
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
இந்த வாரம் எப்படி 23-5-2022 முதல் 29-5-2022 வரை
புதிய திருப்பங்கள் ஏற்படும் அற்புதமான வாரம்.ராசி அதிபதி செவ்வாயும், 5-ம் அதிபதி குருவும் இணைந்து விருச்சிக ராசியினருக்கு வளமான எதிர்காலத்தை வழங்க உள்ளார்கள். குல தெய்வ அனுகிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்தும் காலம் என்றால் அது மிகையாகாது. இன்னும் ஓராண்டிற்கு விருச்சிக ராசியினரின் காட்டில் பண மழைதான். சொத்தின் மதிப்பு பன்மடங்கு உயரும்.
பங்கு பத்திரங்கள் நல்ல லாபம் பெற்றுத் தரும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும்.இது வரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அந்தஸ்தான வீடு, ஆடம்பர வாகனம் என வாழ்வாதாரம் உயரும். உயர்கல்வி முயற்சி சித்திக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அன்யோன்யமும் உண்டாகும். சிலருக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். அமாவாசையன்று சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் விருச்சிக ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால், மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-க்கு அதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் போது, புதிய பொறுப்புகள் கிடைக்கும். அங்குள்ள குருவோடு செவ்வாய் சேர்ந்து ‘குருமங்கள யோக’த்தை உருவாக்குவதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும். ஆகாரத்தில் அக்கறை செலுத்துங்கள்.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப்போகிறார். அதாவது உங்கள் ராசிநாதன் செவ்வாயை சகாய ஸ்தானாதிபதி சனி பார்ப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகள் தொழில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறும் நேரம் இது.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம-லாபாதிபதியான புதன், வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். சேமிப்பு உயரும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இக்காலம் இனிய காலமாக அமையப் போகிறது. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 12-க்கு அதிபதி 6-ல் வரும்போது, ‘விபரீத ராஜயோகம்’ செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் வெற்றியாகும் நேரம் இது.
மகரச் சனியின் வக்ர காலம்
வைகாசி 11-ந் தேதி மகரத்தில் இருக்கும் சனி பகவான் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி வக்ரம் பெறும்போது, ஆரோக்கியத் தொல்லை ஏற்பட்டு அகலும். ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. வீடு மாற்றம், இடமாற்றம் அமையலாம். உயர்பதவியில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இதுபோன்ற காலங்களில் குலதெய்வ, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.
இம்மாதம் ராஜ அலங்கார முருகனை இல்லத்தில் வைத்து வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 19, 20, 23, 24, ஜூன்: 3, 4, 5, 8, 9, 10, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பாகப்பிரிவினை சுமுகமாகும். குடும்ப ஒற்றுமை பலப்படும். குரு பார்வை இருப்பதால் கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். அசையாச் சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியால் பெருமை வந்துசேரும். பணி யில் கேட்ட சலுகை கிடைக் கும். ஊதிய உயர்வால் மகிழ்ச்சியடைவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
ஆண்டு பலன் - 2022
அறிவாற்றலும், முன் கோபமும் நிறைந்த விருச்சிக ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் வருட கிரகங்களின் சஞ்சாரங்கள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஏப்ரல் 2022-க்குப் பிறகு பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியத்துடன் செயல்படுவீர்கள். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள்.கடந்த ஒரு வருடங்களாக வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் நிலை மாறும். ஆரோக்கிய குறைபாடு அகலும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தொல்லை கொடுத்த வாழ்க்கை துணையிடமிருந்து விவாகரத்து கிடைக்கும். மனதிலிருந்த கவலைகள் மாறும். இனி விரிவான புத்தாண்டு பலன்களை காணலாம்.
