
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
இந்த வாரம் எப்படி 23-5-2022 முதல் 29-5-2022 வரை
5-ம் அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் சேர்க்கை பெற்றதால் நெடுங்கா லமாக தடைபட்ட புத்திர பிராப்தம் கிட்டும். 6-ம் அதிபதி செவ்வாய் 10-ம் அதிபதி குருவுடன் இணைவதால் அஷ்டமச் சனியால் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்.
அஷ்டமச் சனி முடியவில்லை என்பதால் கடன் விசயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். ராசி அதிபதி புதன் விரயத்தில் மறைந்து வக்ரம் பெற்றதால் வீண் அலைச்சல்கள், விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு உயில் அல்லது முக்கிய ஆவணங்களை வைத்த இடம் மறந்து போகும்.
சிலர் தொலைந்த பத்திரங்களுக்கு புதிய நகல் உருவாக்குவார்கள். பெண்களின் முயற்சிக்கு மாமியாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். 9-ல் சனி ஆட்சி பலம் பெற்று இருப்பதால் அமாவாசையன்று முன்னோர்களை வழிபட முத்தாய்ப்பான மாற்றங்கள் உண்டு.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் மிதுன ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் ராகுவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். எனவே தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அஷ்டமத்துச் சனி ஆதிக்கம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியான செவ்வாய், 10-ல் சஞ்சரிக்கும் பொழுது தொழில் பிரச்சினை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். நிம்மதி குறையும். வாய்தாக்கள், வழக்குகள் வந்த வண்ணம் இருக்கும். மனக்குழப்பம் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை அதிகரிக்கும். சுயதொழில் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப்போகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. அஷ்டமத்துச் சனி ஆதிக்கம் மற்றும் சனி -செவ்வாய் பார்வை ஏற்படுவதால் விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படலாம். குருவோடு செவ்வாய் இணைந்து ‘குருமங்கள யோக’த்தை உருவாக்குவதால் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறக்கூடும்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மருத்துவச் செலவு குறையும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தனவரவு திருப்தி தரும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இந்த நேரத்தில் சுபவிரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் தேடிவரும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். விரயாதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வரும்போது, விரயத்திற்கேற்ற வருமானம் வந்துசேரும். இருப்பினும் வீண் விரயம் அதிகரிக்கும். பாகப்பிரிவினை சுமுகமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
மகரச் சனியின் வக்ர காலம்
உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான், வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். வருமானம் இருந்தாலும் செலவு இரட்டிப்பாகும். பெற்றோர் வழி உறவில் விரிசல் ஏற்படலாம். பூர்வீக சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி தடைப்படும். எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது.
இம்மாதம் புதன்கிழமை தோறும் விரதமிருந்து விஷ்ணு மற்றும் லட்சுமியை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 23, 24, 27, 28, ஜூன்: 3, 4, 8, 9, 10மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கமும், 10-ம் இடத்து குருவின் ஆதிக்கமும் உள்ளதால் பதவி மாற்றம் வரலாம். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். நீண்ட நாள் நோய் அகன்றாலும், உடல்நலனில் சில கோளாறுகள் வரத்தான் செய்யும். பொருளாதாரப் பற்றாக்குறை உண்டு. பணி புரியும் பெண்களுக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் உண்டாகலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி செலவிடுவீர்கள். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகமும், ஒரு சிலருக்கு வாய்க்கும்.
ஆண்டு பலன் - 2022
மிருகசீரிஷம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
புத்திக்கூர்மையான மிதுன ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்துக்கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டில் குரு மற்றும் ராகு/கேதுவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. இந்த புத்தாண்டு உங்கள் மனதிலிருக்கும் இனம் புரியாத பயத்தை அகற்றி தெளிவையும் துணிவையும் வழங்கும்.
குடும்பத்தில் நிலவிய சங்கடங்கள் அகலும். அஷ்டமச் சனியால் சிறுசிறு இன்னல்கள் சங்கடங்கள் நிலவினாலும் தன்னம்பிக்கையும் பரிபூரண சிந்தனையும் உங்களை வெற்றியாளராக்கிவிடும். கடமைக்காக சமுதாயத்திற்காக வாழ்ந்து வரும் நிலை முற்றிலும் மாறப் போகிறது. உங்களுடைய முயற்சிகளில் சிறு தடை, தாமதங்கள் நிலவினாலும் முடிவில் வெற்றி உங்களுக்கே என்பதால் மனம் தளராது செயல்படுவது அவசியம். உங்கள் திறமையை முழுமையாக பயன்படுத்தினால் இந்தப் புத்தாண்டின் எல்லா நாளும் சுபமாக அமையும். இனி இந்த ஆண்டிற்கான பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.
குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் ஏப்ரல் 13, 2022 வரை குருபகவான் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் ராசி மற்றும் 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்ட தேவதை அரவணைப்பு கிடைக்கும். தடைபட்ட அதிர்ஷ்டம் துளிர் விடும்.பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் குறையும். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு என பிள்ளைகளைப் பற்றிய அனைத்து மனக்குறையும் தீரும். தவறான நட்பிலிருந்த பிள்ளைகள் மனம் மாறி குல கௌரவத்தை காப்பார்கள்.
