டி மீளமுடியாத கடன் பிரச்சனையிலிருந்து மீள முடியும்.நிலுவையில் உள்ள வராக்கடன்கள் வசூலாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம் .வெகு சிலருக்கு அடமானத்திவிருக்கும் சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புதிய சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள். குரு உங்களுக்கு விரயாதிபதியாகி 3ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் வரவிற்கு இணையான செலவும் இருக்கும். விரயத்தை சுப செலவாக மாற்றுவதில் உங்களின் புத்திசாலித்தனம் உள்ளது.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஜென்ம ராசியில் சனி! சிந்தித்து செயல்பட வேண்டும் இனி!
மகர ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு வருகின்றார். ஏழரைச்சனியில் விரயச்சனி முடிந்து ஜென்மச்சனி தொடங்கிவிட்டது. மகரம், சனிக்குச் சொந்த வீடு என்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ‘ஆயுள்காரகன்’ என்று சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினர் களுக்கோ உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகளை கொடுத்து நிவர்த்திசெய்வார். திடீர் திடீரென முடிவுகளை மாற்றிக்கொள்வீர்கள். பொருளாதாரப் பற்றாக்குறை அதி கரிக்கலாம்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருப்பதால் அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோகம்’ ஏற்படுகின்றது. மேலும் விரயாதிபதி குரு நீச்சம் பெறுவதும் யோகம்தான். எனவே விரயங்களைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு ஏற்படும். வீடு மாற்றங்கள், இடமாற்றங் கள், உத்தியோக மாற்றங்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும்.
ஜென்மச்சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே சனி சஞ்சரிக்கப் போகின்றார். இந்த ஜென்மச்சனி காலத்தில், திடீர், திடீரென மாற்றங்களும், மனக்குழப்பங்களும் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் சிலருக்கு ஏமாற்றங்கள் வரலாம். பொல்லாதவர்களை விட்டு விலகி நல்லவர்களோடு இணைந்து செயல்பட்டால் உள்ளம் மகிழும் சம்பவங்களை நிறைய சந்திக்கலாம். இல்லையேல் அல்லல்பட்டு அதற்கு பரிகாரங்களை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் செயல்களில் குறை கண்டுபிடிப்பர். பணியில் தொய்வு ஏற்படும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பகை உருவாகலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 3, 7, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. ராசிநாதன் மட்டுமல்லாமல் தனாதிபதியாகவும் சனி விளங்குவதால் அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து அதற்குரிய காரகத்துவத்தைச் சிறப்பாகச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. சகோதரம், வெற்றி, பஞ்சாயத்துக்கள், களத்திரம், குடும்பம், வெளிநாட்டு முயற்சி, தொழில் வளம், பெற்றோர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் எல்லாம் மாற்றங்கள் வரலாம். 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகளில் எதிர்பாராத மாற்றம் உண்டு.
சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால், கல்யாண முயற்சிகளில் ஒருசில தடைகள் இருந்தாலும் கடைசி நேரத்தில் சிறப்பாக முடிந்துவிடும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வரலாம். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி வணிகம் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபட்டிருப்பவர்கள், கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால், பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பொறுப்புகளை மற்றவர் களிடம் ஒப்படைக்கக்கூடாது. சகப் பணியாளர்களால் சிறுசிறு தொல்லைகள் ஏற்படலாம். தொழில் நடத்து பவர்களுக்கு போதிய மூலதனம் இல்லாமல் புதிய பங்குதாரர்களைச் சேர்க்க விரும்புவர்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மிகுந்த கவனம் தேவைப்படும். வம்பு வழக்குகள் வாசல் தேடி வரும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்காது. அஷ்டமாதிபதியாக சூரியன் விளங்குவதால் எதையும் துணிந்து செய்ய இயலாது. தொடர்கதையாய் கடன்சுமை அதிகரிக்கும். அரசாங்க விரோதங்களும் உண்டு. அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரெனப் பொறுப்புகள் மாற்றப்படலாம். செய்தொழிலில் கவனம் செலுத்தா விட்டால் ஒவ்வொரு நாளும் இழப்புகளையே சந்திக்க நேரிடும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண முயற்சிகள் கை கூடும். களத்திர ஸ்தானாதிபதியாகச் சந்திர பகவான் விளங்குவதால் குடும்பத்தில் பிரிந்தவர்கள் வந்து சேர வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளித்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கைகூடி வரும். வாகனம் வாங்க நினைப் பவர்களுக்கு இக்காலம் உகந்த காலமாகும். வாகனத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு விலை உயர்ந்த நவநாகரிக வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு திடீர் திருப்பங்களைக் காண்பீர்கள். செல்வநிலை உயரும். ‘சேமிப்புக் கரைகிறதே’ என்று கவலைப்பட்டவர்கள், இப்பொழுது மகிழ்ச்சி அடைவர். இடம், பூமியால் லாபம் உண்டு. என்றைக்கோ வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது பலமடங்கு விலை உயர்ந்து, அதன் விற்பனை மூலம் வரும் தொகையைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்த வர்களுக்கு அனுகூலமான நேரம் இது. இக்காலத்தில் கும்பத்தில் சனியும் சஞ்சரிப்பதால் வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெறப்போகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தன ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகார பலம் பெற்றவர்களின் ஆதரவோடு நல்ல சந்தர்ப்பங்கள் தேடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோக உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அர்த்தாஷ்டம குருவாக வருவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக் கலாம்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அர்த்தாஷ்டம ராகுவாக வருவதால் ஆரோக்கியத் தொல்லைகள் உண்டு. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. 10-ல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகோதர சச்சரவுகள் அகலும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். கேது பலத்தால் தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் அகலும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வதோடு இல்லத்து பூஜை அறையில் விஸ்வரூப ஆஞ்சநேயர் படம் வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
ஆரோக்கிய குறைபாட்டால் தடைபட்ட இல்லற இன்பம் தித்திக்கும். மாற்றம் ஒன்றே மாறாது என்பது போல் மாற்றக் கூடிய அனைத்தையும் மாற்றும் ஆர்வம் ஏற்படும். சிலர் தொழிலை, தொழில் முறையை மாற்றுவார்கள். வீடு அல்லது வேலையில் இடமாற்றம் உண்டாகும்.செய்ய நினைத்ததை நினைத்தபடியே செயல்படுத்துவீர்கள்.குரு உங்களுக்கு விரயாதிபதி என்பதால் என்பதால் இளைய சகோதர சகோதரிகளிடன் சுப செலவிற்காகபெரும் தொகையை இழக்க நேரும். ஒரு சிலரின் இளைய சகோதரர் வெளிநாடு அல்லது வெளிமாநிலத்திற்கு இடம் பெயறுவார்கள். உடன் பிறந்தவர்களின் நலனில் ஆர்வம் மிகும். நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டு கொண்டிருந்த சில முக்கிய பணிகள் மூன்றாமிடத்து குருவால் நிறைவேற்றப்படும்.