குரு சஞ்சார பலன்: ஏப்ரல் 13, 2022 வரை நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் நான்காமிடம் என்பது சுகஸ்தானம் என்பதால் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். தேவையில்லாத எண்ணங்கள் நிறைவேறாத செயலில் முயற்சியை உண்டாக்கி மன சஞ்சலத்தையும் அமைதியற்ற நிலையையும் ஏற்படுத்துவார். உடல் நலம் பாதிப்படையும். நெருங்கிய உறவுகள் பகையாவார்கள். தாய் வழி உறவுகளிடம் வீண், வம்பு, வழக்கு உருவாகும் அல்லது பொருளாதாரத்திற்கு யாருடைய கட்டுப்பாட்டிலாவது இருக்க நேரும்.
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையும். சிலர் பழைய வீட்டை சீர்திருத்தியமைக்கலாம். சிலருக்கு அடமானத்திலிருந்த சொத்துக்கள் மீண்டு வரும். விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்று பணமாகிவிடும் அல்லது வேறு புது சொத்தாகி விடும். சிலருக்கு சொத்து வாங்க தாயின் ஆதரவு கிடைக்கும். ஓட்டை வண்டியை வைத்து காலத்தை ஒட்டியவர்கள் புது வண்டி வாங்கலாம்.சிலர் கடன்பட்டு வயல், தோட்டம் வீடு, வாகனம் வாங்குவார்கள்இதுவரை வாடகைக்கு போகாமல் இருந்த அசையும் அசையாச் சொத்துக்கள் வாடகைக்கு போகும். தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும்.
ஏப்ரல் 13-ல் குரு கும்பத்திலிருந்து மீனத்திற்கு பெயர்ந்து ஆட்சி பலம் பெற்றவுடன் அதிர்ஷ்டம் பேரதிர்ஷடமாகும். கடன் வாங்கி புதிய தொழில் முதலீடுகள் செய்யலாம். அதிர்ஷ்டப் பணம் அதிர்ஷ்ட சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியக் குறைபாட்டில் இருந்த கவலைகள் அகலும். தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும். ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் உழைப்பீர்கள். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும்.
பலருக்கு சுய விருப்ப விவாகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். சிலருக்கு ஒரு துணை இருக்க மற்றும் ஒரு துணை கிடைக்கும். சிலருக்கு மறுமணம் நடக்கும். குலதெய்வ, குடும்ப தெய்வ வழிபாடு உங்களுக்கு உதவியாக இருக்கும். உடலும் உள்ளமும் குளிரும். சில பாதகங்கள் இருந்தாலும் பல திருப்புமுனையான சம்பவங்கள் உங்களை மகிழ்விக்கும்.
சனியின் சஞ்சார பலன்கள்: கோட்சார சனி 3ல் இருப்பதால் பல்வேறு சோதனைகள் சாதனையாகும். ஆயுள் ஆரோக்கியம் சீராகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிறும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும்.
இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும். முகப் பொழிவு ஏற்படும். தன வரவு இரட்டிப்பாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். அசையும், அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள்.
26.2.2022 முதல் 6.4.2022 வரை ராசி அதிபதி செவ்வாயும் 3, 4-ம் அதிபதி சனியும் 3ம் இடமான சகாய ஸ்தானம், இளைய சகோதர ஸ்தானத்தில் இணைகிறார்கள். செவ்வாய் உங்களின் ராசி அதிபதி. அவரே 6ம் அதிபதி என்பதால் உங்களுக்கு எதிரி என்று ஒருவர் வெளியில் இருந்து வரத் தேவை இல்லை. உங்களின் செயல்பாடே உங்களுக்கு எதிரியாக மாறும்.
சகோதர்களிடம் ஒத்துப் போக முடியாத நிலை உண்டாகும். சிலரின் தாய், தந்தை உயில் எழுதலாம். உயில் உங்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். காது, மூக்குத் தொண்டைக்கு சிகிச்சை செய்ய நேரும். கண் திருஷ்டி செய்வினைக் கோளாறு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்.உஷ்ணம் தொடர்பான நோய்கள் வாட்டி எடுக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும்.
சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வாங்கும் எண்ணம் தோன்றும். யாருக்கேனும் ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கி கொள்ள நேரும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் முறையான ஆவணம் இன்மையால் தடைபடும். அண்டை அயலாருடன் சொத்து தொடர்பான எல்லைத் தகராறு உண்டாகும். அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கக் கூடாது.
ராகு/கேது சஞ்சார பலன்: ராசியில் கேதும் 7-ல் ராகுவும் 12.4.2022 வரை சஞ்சா ரம் செய்கிறார்கள். ராசியில் உள்ள கேது உங்க ளின் அனுசரணையான அணுகு முறை யால் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங் களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கௌரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். லக்னத்தில் நிற்கும் கேது பலவிதமான தொழில் ஞானத்தை வழங்குவார். ஏழாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுத்து தவறான செயலைத் தூண்டுவார். ராகுவின் தாக்கத்தால் ஆன்மா தன் தொழில் ஞானத்தை மறக்கும்.
பரம்பரையாக கௌரவத் தொழில் செய்பவர்கள் தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று தவறான முடிவை எடுக்கவைக்கும் காலம். அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பல ஆண்டுகளாக தொழில் செய்தவர்கள்கூட தவறான முடிவை எடுக்கிறார்கள். அதிர்ஷ்டத்தைத் தேடி லாபத்தை இழக்கநேரும். ஏழாமிட ராகு ஒருசிலரின் தந்தைக்கு தவறான நட்பை ஏற்படுத்தி, அதன்மூலம் பொருள் இழப்பை மிகுதிப் படுத்தி, தொழிலை நிலைகுலையச் செய்யும். கௌரவத்தைக் காக்க பூர்வீக சொத்தையும் இழக்கநேரும் என்பதால் கவனம் தேவை.
12.4.2022-ல் கேது 12-ம் இடத்திற்கும் ராகு 6-ம் இடத்திற் கும் மாறுகிறது. உடல் ஆரோக்கியம் குறையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தடைப்பட்ட திருமணங்கள் மனச் சங்கடத்துடன் நடக்கும். வேதனைப்படுத்தும் காதல்- கலப்புத் திருமணங்கள் அதிகமாக நடக்கும். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடக்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்சியாக இருந்தாலும், சம்பந்திகளின் சண்டையால் மன வருத்தம் ஏற்படும். இரண்டாவது குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும்.
தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தொழில் சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும். சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும்.
திருமணம்: ராசியில் கேதுவும் ஏழில் ராகுவும் உள்ளதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் புதன், கேது தசை நடப்பவர்களுக்கு மிகைப்படுத்தலாக இருக்கும். கோட்சார சனி, குருவால் திருமணத் தடை இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. மேலும் 2022 ஏப்ரலில் ராகு/கேதுக்கள் விருச்சிகம், ரிஷபத்தைக் கடக்கும் வரை விருச்சிக ராசியினருக்கு நடக்கும் திருமணம் கலப்பு திருமணமாகவோ அல்லது மன நிறைவற்றதாகவோ இருக்கும். திருமண வாழ்வில் நிம்மதி இருக்காது. மன கசப்பான சம்பவங்கள் நடைபெறும். ஏப்ரல் 2022-க்குப் பிறகு நடைபெறும் திருமணம் நீடித்த நிலைத்த இன்பம் தரும்.
பெண்கள்:பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வீட்டிலும் பணிபுரியும் இடத்திலும் சாதகமான சூழல் நிலவும். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து தடைபட்ட பாகப்பிரிவினை சொத்து ,பணம் வரும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும். புதிய அணிகலன்கள் ,அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி உறவில் அன்பு மிளிரும்.
விவசாயிகள்: கடந்த ஆண்டு இழப்புகளால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் மறையும் நேரம் வந்து விட்டது. இந்த ஆண்டு விளைச்சல் பணத்தை வீடு கொண்டு வந்து சேர்க்கும். பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். கடன் பிரச்சனை சிறிது சிறிதாக குறையும்.வாய்க்கால் வரப்பு தகராறு பேச்சு வார்த்தை சமரசமாகும்.