புத்திர பாக்கியம் கிடைக்கும். பல வருடங்களாக தீராத முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் அகலும். பூர்வீக சொத்துகள் தொடர்பாக நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். பாகப் பிரிவினைகள் மத்தியஸ்தர்கள் மூலம் பேசப்பட்டு சுமூகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதிலிருந்த தடைகள் அகலும். குல, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை பூர்த்தி செய்ய ஏற்ற காலம். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான தொழில் வளர்ச்சி ஏற்படும். உங்களது திறமையை வெளி உலகத்திற்கு காட்ட புதிய, புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
ஏப்ரல் 13, 2022க்கு பிறகு 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறும் குருபகவான் அஷ்டமச் சனியையும் மீறி தொழில், உத்தியோக ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவார். வியாபாரத்தை முறையாக திட்டமிட்டு முழுமையாக செயல்படுத்துவீர்கள். அஷ்டமச் சனி முடியும் வரை புதிய தொழில் முதலீட்டை தவிர்க்கவும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தொழில் கூட்டாளிகள் மற்றும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்பு இருந்ததை விட வருமானம் சற்று உயர்வாகவே இருக்கும். தொழில் உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் மாறும். செய்யும் தொழிலே தெய்வம் எனும் சிந்தனை மேலோங்கும். சிலருக்கு தொழில், உத்தியோக நிமித்தமாக வெளியூர், வெளிநாட்டுப் பயணம் செய்ய நேரும். வியாபாரமே செய்ய முடியாத அளவுக்கு கடன் பிரச்சனை, வேலை ஆட்கள் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை என பல குழப்பத்தில் இருந்தவர்களுக்கு தொழிலில் மீண்டும் எழுந்து நிற்கும் படியான மாற்றங்கள் உருவாகும்.
சனியின் சஞ்சார பலன்கள்: 2022 முழுவதும் சனிபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அஷ்டமாதிபதி சனி சனி ஆட்சி பலம் பெறுகிறார். மேலும் அவரே பாக்கியாதி என்பதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. குருவின் சஞ்சாரம் சற்று சாதகமாக இருப்பதால் அஷ்டமச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும்.
26.2.2022 முதல் 6.4.2022 வரை சனி பகவானும் 6, 11ம் அதிபதியான செவ்வாய் இணைகிறார்கள். தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக சிலர் வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு பஞ்சாயத்து நீதி மன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். தவறான நட்பு வலையில் மாட்டலாம்.களத்திரம், நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் பிரச்சனை வரும்.
நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும். நம்பிக்கை வைத்த நண்பரே துரோகியாகலாம். பழைய கூட்டாளி விலகலாம். புதிய கூட்டாளி சேரலாம். வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் நிலவும். சிலர் தொழில் உத்தியோகத்திற்காக வெளிநாட்டு குடியுரிமை பெறலாம். சிலர் வெளிநாட்டு வேலையை விட்டு சொந்த தொழில் செய்கிறேன் என விரயத்தை உண்டு பண்ணலாம். சிலர் மன நிம்மதிக்காக ஆன்மீக இயக்கங்கள் அல்லது சங்கங்களுக்கு தங்கள் சேவையை அர்ப்பணிக்கலாம். சிலர் துக்கம் மிகுதியால் தலைமறைவாக வாழலாம்.
ராகு/கேது பெயர்ச்சி: ஏப்ரல் 12ம் தேதி வரை 12ல் ராகுவும் 6ல் கேதுவும் இருக்கிறார்கள். 12ம் இடம் என்பது அயன, சயன, போக, விரய ஸ்தானம் மற்றும் வெளிநாட்டு பயணத்தை குறிக்கும். ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப்படுத்துவார். கேது தான் நின்ற பாவக பலனை சுருக்கம் தன்மை கொண்டவர். மிதுன ராசிக்கு பனிரென்டாம் இட பலன்களான விரயத்தை ராகு மிகுதிப்படுத்துவார். இன்றைக்கு சம்பாதித்த பணத்தை இன்றே செலவு செய்தால் மட்டுமே நாளைக்கு சம்பாதிக்கும் ஆசை வரும் என்ற கதையாக வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.
குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். வயது முதிர்ந்தவர்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.
ஏப்ரல் 12ல் 11ம் இடமான லாபஸ்தானத்திற்கு ராகுவும் 5ம் இடத்திற்கு கேதுவும் செல்கிறார்கள். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆயுள் ஆரோக்யம் அதிகரிக்கும். வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு கடன் தொகை தள்ளுபடியாகும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த சட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கோர்ட், கேஸ், வக்கீல் என்று அலைந்து விரக்தி அடைந்தவர்களுக்கும் வழக்கு சாதகமாகும். இதுவரை வெளிநாட்டு வேலைக்காக பல முறை முயன்றவர்களின் வெளிநாட்டு கனவு நிறைவேறும்.
திருமணம்: அஷ்டமத்துச் சனியின் தாக்கத்தால் தான் திருமணம் தடைபட்டுக் கொண்டு இருக்கிறது. மேலும் சனி ராசி அதிபதி புதனுக்கு நட்பு கிரகம் என்பதால் தன் பயணப்பாதையில் சுக்கிரன், புதன் இருந்து தசா புத்தி சாதகமாக இருந்தால் திருமணத்தை நடத்தித் தருவார். இந்த நவம்பர் 2021ல் கும்பத்திற்கு மாறிய குரு ராசி, மூன்று, ஐந்தாம் இடத்தைப் பார்ப்பதால் ஜனன ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதகத்தை ஒப்பிடாமல் திருமணம் செய்யக் கூடாது.