குரு 12ம் அதிபதி என்பதால் ஞாபக மறதிஅதிகரிக்கும். ஆபரணங்களை கழட்டி அங்கே வைத்தேன், இங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டே இருப்பீர்கள். முக்கியமான ஆவணங்கள் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள்அல்லது வைத்த இடம் மறந்து போகும் அல்லது ஆவணங்களில்திருத்தம் செய்ய நேரும். ணிழிஜி பிரச்சனைக்காக சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். சிலர் புதிய செல்போன் வாங்குவீர்கள். ஒரு சிலர் செல்போன் ஸீமீtஷ்ஷீக்ஷீளீ ஐ மாற்றுவார்கள்.தற்காப்பு கலை, வீர விளையாட்டு வீரர்கள் ஏற்றம் பெறுவார்கள். பெயர், புகழ் வெளிஉலகத்தில் பரவும்.திடீர் பெயர், புகழலால் ஆழ்மனதில் இனம் புரியாத பயம் கலந்த இன்பம் உங்களை வழி நடத்தும். கண்திருஷ்டி அதிகரிக்கும்.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 7ம்இடத்திற்கு பதிவதால் ஏழாமிடம் புனிதமடையும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறு ஊர்களில் பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுதுஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும். கூட்டுத் தொழில் சிறப்படையும். தொழில் கூட்டாளிகளிடம்இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும். வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதியதொழில் கூட்டாளிகள் கிடைப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம், உதவிகிடைக்கும். நண்பர்களுடன்விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
7ம் பார்வை பலன்கள்:குருவின் 7ம் பார்வை 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. கவுரவப்பதவிகள் தேடி வரும்.பதவி இழந்த பலருக்கு மீண்டும் பதவி கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கியவர்கருக்கு கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். பல வயதான மகர ராசியினருக்கு தாத்தா பாட்டியாகும் யோகம் கிட்டும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழ்வார்கள். ஆன்மீக நாட்டம் மிகுதியாகும்.சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் முன்னோர்கள் நடத்தி வந்த பரம்பரை பூஜை புண்ணிய காரியங்களைதொடர்வீர்கள்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு பதிகிறது.இதனால் பெரும்வாழ்வியல் மாற்றம் ஏற்படப் போகிறது. வாழ்வில் வெற்றி பெற்று வாழ்வை வளம் பெறச் செய்யும் சூட்சமத்தை கற்பீர்கள். தொட்டது துலங்கும். தொழிலின் அனைத்து யுக்திகளையும் கடைபிடித்து ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி சூடுபடிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு தொழிலைவிரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும். மருத்துவம், உணவு சார்ந்ததொழில்.ஆடை அணிகலன்கள் , அழகுப்பொருட்கள் போன்ற துறையில் உள்ளவர்களுக்கு தொழில் வளர்ச்சி பெறுவர்.
கலைத் துறையினர் அதிக நற்பலன் அடைவர். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவி வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால்மொத்தமாக வந்து விடும். மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல்இருந்தவர்களுக்குவேலையில் சேர உத்தரவு வந்து விடும். குருப் பார்வை பட்ட இடம் பெருகும் என்பதால் எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் மிகக் குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும்.உங்களின் அனைத்து தேவைகளையும்பட்டியலிட்டு ஒவ்வொன்றாக நிறைவு செய்யப் போகிறீர்கள். ஆயுள் ஆரோக்யம் அதிகரிக்கும்.
வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கோர்ட், கேஸ், வக்கீல் என்று அழைந்து விரக்தி அடைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாகும். நிதி நிறுவனங்கள் வீட்டிற்கு தேடி வந்து கடன் கொடுப்பார்கள். அரசுவழி ஆதாயம் உண்டாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணம் உங்களைத் தேடி வரும். அடமான நகைகள், சொத்துக்கள் மீட்கப்படும். பாலிசி முதிர்வு தொகை, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, பங்கு சந்தை முதலீடு என எதிர்பாராத பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். மூத்த சசோதர வழி ஆதாயம் ஏற்படும். முன்னோர்கள் சொத்தைபிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள்மறைந்துசொத்துக்கள் உங்களுக்கு சாதமாக பிரிக்கப்படும்.
குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் கேது உள்ளது. சனி பார்வையும் 10ம் இடத்திற்கு உள்ளதால் தொழில் முன்னேற்றத்திற்கு கடுமையாக உழைக்க நேரும். 4ல் ராகு உள்ளதால் வேலையாட்கள் பிரச்சனை உருவாகும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும்எண்ணம் உருவாகும். பெண்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வீண் பழி உருவாகும். மறைமுக எதிரி தாக்கம் உருவாகும். உங்களின் இயல்பானபணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த இயலாது.
பெண்கள்:மனதில் மகிழ்ச்சியானஎண்ணங்கள் தோன்றும். முயற்சிகள் விரைவில் பலிதமாகும். தன வரவு திருப்தி தரும். பொருளாதார வளர்ச்சிசீராக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.புதிய அணிகலன்கள் ,அழகு,ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள். மூத்தசகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுமறைந்து தடைபட்ட பாகப்பிரிவினைசொத்து, பணம் வரும்.