உத்தியோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார் துறை ஊழி யர்களுக்கும் ஓவர் டைம் வருமானம் மகிழ்ச்சியைத் தரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற் றம் உண்டாகும்.தொழிலா ளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். ஆனால் உயர் அதிகாரிகளால் சில சங்கடங்கள் நிலவும். அதனால் வேலை மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும்.
வேலை இல்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்ய ஏற்ற நேரம். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும்.
முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்: தொழிலில் நிலவிவந்த மந்தநிலை மாறி, தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும்.தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். பொருளாதாரத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் சூழ்நிலை உண்டாகும்.
அரசியல்வாதிகள்: உங்களின் மூன்றாம் அதிபதி சனி மூன்றில் ஆட்சி பலம் பெற்று ஐந்தாமிடமான பதவி ஸ்தானத்தை பார்ப்பதால் விரும்பிய பதவி தேடி வரும். சனி பகவான் பதவி கொடுத்தால் யார் தடுக்க முடியும். மேலும் ஏப்ரலில் குரு 5ம் இடமான மீனத்தில் ஆட்சி பலம் பெற்றவுடன் உங்களுக்கு பல்வேறு விதமான சாதகமான பலன்கள் நடைபெறும்.ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதை மூன்றாமிட சனி புரிய வைப்பார்.
மாணவர்கள்: ராசியில் உள்ள கேதுவால் ஞானம் பெருகும். சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். ஆசிரியர் , மாணவர்களுக்குள் நல்லுறவு ஏற்படும். 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படிக்கும் விருச்சகராசியின்ர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெற்று பரிசுகளும் பதக்கங்களும் வாங்கி குவிப்பார்கள்.
விசாகம் 4-ம் பாதம்: புத்திர பாக்கியம் சித்திக்கும். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள தொழில் தொடர்பான வழக்குகள் சாதமாகும். வியாழக் கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபட நன்மைகள் அதிகமாகும்.
அனுஷம்: ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந் தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சனை யாக உருவாகும். முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். சனிக்கிழமை ஸ்ரீ ஆஞ்ச நேயரை வழிபட ஏற்றமான பலன் உண்டாகும்.
கேட்டை: பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாதத்தவணையில் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தினமும் சிவபுராணம் படித்து வர நிம்மதி உண்டாகும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விளம்பி வருட பலன்
கோபத்தை குணத்தையும் ஒரு சேரப் பெற்ற விருச்சிக ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் வெற்றி மேல் உண்டாக நல் வாழ்த்துகள்.
ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் 5ம் இடத்தில் நிற்கிறார். சனிபகவான் 3, 4ம் இடத்தில் உலா வருகிறார். இந்த தமிழ் புத்தாண்டில் குருபகவான் இழந்த அனைத்து இன்பங்களையும் மீட்டுத் தரப் போகிறார். தொட்டது துலங்கும். எண்ணம் போல் வாழ்க்கை அமையப் போகிறது. தடைபட்ட அனைத்து செயல்களும் சித்தியாகப் போகிறது.முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லப் போகிறது.
இது வரை வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த உங்களின் பெயர் புகழ் பரவும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும்.ஆன்ம பலம் பெருகும்.அசுப கிரகங்களான ராகுவும், கேதுவும் மறைவு ஸ்தானத்திற்கு செல்லுவதால் வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயர வாய்ப்பு உள்ளது. கோட்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். இதனால் மகிழ்ச்சி கடலில் நீந்தப் போகிறீர்கள். ஒளிமயமான எதிர்காலம் உங்களை வழிநடத்தப் போகிறது. எதிர்காலம் பற்றிய அனைத்து நம்பிக்கைகளும் பலிதமாகும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து பெற்றி பெறுவீர்கள்.விருச்சிக ராசியினரின் திறமைகளை வெளிக்காட்ட அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது.