பெண்கள்: கணவனின் அன்பு, அனுசரனைக்காக ஏங்கிய பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இதுவரை புரிந்து கொள்ளாத உங்களின் கணவர் உங்களை புரிந்து கொண்டு உங்கள் மனதிற்கேற்ற மணாளனாக மாறுவார். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மாமியாரால் புகழப்படுவீர்கள். தடைபட்ட திருமணம் நடக்கும். பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். பொருளாதார முன்னேற்றம் மகிழ்சியை தரும். கணவர் மற்றும் அவர் வழி உறவினர்களால் பொருள் வரவு ஏற்படும்.
விவசாயிகள்: இந்த ஆண்டுக்குள் மிதுன ராசி விவசாயிகள் கடன் பிரச்சனையில் இருந்து மீண்டு விடுவீர்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. குறுகிய கால பயிர்கள் நல்ல மகசூல் பெற்றும் தரும். நிலத்தகராறு, வாய்க்கால் வரப்பு தகராறு போன்ற பிரச்சனைக்கு சட்ட உதவியை நாடாமல் மத்தியஸ்தர் மூலம் தீர்ப்பது நலம். சரியான வேலையாட்கள் கிடைக்காமல் வேலைப்பளு மிகுதியாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகஸ்தர்களுக்கு மிகுதியான பொறுப்புகள் வழங்கப்படும். சிறு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களது கடமைக்களை சிறப்பாக நிறைவேற்றி புகழ் அடைவீர்கள். மன திருப்தி கிடைக்கும். மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்/வியாபாரிகள்: ஏப்ரல் 12 வரை ராகு விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சிறிய முதலீட்டில் பெரிய லாபத்தை தந்து பேராசையை உருவாக்கி பெரிய முதலீட்டில் மாட்டிவிட்டு தேவையில்லாத பெரும் விரயத்தை தேடித் தருவார். புதிய ஒப்பந்தங்களில் மிகுந்த கவனம் தேவை. விசுவாசமான வேலையாட்கள் உங்களை விட்டு விலகிப் போவார்கள். நம்பகமான வேலையாட்கள் இன்மை உங்களுக்கு நிம்மதியின்மையை தரும்.அஷ்டமச் சனி முடியும் வரை அகலக்கால் வைக்காமல் இருப்பது நல்லது. அலைச்சல் மிகுந்த பயணங்கள் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும்.
அரசியல்வாதிகள்: அரசியல்வாதிகள் கவனமாக திட்டமிட்டு காய் நகர்த்த வேண்டிய காலம். வாக்கு ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு சனிப் பார்வை இருப்பதால் நிறைவேற்ற முடியாத ஒரு வாக்கை கொடுக்க வைத்து அஷ்டமச் சனியால் வம்பு வழக்கை விட்டு வாசலில் நிறுத்துவார். உங்களின் வாக்கே உங்களை கட்டம் கட்டி நிற்க வைக்கும் என்பதால் வாக்கில் நிதானம் தேவை. கொள்கை கோட்பாடுடன் தூய்மையாக செயல்பட்டால் நிலைக்கலாம். நீடிக்கலாம்.
மாணவர்கள்: வேற்று மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். நன்றாக படித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.எனினும் சிறிய உடல் உபாதைகளால் ஏற்பட்டு அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்களாம்.
மிருகசீரிஷம் 3,4ம் பாதம்: உங்கள் எண்ணங்கள், லட்சியங்கள், ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற கடுமையாக உழைக்க நேரும். நிலையான தொழில், நிரந்தரமான உத்தியோகம் கிடைக்கும். செவ்வாய் கிழமை முருகனை சிவப்பு மலர் சாற்றி வழிபடவும்.
திருவாதிரை: தேவையற்ற பணவிரயம் தம்பதிகளிடையே கருத்து வேற்றுமையை மிகைப்படுத்தும். எளிதாக பணம் கிடைக்க குறுக்கு வழியில் இறங்ககூடாது. திருவாதிரை நட்சத்திர நாளில் நடராஜரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: 9,10 பகவானால் வேலை பளு, வேலை நேரம் அதிகமாகும். பணப்புழக்கம் அதிகமான இடங்களில் வேலை கிடைக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றுதல் நன்று.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விளம்பி வருட பலன்
திட்டம் தீட்டுவதில் வல்லவர்களான மிதுன ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டு காரிய சித்தி வழங்க நல் வாழ்த்துக்கள்.
உங்கள் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். 5ம் இடத்தில் கேது பகவான் சஞ்சாரம் செய்கிறார்.குருபகவான் 10ம் இடத்தில் நிற்கிறார். சனி பகவான் 8.9 ம் இடங்களில் உலா வரப்போகிறார். இந்த சுப கிருத வருடத்தில் உங்களின் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பிறருக்கு உதவி செய்து உங்கள் பாக்கிய பலனை அதிகரித்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண் பலிகள் அகலும். அஷ்டமச் சனியாலும் விரய ராகுவாலும் ஏற்பட்ட சங்கடங்கள் அகலும்.
துணிந்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இறை வழிபாட்டின் மூலம் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்வீர்கள்.உங்கள் முயற்சியல் சிறு தடை, தாமதம் நிலவினாலும் முடிவில் பெற்றி உங்களுக்கே உண்டாகும்.பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் கன்சல்டிங் நிறுவனம் நடத்துபவர்களுக்கு கவ பொற்காலமாக அமையும். இந்த ஆண்டில் குரு மற்றும் ராகு/கேதுக்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. 17.1.2023க்குப் பிறகு அஷ்டமச் சனியிலிருந்து முழுமையாக விடுபடுவர்கள்.