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு செய்வது நல்லது. வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜைநடக்க உதவுதல், ஆதரவற்ற பிணங்களின் தகனத்திற்கு உதவுதல் ஆகிய மூன்றும்அசுவமேத யாகம் செய்த தற்குச் சமம்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
நான்கில் ராகு/ பத்தில் கேது
காரியவாதியான மகர ராசியினரே ராசிக்கு 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் பயணிக்கிறார்கள். குருபகவான் 3, 4--ம் இடத்திலும், சனி பகவான் ராசி மற்றும் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள்.
நான்காமிட ராகுவின் பொது பலன்கள்:நான்காமிடம் என்பது சுக ஸ்தானம். அசையும், அசை யாச் சொத்துக்கள் பற்றிக் கூறுமிடம். ராசி அதிபதி சனிக்கு ராகு/கேதுக்கள் பகை கிரகங்கள். பொதுவாக ராகு பேராசையை மிகைப்படுத்தும் கிரகம் என்பதால் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும்.
கலை நிகழ்ச்சிகள், சினிமா, நாடகம், அழகு, ஆடம்பரம் போகம் என மனம் லௌகீக இன்பங்களை சுற்றிவரும். தாயின் ஆரோக்கியக் குறை பாட்டில் இருந்த கவலைகள் அகலும். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். தாய் வழி உறவி னர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வந்து சேரும்.
பூமி தொடர்பான ரியல் எஸ்டேட் தொழிலில் இருப் பவர்களுக்கு மிக ஏற்றமான நேரம். சொந்த வீடு இல்லா தவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம்.வெகு சிலருக்கு அடமானத்திலிருக்கும் சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புதிய சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின்ஆதரவு கிடைக்கும். சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள்.
ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்: கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் மகரத்திற்கு அஷ்டமாதிபதி. ராசி அதிபதி சனிக்கு சூரியன் பகை. சனி, சூரியனுக்கு ராகு/கேது பகை. ஜனன கால தசாபுத்தி சாதகமாக இருந்தாலும் ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுப பலன் ஏற்படும் வாய்ப்பு குறைவு. வெகு சிலருக்கு எட்டாம் பாவக பலன்களான அவமானம், கடனால் கவலை, கணவன் மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும். உயிருக்கு ஆபத்தை தரும் நோய்களுக்கு சிகிச்சை செய்பவர்களுக்கு நோயிலிருந்து முழு நிவாரணம் கிடைக்கும்.
சிறை தண்டனையில் இருப்பவர்களுக்கு நன் நடத்தையால் தண்டனை காலம் குன்றக்கப்படும். ஆயுள் பலம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த கால கட்டத்தில் மகர ராசி பெண் பிள்ளைகளுக்கு திருமண முகூர்த்தம் வைப்பதை தவிர்க்கவும்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் மகரத்திற்கு 5,10ம் அதிபதி. அதிர்ஷ்டம் தொழில், பதவி ரூபத்தில் வந்து கதவைத் தட்டும் புதிய தொழில் சந்தர்ப்பம் தேடி வரும். மிகப் பெரிய புகழ் கிடைக்கும். பணம் புரளுமா? வங்கி கணக்கில் உபரி பணம் சேமிப்பாக இருக்குமா? என்பது சந்தேகம்.
கமிஷன் அடிப்படையிலான தொழில், கன்சல்டிங் நிறுவனங்களுக்கு தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். பணம் சம்பாதிக்காவிட்டால் கூட பரவாயில்லை. பணத்தை இழக்க கூடாது. சில ஆண்கள் மற்றும் பெண்கள் இது போன்ற காலகட்டத்தில் மன ஆறுதலுக்காக குடும்ப விஷயத்தை பிறருடன் பகிரக் கூடாது. பூர்வீக சொத்து தொடர்பான செயல்களை ஒத்தி வைக்கவும். சிலர் தொழில் உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். புத்திர பிராப்தம் உண்டாகும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 10ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலம். எந்த செயலாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து நிதானமாக செயல்பட வேண்டும். வேகத்தை விட விவேகம் முக்கியம். இந்த காலகட்டத்தில் சில படிப்பினைகளை ராகு/கேதுக்கள் வழங்குவார்கள். வட்டி தொழில், சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ், அடமானக் கடை , பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்கள் பணப் பரிவர்தனைக்கு முறையான ஆதாரம் வைத்து இருக்க வேண்டும். நெருங்கிய ரத்த பந்த உறவுகளுடன் தேவையற்ற கருத்துப் பரிமாற்றத்தை தவிர்க்கவும்.