குடும்பம்:ராசியில் கேதுவும் 7ல் ராகுவும் நின்ற காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், மனச் சங்கடங்கள் மறையும்.மனக்கசப்பில் பிரிந்த குடும்பங்கள் ஒன்றிணையும். குடும்ப ஸ்தானதிபதி குரு 5ல் ஆட்சி பலம் பெறுவதால் குடும்ப உறுப்பினர்களிடம் சகஜ நிலை திரும்பும். உங்கள் குடும்ப நிலை உயரும். சிலருக்கு குடும்ப பொறுப்பைஏற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சகோதர சகோதரிமேல் அன்புஅதிகரிக்கும். குடும்ப உறவுகள் உங்கள் மேல் அன்பை பொழிவார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியப் பேச்சுக்கள் கைகூடும். குடும்ப ஒற்றுமையை சிதைத்த எதிரிகள் இருந்த இடம் தெரியாது. பூர்வகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் மத்தியஸ்தர்கள் முன் பேசி சுமுகமாக தீர்க்கப்படும்.சிலர் தாத்தா, பாட்டியாகுவார்கள்.பெண்கள் கருத்தரிப்பார்கள்.
ஆரோக்கியம்:6ல் ராகு இருப்பதால் உடல் உடல் பெருக்கம் ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய வைத்திய முறையை அணுக வேண்டும். சுய வைத்தியத்தை தவிர்க்க வேண்டும்.
திருமணம்:கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோட்சார ராகு, கேதுவால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் பெற்றவர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் திருமணம் நடக்கும்.
பெண்கள்:பெண்களுக்குகுடும்ப சுமைகள், பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். தன வரவு சிறப்பாக இருக்கும். அழகிய, ஆடம்பர விலையுயர்ந்த வெளிநாட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள் கணவன் மற்றும் புகுந்த வீட்டினரின் ஆதரவு மகழ்ச்சி தரும்.உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள்.குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும்.
மாணவர்கள்:கல்வி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். 6ல் ராகு இருப்பதால் போட்டித் தேர்வில், பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. படிப்பை நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் வாய்ப்பு உண்டாகும். அரியர்ஸ் பாடத்தை மீண்டும் எழுதி பாஸ் பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்:அரசு, தனியார் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். சம்பள உயர்வு கிடைக்கும். உங்களுக்கு உபரி,தனி வருமானம்‘ மகிழ்ச்சியைத் தரும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு காரிய சித்தி உண்டு. தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்:இதுவரை சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தொழில் தொடர்பானவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். புதிய சந்தர்ப்பங்கள் தேடி வரும். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள்:6ல் ராகு இருப்பதால் விருச்சிக ராசி அரசியல்வாதிகள் கடுமையாக உழைத்து எதிரியை விரட்டுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள். நினைத்த சாதிக்க கூடிய பணபலம், படை பலம் பெருகும். 5ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்ற குருபகவான் பதவிக்கு, கவுரவத்திற்கு கவசமாக இருப்பார். தேர்தலில் செலவழித்த தொகை வீண் போகாது. கடந்த கால நெருக்கடிகள் நீங்கும்.
கலைஞர்கள்: கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான நேரம். வெளிநாட்டுபயணத்தை குறிக்கும் 12ம் இடத்தில் கேது இருப்பதால் கலை நிகழ்ச்சிகளுக்காக பலமுறை வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். பணவரவு பல மடங்காக அதிகரிக்கும்.
விவசாயிகள்:விவசாயம் சிறக்கும். கிணறு தோண்டுதல் பம்பு செட் போடுதல் போன்ற பணிகள் நடைபெறும். புதிய விவசாய நிலங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்
பூர்வகச் சொத்துகள் உங்களுக்கு சுமுகமான பாகப் பிரிவினையில் கிடைக்கும். விவசாயக் கடன் ரத்தாகும். உங்களின் விளை பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
கவனமாக செயல்பட வேண்டிய காலம்.