குடும்பம்: இரண்டாமிடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்ப ஸ்தானம் பலம் பெறுகிறது. இந்த வருடம் குடும்ப உறவுகளுக்கு இனிய காலமாக அமையப் போகிறது. அஷ்டமச் சனியால் விலகிச் சென்ற உறவுகளை குருபகவான் மீட்டுத் தருவார்.
உறவுகள் பகை மறந்து ஒன்றாக இணைந்து செயல்படுவார்கள். உறவுகளிடம் கோள் மூட்டி வேடிக்கை பார்த்தவர்கள் விலகி ஓடுவார்கள்.உங்கள் வார்த்தைக்கு குடும்பம் கட்டுப்படும். குடும்ப முன்னேற்றத்திற்கான அனைத்து தேவைகளை நிறைவாகும். பிள்ளைகளால் மன நிறைவு, நிம்மதி கிடைக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும். பல வருடங்களாக தீராத முன்னோர்களின் பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் அகலும். பூர்வீக சொத்துகள் தொடர்பாக நிலுவையிலிருந்த வழக்குகள் சாதகமாகும். பாகப் பிரிவினைகள் மத்தியஸ்தர்கள் மூலம் பேசப்பட்டு சுமூகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதிலிருந்த தடைகள் அகலும். குடும்பத்துடன் குல, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
ஆரோக்கியம்:6ம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சிறு சிறு ஆரோக்கிய குறைபாடு வந்தாலும் உடனே சரியாகி விடும். போதிய ஓய்வு, நிறைந்த சந்தோஷம், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். டென்ஷன் குறையும். 8ம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் ஆயுள் தீர்க்கம். வண்டி வாகனங்களை இயக்கும் போது கவனமாக செயல்படவும்.
திருமணம்: ஜனன கால ஜாதக தசா புக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் 29.4.2022 முதல் 12.7.2022 வரை அதி சாரமாக கும்ப ராசிக்கு செல்லும் காலத்தில் திருமணம் நடைபெறும் சாத்தியக் கூறுகள் உள்ளன. மற்றவர்களுக்கு 2023 ஜனவரியில் சனிப் பெயர்ச்சிக்கு பிறகு திருமணம் நடக்கும்.
பெண்கள்: பிறந்த வீட்டாரும், புகுந்த வீட்டாரும் போட்டி போட்டு கவனிப்பார்கள்.குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். கணவரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்ப உறவுகளிடையே சந்தோஷம் நிலைக்கும். 8ல் கோட்சார சனி இருப்பதால் மாங்கல்யத்தை அடிக்கடி கழட்ட கூடாது. புதிய செயின் மாற்ற விரும்புபவர்கள் 17.1.2023க்கு பிறகு மாற்றலாம்.
மாணவர்கள்: ராசிநாதன் புதன் என்பதால் இயல்பாகவே சிறப்பாக படிக்கும் மிதுன ராசி மாணவர்களுக்கு கல்வி முன்னோற்றம் சிறப்பாக இருக்கும். 4ம் இடமான கல்வி ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் தேர்வில் நீங்கள் எதிர்பார்த்ததை விட பிரமாண்ட வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பும் கல்லுரிக்கு உயர் கல்வி வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்: 10ல் குரு வருவதால் பதவி பறி போகுமோ என்ற பயம் தேவையில்லை. 10ம் அதிபதியாகிய குரு 10ல் ஆட்சி பலம் பெறுவது சிறப்பு. குருவிற்கு சனி பார்வையும் கிடைப்பதால் தர்மகர்மாதிபதி யோகத்தால் உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் சீராகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி. செய்பவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்:10ம் அதிபதி குரு 10ல் ஆட்சி பலம் பெறுவதால் உங்கள் சிந்தனை முழுவதும் தொழில் பற்றியே இருக்கும்.இதுவரை ஒரு தொழிலில் செய்தவர்களுக்கு இரண்டு தொழில் செய்யும் எண்ணம் வரும். லாப ஸ்தான ராகுவால் தொழிலில் நிலவிய மந்த நிலை மாறி லாபம் உண்டாகும். சிலருக்கு தொழில் விரிவாக்க சிந்தனை தோன்றும். வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
அரசியல்வாதிகள்:10ல் குரு ஆட்சி பலம் பெற்றதால் பெயர், புகழ் உயரக்கூடிய காலம். மக்கள் சேவையே மகேசன் சேவை என பல மிது ராசியினருக்கு அரசியல் ஆர்வம் அதிகரித்து அரசியல் களத்தில் இருங்குவார்கள். கட்சிக்காக அலைச்சல் மிகுந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். 14.6.2022க்குப் பிறகு புதிய மாற்றங்கள் உருவாகும். கலைஞர்கள்:கலைத்துறையினருக்கு அற்புதமான நல்ல காலம். பல புதிய நல்ல வாய்ப்புகள் தேடிவரும்.15.6.2022 முதல் 20 .2.2023 வரை புதிய படப்பிற்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பெயர், புகழ், செல்வாக்கு கொடி கட்டி பறக்கும்.
விவசாயிகள்:விவசாயிகளுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அஷ்டமச் சனி மற்றும் கொரோனா கால இழப்புகளை ஈடு செய்ய முடியும். ராகு 11ம் இடத்தை கடக்கும் முன்பு உங்கள் கடனை அடைத்து விடுவார்.பயிர் கடன்கள் முற்றிலும்அடைபடும்.
ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 11,5ம் இடத்தில் கோட்சார ராகு| கேதுக்கள் சஞ்சரிப்பதால் தவறான எண்ண அலைகளால் மனக் குழப்பம் ஏற்படும். தார்மீக உணர்வோடு உழைத்து முன்னேறியவர்களுக்கு சிறிய பேராசை துளிர் விடும்.குறுக்கு வழியில் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக மாற்ற முயற்சித்து சட்டத்தின் பிடியில் திக்கலாம். சிலருக்கு சட்டத்திற்கு எதிரான இரண்டாம் திருமணம் நடக்கும். செயற்கை கருத்தரிப்பு முறை தோல்வியில் முடியும். உடன் பிறந்த மூத்த சகோதர, சகோதரிகளிடம் மனக்கசப்பு உண்டாகும். பிள்ளைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்.
குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரைராரிக்கு 8ல் சஞ்சரிக்கும் கோட்சார சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். எதிர்பார்பார்ப்புகளில் தடை தாமதம் உண்டாகும். தொழில் ஒப்பந்தங்கள் கை மாறிப் போகலாம். வழக்குகள் இழுபறியாகும்.
பரிகாரம்:புதன்கிழமை காலை 6 --7 மணி வரையான புதன் ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.
சொகுசு வாழ்க்கை
தன வரவில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இல்லை என்ற நிலை இல்லை. முன்பு இருந்ததை விட வருமான உயர்வு அதிகமாகவே இருக்கும்.வட்டிக்கு வட்டி கட்டிய கடன் பிரச்சனைகள் குறையும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு.4ம் இடமான சுக ஸ்தானத்திற்கு குருப் பார்வை பதிவதால் சொகுசு வாழ்க்கை வாழப் போகிறீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், ஆபரணங்கள் வாங்கவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
அஷ்டமத்தில் வருகிறது சனி, அமைதிதான் தேவை இனி!
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 8-ம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் உங்களுக்கு தொடங்கி விட்டது. உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. ஆயுள் ஸ்தானம், பிதுர்ரார்ஜித ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி, தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிப்பதால் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு இப்பொழுது சனி சேர்வதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, 8-ம் இடம் சனிக்கு ஆட்சி வீடாகவும், சொந்த வீடாகவும் இருக்கின்றது. எனவே விரயங்கள் ஏற்பட்டாலும், சுப விரயங்களே அதிகரிக்கும். இடமாற்றங்கள், ஊர்மாற்றங்கள், தொழில் மாற்றங்கள் இயற்கையாகவே வந்து சேரும். கடனில் ஒரு பகுதியை கொடுத்தாலும் மீண்டும் கடன் வாங்கும் அமைப்பு உருவாகும்.
அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு வரும் சனி பகவானால், எண்ணற்ற மாற்றங்கள் வந்து சேரப்போகின்றது. குறிப்பாக ஆரோக்கியத்தில் அடிக்கடி சீர்கேடுகள் வரலாம். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். மனநிம்மதி கொஞ்சம் குறைவாகவே இருக்கும். உத்தியோக மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் மனதிற்கு ஏற்ற விதம் அமையாது. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிப் போகலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். வாகனங்களாலும் தொல்லை ஏற்படும். இதை ஒரு சோதனைக் காலமாகக் கூடக் கருதலாம். இருந்தாலும் சுய ஜாதகத்தில் தெசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு, பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனிக்கிழமை தோறும் விரதமிருந்து வழிபடுவதன் மூலம் நல்ல பலன்களை வரவழைத்துக் கொள்ளலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 5, 10 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், புத்திரப்பேறு, தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களில் அதன் பார்வை பதிவதால் அவற்றில் எல்லாம் மாற்றங்கள் வந்து சேரும். குறிப்பாக 2-ம் இடத்தில் சனியின் பார்வை பதிவதால், குடும்பத்தில் பிணக்குகள் அதிகரிக்கும்.
சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் பதிவதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. அவர்களாக சுய முடிவடுத்து ஏதேனும் காரியங்கள் செய்வதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்க நேரிடும். சனியின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் தொழிலில் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். பழைய தொழிலில் அக்கறை செலுத்த இயலாத சூழ்நிலை உருவாகும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதரர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகலாம். இதுவரை உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருந்த உடன்பிறப்புகள் விலகக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு தனாதிபதியாக விளங்குவதால் தொழில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் வந்துசேரும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, துரித கதியில் முன்னேற்றங்கள் ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு, இடம், வாங்கும் யோகம் உண்டு. இடையில் கும்ப ராசியிலும் சனி சஞ்சரிக்கின்றார். அங்ஙனம் சஞ்சரிக்கும்பொழுது அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் மாறுகின்றது. எனவே இல்லம் தேடி இனிய பலன்கள் வரப்போகின்றது. அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பு கிடைக்கப் போகின்றது.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப் பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைக் குரு பார்ப்பதால் தடைகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். உயர்ந்த நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கூடிவரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் மாற்றங் கள் உருவாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விரும்பத்தகாத இடத்திற்கு இடமாற்றங்கள் வந்து சேரலாம். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சி காலம்
21.3.2020-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அப்பொழுது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால், வியாபார விருத்தி ஏற்படும். இதுவரை ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். 8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இதனால் தொழில் முன்னேற்றம் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் விஷ்ணு படம் வைத்து விஷ்ணு கவசம் பாடி வழிபட்டால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
மிதுன ராசிக்கு குரு பகவான் 7,10 அதிபதி. இதுவரை உங்கள் ராசிக்கு 9ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு செல்கிறார். 10ம் இட குரு கேந்திராதிபத்திய தோஷத்தை தருவரா? 10ம் இட குரு பதவியை பறிப்பாரா? என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டாகும். உங்களின் 10ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு 17.1.2023 வரை சனிப் பார்வை இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷம் செயல்படாது.
தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழிநடத்தப் போகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் பல விதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று வாழ முதல்தரமான யோகமாக கூறப்பட்டுள்ளது தர்ம கர்மாதிபதி யோகம். அதாவது குரு மற்றும் சனி சம்பந்தம் தர்மகர்மாதிபதி யோகமாகும். அதாவது உங்களின் 9ம் அதிபதி சனிக்கும் 10ம் அதிபதி குருவிற்கும் கோட்சார ரீதியான சம்பந்தம் ஏற்படுவதால் முன்னோர்களின் பூர்வ புண்ணியம் உங்களைக் காப்பாற்றும் காலம். 10ல்குரு வரும் போது பதவி பறி போகும் என்பது ஜோதிட விதி. அது உண்மை தான். ஆனால் 10 அதிபதி குருவிற்கு சனி பார்வை இருப்பதால் இந்த குருப்பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு பெரும் வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. 10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 10ம் இடத்திற்குச் சனி, குரு சம்பந்தம் இருப்பதால் பதவி பறிபோகாது.
தொழில் ஸ்தானத்தைப் பார்க்கும் சனி தொழில் ஞானத்தை உங்களுக்கு வழங்குவார், வியாபாரத்தை எப்படி நடத்துவது, எப்படி. தக்க வைத்து கொள்ள வேண்டும். கிடைத்த பதவியை எப்படி பொக்கிஷம் போல் காக்க வேண்டும் என்பதை அனுபவ ரீதியாக புரிய வைப்பார். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் வாங்கிய கடன் தொகையையும் வட்டியுடன் திருப்பி செலுத்து காலம். கடன்காரன் எவனாது போன் பண்ணி திட்டுவானோ என்று போனை எடுக்க பயந்தவர்கள் எல்லாம் கெத்தாக போனை எடுத்து பேசுவீர்கள். காசோலை தொடர்பான வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். கடன் சுமையை குறைக்க அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். இந்த காலகட்டத்தி இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 2ம்மிடமானதன ஸ்தானத்தில் பதிகிறது. இதனால் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் வலிமை பெறுகிறது. தனவரவு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். பொருளாதார நிலையில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். உங்களின் தொழில், குடும்ப சொத்து, வராகடன் வசூல் என பல்வேறு வழிகளில் பணம் வந்து குவியும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை கட்டுப்படுத்த முடியும். உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு.
அதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்திலிருந்த பல விதமான குறைபாடுகள் சீரடையும். தங்களின் பேச்சாற்றலால் உங்களின் காரியங்களை சாதிக்க முடியும்.
7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்திற்கு உள்ளது. தாய் வழி உறவினர்களிடம் சொத்து, கொடுக்கல் வாங்கல் தொடர்பான தொடர்பான சங்கடங்கள் மறையும். வீடு, வாகன யோகம் ஏற்படுவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டாலும் முயற்சிகள் வெற்றி தரும். கடன் பெற்றாவது சொந்த வீடு வாகன யோகத்தை அடைவீர்கள். முறையான ஆவணங்கள் உள்ள சட்டரீதியான சொத்து, வாஸ்து குற்றம் இல்லாத மனை உங்களுக்கு கிடைக்கும். நல்ல பொருளாதார விருத்தியை, மன நிம்மதியைக் தரக்கூடிய பூமியின் அதிர்வலை சிறப்பாக உள்ள வீடு, மனை அமையும். ஏற்கனவே சொந்த வீட்டில்குடியிருப்பவர்களுக்கு வீட்டை புதுப்பிப்பார்கள். அடமானத்திலிருக்கும் நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும். வீடு, வாகனம், மனை தொடர்பான சுபவிரையம் ஏற்படும் காலம்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு உள்ளதால் எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும்.
கண் திருஷ்டி தோஷம், செய்வினைக் கோளாறு அகலும். உத்தியோகத்தில் மாற்றம் உண்டாகும். சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விரும்பிய உத்தியோகம் கிடைக்கும்.என்ன நோய் என்றே தெரியாமல் குழப்பத்தில் இருந்தவர்களுக்கு நோயின் தன்மை புரியும். அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்த நோய் கூட அறுவை சிகிச்சையின்றி முற்றிலும் குணமடையும். மிதுன ராசியை சேர்ந்த மருத்துவர்களின் புகழ் கொடி கட்டி பறக்கும். அவர்கள் தொட்டாலே நோய் குணமாகும். கைராசி மருத்துவர் என்ற பெயர் கிடைக்கும். பலர் 6ம்மிடம் என்றால் பொருள் கடன் என்று நினைக்கிறார்கள். பிறவிக்கடன், பொருள் கடன் சேர்ந்தது தான் 6ம் பாவகம். குருவின் 9ம் பார்வைக்கு பாக்கிய பலன்களை அதிகரிக்கும்சக்தி உள்ளது. குருவின் 9ம் பார்வை 6ம் இடத்திற்கு இந்த கால கட்டத்தில் முன்னோர்களுக்கு முறையான பித்ருக்கள் பூஜை செய்து வழிபட பிறவிக்கடன் மற்றும் பொருள் கடன் தீரும்.
குருவின் வக்ர பலன்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை
குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் குல தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். ஒரு சில குடும்பங்களில் குல தெய்வ கோவிலில் யாருக்கு முதல் மரியாதை என்ற கருத்து வேறுபாடு ஏற்படும். ஒரு சிலருக்கு பூர்வீகத்தை விட்டு இடம் பெயற நேரும். பூர்வீகம் தொடர்பான அனைத்து செயல்களிலும் தடை தாமத்தை தருவார். மன சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கிறோம். தீர்க்கமான முடிவு செய்யும் திறன் குறையும். மன உளைச்சல் காரணமாக யாரைப் பார்த்தாலும் கோபம், டென்சன் மிகுதியாகும்.
பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகளும் தலை தூக்கும். முன்னோர் வழி சொத்துக்களை முறைப்படுத்துவதில் கருத்து வேறுபாடு மிகும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு பங்கு குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
புதிய முதலீடு செய்ய ஏற்ற காலம் அல்ல. மிகப் பெரிய தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தபலன் பொருந்தும். முதலீட்டை காப்பதில் கவனம் தேவை. 5ம் இடத்திற்குசனி பார்வை இருப்பதால்குழந்தை பாக்கியம் ஏற்பட கால தாமதம் ஏற்படும் என்பதால் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடுபவர்கள் சுயஜாதகத்தில் உங்களின் நேரம், காலம் அறிந்து செயல்படுதல் நலம். ஒரு சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதி வந்து மன சஞ்சலத்தை அதிகரிக்க செய்யும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
பெண்கள்: சுய தொழில் செய்யும் பெண்களுக்கு செல்வமும் புகழும் பெருகிவரும் யோகமான காலம்.பிள்ளைகளால் கிடைக்கும் பெருமையும் கணவரின் அன்பான ஆதவும் உங்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் தொடரும். விருந்துகளும் மனமகழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.இன்ப சுற்றுலா செல்வது வீட்டை அழகுபடுத்துவது போன்ற மன மகிழும் நிகழ்வுகளால் மனதும் உடலும் புத்துணர்வு பெறும்.
பரிகாரம்:வீட்டில் ஆஞ்சநேயர் படத்திற்கு துளசி சாற்றி வழிபடவும். புதன்கிழமை காலை 9&-10 மணி வரையான குரு ஓரையில் பிரம்மாவின் முன் உங்கள் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
பதினொன்றில் ராகு/ ஐந்தாமிட கேது
தன்னம்பிக்கை நிறைந்த மிதுன ராசியினரே ராகு/கேதுக்கள் 11, 5ம் இடத்திலும் குருபகவான் 10,11ம் இடத்திலும் சனி பகவான் 8.9 ம் இடங்களில் சஞ்சரிக்கிறார்கள்.
லாப ராகுவின் பலன்கள்: பொதுவாக 11ம் இடத்தில் நிற்கும் அனைத்து கிரகங்களும் நன்மையை மட்டுமே செய்யும் என்பது ஜோதிட விதி. அதுவும் கோட்சாரத்தில் அசுப கிரகங்கள் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சுப பலன்கள் இரட்டிப்பாகும். ஏனெனில் 11ம் இடம் என்பது உப ஜெய ஸ்தானம். 11ம் இடம் என்பது லாபஸ்தானம். எனவே திடீர் தனலாபத்தில் மிதப்பீர்கள். அந்தப் பணம் தொழில் மூலமாக கிடைக்குமா? பூர்வீகச் சொத்திலிருந்து கிடைக்கும் பங்கு பணமா அல்லது அதிர்ஷ்ட பணமா அல்லது பிள்ளை இல்லாச் சொத்தா? என்பது ஜனன கால ரீதியான தசா புக்தியைப் பொறுத்தது.
இதுவரை பொருளாதாரத்தில் மிகத் தாழ்வான நிலையில் இருந்தவர்கள் கூட சரளமான பணப்புழக்கம் இருக்கும். ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்க ராகு முடிவு செய்துவிட்டால் அதனை யாராலும் அணை போட்டு நிறுத்த முடியாது. அனைத்து கிரகப் பெயர்ச்சிகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மிதுன ராசியினரின் காட்டில் அடை மழை தான். சனி பகவான் மகரத்தை விட்டு நகரும் போது அஷ்டமச் சனியின் பாதிப்பு முழுமையாக குறைந்து பாக்கிய பலன்கள் துளிர் விடும். குருபகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறப்போகிறார். இவ்வாறு மிதுனராசியினருக்கு ராகுவால் நடக்கும் சுப பலன்கள் ஏராளம். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பலன்கள் சாதாரணம். ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திர பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை மிதுனத்திற்கு மூன்றாம் அதிபதி.சூரியன் ராகு சேர்க்கை கிரகண தோஷ அமைப்பு என்றால் சூரியன் உங்களுக்கு சகாய ஸ்தானாதிபதி என்பதால் சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். கடன் அடைக்க உதவுவார்கள். பலருக்கு இடமாற்றம் செய்ய நேரும். ஒரு சிலருக்கு கைவிட்டுப் போன சொத்து அல்லது வேலை கிடைக்கும். கைமறதியாக வைத்த முக்கிய ஆவணங்கள் கண்ணில் தென்படும். சிலர் உயில் எழுதலாம் அல்லது உயிலில் திருத்தம் செய்யலாம். மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும்.மனக்குழப்பம் மன சஞ்சலம் அகலும். ஆத்ம ஞானம் பெருகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். முயற்சிப் பலிதம் உண்டாகும். ஒரு சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கு பிறகு செவித்திறன் சரிசெய்யப்படும். சிலருக்கு அரசு உத்தியோகம் அல்லது அரசின் உதவிகள் கிடைக்கும்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி மிதுனத்திற்கு 5,12ம் அதிபதி என்பதால் பங்கு வர்த்தகத்தில் எதிர்பாரத லாபம் கிடைக்கும். சிலர் புதிய பங்குகளில் முதலீடு செய்யலாம். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரலாம். மனம் அமைதியை, தனிமையை விரும்பும். உங்களின் தன் மானத்தை கூறு போடும் விதத்தில் சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். அதே நேரத்தில் எதையும் தாங்கும் மனப்பக்குவத்திற்கு ராகு உங்களை தயார்படுத்தி விடுவார்.