10மிட கேதுவின் பலன்கள்:10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட பழமொழி. சுமாராக இருந்த தொழில் கூட சூப்பர் தொழிலாகும். இழுத்து மூடி விட்டுப் போகும் நிலையில் உள்ள தொழில் கூட முன்னேற்றமடையும். கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும். சுய தொழில் செய்கிறவர்களுக்கு தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும். தொழில் நீதியாக பிரபலங்களின் ஆதரவு, உதவி கிடைக்கும். தொட்டது துலங்கும்.
வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிப்பீர்கள். ஆனால் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையால் கடன் அதிகரிக்கும். 10ல் கேது இருப்பதால் இந்த ஒன்றரை வருடமும் கடன் எந்த ரூபத்தில வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம். 4ல் ராகு இருப்பதால் சிலர் கடன் பட்டு சொத்து வாங்கலாம் அல்லது சுப செலவிற்காக கடன் படலாம். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பிறருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும்.
பொதுவாக ஜனன கால ஜாதகத்தில் 10ல் கேது இருப்பவர்கள் பல தொழில் வித்தகராக இருப்பார்கள். மிகுதியான தொழில் ஞானம் உண்டு. ஆனால் தொழில் கடனால் வாழ்நாள் அவஸ்தை உண்டு. கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மகரத்திற்கு 3,12ம் அதிபதி. சிலர் வெளியூர், வெளிநாடு என வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரலாம். சில அரசு ஊழியர்கள் பதவி உயர்வு என்ற பெயரில் பிடித்தம் இல்லாத ஊருக்கு சென்று கடமையாற்றும் சூழல் உண்டாகும். ஞாபக சக்தி குறையும்.
வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகாது என்பதால் வழக்குகளை ஒத்திப் போட வேண்டும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் பண மோசடி மிகுதியாக இருக்கும். கோட்சார குரு 3, 4ம் இடங்களில் சஞ்சரிப்பதால் பண வரவு பல வழிகளில் பன் மடங்காக அதிகரிக்கும். இழப்பும் மிகுதியாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமாக செயல்பட வேண்டும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:கோட்சாரத்தில் ராசிக்கு 4ல் பயணிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கோட்சார கேது சஞ்சரிக்கும் காலம்.சிறு, சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். உடல் உறுப்பில் இடது காது, கணுக்கால், பின் முதுகில் அவ்வப்போது வலி தோன்றலாம். முறையான உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, யோகாவுடன் தகுந்த மருத்துவர்களின் ஆலோசனையும் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும். சிலர் சட்டச் சிக்கல் நிறைந்த சொத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். சிலர் அரசுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு அரசுக்கு அபராதம் கட்டும் சூழல் ஏற்படலாம். அரசு அதிகாரிகளால் சிறு பிரச்சனை ஏற்படலாம்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மகரத்திற்கு 4,11-ம் அதிபதி. இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.விவசாயிகள் பன்படுத்த முடியாத தங்களின் விளை நிலங்களை குத்தகைக்கு விட்டு வருமானம் பெறலாம். கால்நடை மற்றும் உயிரினம் வளர்பவர்களுக்கு ஆதாயம் மிகும்.விவசாயிகள் கிணறு வெட்டலாம். பம்பு செட் போடலாம். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் தீய நண்பர்களின் சேர்க்கையிலிருந்து விடுபடலாம்.
ராகு/கேது, குருவின் சஞ்சாரம் மற்றும் சற்று சுமாராக இருந்தாலும் ராசி அதிபதி சனியின் ஆதிக்கம் வலுவாக இருப்பதால் உங்களை யாரும் அசைக்க முடியாது என்பதால் நிம்மதியாக இருக்கலாம்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406