ராகு/கேது:21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார். ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராகு ஆறிலும் கேது பன்னிரண்டிலும் சஞ்சரிப்பதால்சிலர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தனிமையில் ஓய்வு எடுப்பார்கள். சிலர் பணியிலிருந்து ஒய்வு பெறலாம்.
பொன், பொருள் பற்று குறையும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள். சிலர் குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம். சிலர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் பக்தி மார்க்க இயக்கத்தில் சேரலாம். சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லலாம். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். பண விஷயத்தில் சற்று நெருக்கடி இருக்கும் அல்லது விரையச் செலவு அதிகமாகும்.
குரு:29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 3ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உங்களின் மேல் அக்கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டிய காலமாகும். சிலர்வேற்று மதத்திற்கு மாறி விடுவார்கள். வீடு அல்லது அலுவலகம் தொடர்பானஇடமாற்றம் ஏற்படும்.
பரிகாரம்:திங்கட்கிழமை காலை 6 -7 சந்திர ஓரையில் சிவ பெருமானை வழிபட கடன் தொல்லை கட்டுப்படும்.
ராஜ யோகம்
ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் குருவால் பலம் பெறுவதால் அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் இணைந்து விபரீத ராஜ யோகத்தை தரும். நல்ல வசதி வாய்ப்புகள் உருவாகும். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள். இதுவரை பங்கு சந்தை பற்றிய ஆர்வம் இல்லாதவர்களுக்கு கூட பங்கு வர்த்தகத்தின் மேல் ஆர்வம் ஏற்படும். சிறிய பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். புதிய அசையும், அசையாச் சொத்துக்கள் உருவாகும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஏழரைச்சனி விலகியது, இனிய வாழ்க்கை மலர்கிறது!
விருச்சிக ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், 26.12.2020 அன்று முன்னேற்றத்தைக் கொடுக்கும் மூன்றாமிடத்திற்கு செல்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி விலகி விட்டது. எனவே இனி, தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். துணையாக இருக்கும் நண்பர்களும், உறவினர்களும் தோள்கொடுத்து உதவுவர். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு 3, 4 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. வெற்றிகள் ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான், இப்பொழுது வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உங்களின் நீண்டநாள் எண்ணங்கள் நிறைவேறும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு உங்கள் ராசிக்கு, தன -பஞ்சமாதிபதியாக விளங்குபவர். அவரோடு இப்பொழுது சனி பகவான் இணைந்து ‘நீச்சபங்க ராஜயோக’த்தை உருவாக்குகின்றார். எனவே மனம்போல மங்கல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செல்வச் செழிப்போடு கூடிய வாழ்க்கை மலரப்போகிறது.
வாய்ப்புகள் வாசல் தேடி வரும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனி, முன்னேற்றத்தின் முதல்படிக்கு செல்ல வைக்கப்போகிறார். இதுவரை ஏற்பட்ட தடைகளும், தாமதங்களும் அகலும். தனவரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் தேவை ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். எதிரிகள் விலகுவர். சகோதர ஒற்றுமை பலப்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புடன் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பதவி வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து உயர் பதவிகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 5, 9, 12 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. சகாய ஸ்தானத்தில் வீற்றிருந்து பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், பயண ஸ்தானம் ஆகியவற்றைச் சனி பார்க்கிறார். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்ன என்னவெல்லாம் கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கிடைத்து நிறைவான வாழ்க்கை உருவாகப் போகின்றது. குறிப்பாக திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். துள்ளி விளையாடும் பிள்ளைச் செல்வம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். புதிய சொத்துக்களின் சேர்க்கையும், வீடுகட்டிக் குடியேறும் அமைப்பும் மனம்போல நடைபெறும்.
சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், பெற்றோர் வழியில் பிரியம் கூடும்.