பிள்ளைகளால் மன நிறைவு, நிம்மதி உண்டாகும். கல்வி, தொழில்,உத்தியோக நிமித்தமாக வாரிசுகள் வெளியூர், அல்லது வெளிநாடு சென்று தங்கலாம். சுப மங்களச் செலவுகள் அதிகரிக்கும். காதலால் மன உளைச்சலை அனுபவித்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். சிலருக்கு புதிதாக காதல் சிந்தனை உருவாகும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்: கோட்சாரத்தில் ராசிக்கு 5ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார். 5ம் இடம் என்பது அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கூறுமிடம். ராகு ஆசையை தூண்டும் கிரகம். கேது சட்டம், நேர்மை, நியாயம் என்று பேசும் கிரகம். ராகுவும் கேதுவும் தங்களின் நட்சத்திரத்தை பரிமாறிக் கொண்டு சஞ்சாரம் செய்யும் காலம் என்பதால் தார்மீக உணர்வோடு உழைத்து முன்னேறியவர்களுக்கு சிறிய பேராசை துளிர் விடும். மன சாட்சிக்கு வேறு வேலை கிடையாது. எதையாவது நினைவு படுத்தி நம்மை வதைக்கும் என குறுக்கு வழியில் சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட்டு அதிர்ஷ்டத்தை பேரதிர்ஷ்டமாக மாற்ற முயற்சிப்பார்கள். சட்டத்தை மதிப்பதா? இல்லை புறக்கணிப்பதா என்ற பல எண்ண அலைகளால் மனக் குழப்பம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தை நம்பி பெரிய முதலீடு, பணத்தை இரட்டிப்பாக்கும் தந்திரவாதிகளை நம்பக் கூடாது.
5ம்மிட கேதுவின் பலன்கள்: நடக்குமா? நடக்காதா? என உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய பல விசயங்கள் நல்ல முடிவிற்கு வரும். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்களின் ஆத்மார்த்த உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய எதிர் பாலின நட்பு கிடைக்கும். ஆலயத் திருப்பணிகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
கூப்பிட்ட குரலுக்கு குல தெய்வம் ஒடி வந்து நிற்கும். தொழில், வேலை நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் ஒய்வு காலத்தில் சொந்த ஊருக்கு சென்று செட்டில் ஆகுவீர்கள்.
இதுவரை சொந்த ஊரில் வாழ்ந்தவர்கள் உத்தியோகம், தொழில் நிமித்தமாக இடம்பெயர நேரும். உங்களின் குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பூர்வீகம் தொடர்பான சொத்துப் பிரச்சனைகள், இழுத்தடித்த நீதிமன்ற வம்பு, வழக்குகளிலிருந்து சாதகமான தீர்ப்பு வரும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:விசாகம் குருவின் நட்சத்திரம். குரு மிதுனத்திற்கு 7,10ம் அதிபதி. கோட்சார குரு 10ல் ஆட்சி பெறப் போவதால் இதுவரை நிலையான வேலை இல்லாத வாழ்க்கை துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலரின் வாழ்க்கைத் துணைக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். சில தம்பதிகள் தொழில் உத்தியோக நிமித்தமாக பிரிந்து வெவ்வேறு ஊர்களில் வசிக்கலாம். சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக சட்ட உதவியை நாடலாம். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். சிலரின்கூட்டாளிகள் வம்பு வழக்கினால் பிரியலாம். சிலருக்கு நண்பர்கள், தொழில் கூட்டாளிகளால் தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:11ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவின் நட்சத்திரத்தில் கேது பயணிக்கும் காலத்தில் சிலரின் வாழ்க்கைப் பாதையில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு சட்டத்திற்கு எதிரான இரண்டாம் திருமணம் நடக்கும். பல வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லாமல் வாழ்ந்த அண்ணன், தம்பிகள் குடும்பங்கள் இணையும்.
வியாபாரத்திற்காக குடும்பத்திற்காக, பிள்ளைகளின் படிப்பிற்காக ஏதேனும் கடன் பட்டு இருந்தால் அவற்றை முழுமையாக அடைக்க தேவையான பொருள் வரவு உண்டாகும். சிலருக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பால் கடன் குறையும்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். மிதுனத்திற்கு 6,11ம் அதிபதி. சிலருக்கு யூரினரி இன்பெக்சன், கல்லடைப்பு போன்ற கணையம், சிறுநீரகம் சம்பந்தமான உடல் உபாதைகள் தோன்றும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சை செய்ய நேரும். சிலருக்கு பல தலைமுறையாக பாதுகாத்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.சிலருக்கு சொத்தின் மீதுள்ள வம்பு வழக்கை சரிசெய்ய சொத்தின் மதிப்பை விட அதிகமாக கடன் உருவாகும்.
மிதுன ராசிக்கு அனைத்து கிரகப் பெயர்ச்சிகளும் சாதகமாக உள்ளதால் மனக்கவலை மறந்து நிம்மதியாக இருக்கலாம்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் ஈஸ்வரனைவில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமைகளில் ஆஞ்ச நேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் அஷ்டமச் சனியின் பாதிப்புகள் குறையும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406