சனியின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால், சுப விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியாக சூரியன் விளங்குவதால் புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். அடுக்கடுக்காக ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள். அதுமட்டுமல்லாமல் புதிதாக வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, செய்யும் தொழில் சீராக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரப் போட்டிகள் அகலும். வீடு மாற்றங்களும், உத்தியோக மாற்றங்களும் விரும்பிய வண்ணம் வந்து சேரும். நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வுகள் இப்பொழுது கிடைக்கும். குடும்பத்தை விட்டுப்பிரிந்து வேலைபார்த்து வந்தவர்கள், இனி ஒன்றுசேரும் வாய்ப்பு உண்டு. இக்காலத்தில் கும்ப ராசிக்கு சனி செல்கின்றார். அர்த்தாஷ்டமச் சனியாக சனி பகவான் வந்தாலும், கும்ப ராசி அவருக்கு சொந்த வீடு என்பதால் நன்மைகளையே வழங்குவார். சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி வருகின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் திருப்தி தரும். மீனத்தில் குரு வரும்பொழுது, உங்கள் ராசியையே பார்க்கப் போகின்றார். எனவே ஆரோக்கியம் சீராகும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, கொஞ்சம் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். கொடுத்த கடன்களால் பிரச்சினைகள் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் புதியபாதை புலப்படும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். வழக்கமான பணிகளில் ஏற்பட்ட சுணக்கம் அகலும். 12-ல் கேது சஞ்சரிப்பதால் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். ஆன்மிகத்திற்கு என்று அதிக தொகையைச் செலவிடு வீர்கள். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சதுர்த்தி விரதமிருந்து ஆனைமுகப் பெருமானை வழிபடுவதோடு, சஷ்டி அன்று முருகப்பெருமானையும் வழிபட்டு வாருங்கள். இல்லத்து பூஜை அறையில் வராகி படம் வைத்து, வராகி கவசம் பாடி வழிபட்டால் வசதி வாய்ப்புகள் பெருகும். வளர்ச்சியும் அதிகரிக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
5ம்மிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். இந்த பொற்காலம் மீண்டும் 12 வருடம் கழித்து தான் விருச்சிக ராசிக்கு கிடைக்கும். இது நாள்வரை நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு நிவர்த்தி கிடைக்கும் காலம். ஆன்ம பலம் பெருகும். உடல் பொழிவுஏற்படும். தோற்றம் மற்றும் செயல்களில் மாற்றம் ஏற்படும். பொது நலச் சிந்தனை தோன்றும். சமூகத்தில் மதிப்பு மரியாதை ஏற்படும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆசி கிட்டும். உங்களின் தனித் திறமை வெளிஉலகத்திற்குதெரிய வரும். அரசியல்வாதிகளுக்கு பொற்காலம். தொழிலை தொடர்ந்து நடத்தலாமா அல்லது இழுத்து மூடிவிட்டு ஓடிவிடலாமா என்று பயந்து, பயந்து வாழ்ந்தவர்களுக்கு தொழிலில் புதிய மாற்றம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய முதலீடுகள்செய்யலாம்.
வேலை இல்லாமல் எப்படி வாழ்வது என்று வருத்தப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றத்துடன் கூடிய பதவி, ஊதிய உயர்வுகிடைக்கும். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும்.அலுவலகத்தில் மதிப்பு மரியாதைஅதிகரிக்கும். வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு. சக ஊழியர்களிடையேநல்லிணக்கம் ஏற்படும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். உங்கள்அலுவலக வேலை தொடர்பாக வெளிநாடு சென்று வருவீர்கள்.
நிதி நிர்வாகம், நீதித்துறை, வழக்குரைஞர்கள், நீதிபதிகள், ஆடிட்டர்கள் அதிக அளவிலான நன்மை அடைவார்கள்.இவர்களுக்கு தொழில் வளர்ச்சிஆமோகமாக இருக்கும். அரசு தரப்பில் செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் பட்ட மன வேதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். கடன் தொல்லையால் பட்ட அவமானம் தீரும். அதிலிருந்து தொல்லைகளிலிருந்து மீளும் மார்க்கம் தென்படும். குரு நின்ற இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம். அந்த வகையில் குருவின் பார்வை பதியும் 1,9,11ம் இடங்கள் மூலம் மேலும் அதிக நற்பலன்கள் நடக்க உள்ளது.
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பதிவதால் கருத்தரிக்காத பெண்களுக்கு கரு உருவாகும். செயற்கை முறை கருத்தரிப்பிற்கு உகந்த காலம். தந்தை மற்றும் தந்தை வழி முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் முறையான பாகப் பிரிவினை நடக்கும். சொத்து விசயத்தில் தாய், தந்தை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மறைந்து நீங்கள் விரும்பிய பாகம் அப்படியே முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். பல தலைமுறையாக விற்காத பூர்வீக சொத்துகள் கூட நல்ல விலைக்கு விற்கும். வரும் பணம், சொத்தை மறு முதலீடு செய்து உங்களின் சந்ததியினருக்கு பயன்படும் வகையில் சேமிப்பு உயரும்.
9ம் இடத்திற்கு சனிப் பார்வை இருப்பதால் தொன்மையான பொருட்களை ஆராய்ச்சி செய்தல் மற்றும் பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் இருக்கும்.
குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குழந்தைகளின் கல்வி ஆர்வம் மன நிம்மதி தரும். பள்ளி கல்லூரி பிள்ளைகளுக்கு தங்களை அழகு படுத்துவதில் நாட்டம் மிகும். 5ல் குரு இருப்பதால் இயல்பிலேயே அறிவாளியான நீங்கள் மேலும் நன்றாகப் படித்து உங்கள் பள்ளி கல்லூரிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்ப்பீர்கள். வழக்கத்தை விட அதிக நேரம் ஒதுக்கி படித்தால் பொதுத் தேர்வில் சாதனை படைப்பீர்கள். சிலர் உயர் கல்விக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது.
7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 11ம் இடமான லாப ஸ்தானத்தில் பதிகிறது. தன வரவு திருப்தி தரும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். சகலவிதமான சௌபாக்கியங்களும் உண்டாகும்.மாற்றங்களும் ஏற்றங்களும் வீடு தேடி வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வங்கி சேமிப்பு உயரும். செல்வ செழிப்பில் மிதப்பீர்கள். பணவசதி சிறப்பாக இருக்கும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும்.
மூத்த சகோதர சகோதரிகளுடன் சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறையும்.
ஆனாலும்வம்பு, வழக்கை குறைக்க அமைதி காத்தல் நலம். முதல் திருமணம் முறிவுஏற்பட்டவர்களுக்கு இரண்டாம் திருமணம் நடக்கும். கடனுக்காக வீட்டை விற்றவர்கள் சொத்தை இழந்தவர்கள், அடமானம் வைத்தவர்களின் மனக் குமுறல் தீரும். அடமானச் சொத்தை, நகைகளைமீட்கும் விதத்தில் பொருள் வரவு இருக்கும். கடனால் சொத்தை இழந்தவர்களுக்கு இழந்ததை விட அற்புதமான புதிய சொத்துக்கள் உருவாகும். இது வரை சொத்து சேர்க்கை இல்லாதவர்களுக்கு வீடு, வாகன யோகம் ஏற்படும்.அந்தஸ்து உள்ள சொகுசு வாகனத்தில் குடும்பத்தாருடன் சென்று ஆனந்தம் அடைவீர்கள். தாய் வழிச் சொத்து ,தாய் வழி உறவினர்களின்அன்பும் ஆதரவும் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். நஞ்சை, புஞ்சைகள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய அணிகலன்கள் ,அழகு,ஆடம்பரப் பொருட்கள் வாங்கிமகிழ்வீர்கள்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை ராசியில் பதிகிறது. மனதாலும், உடலாலும் புனிதமடைவீர்கள். நீண்ட காலமாக தடைபட்டசெயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எந்த செயலிலும் தைரியமாகமுடிவு எடுப்பீர்கள். மனத் தடுமாற்றம் மன சஞ்சலம் , மனக்குழப்பம் நீங்கும். உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.மன வேதனையை பிறரிடம் பகிர முடியாத நிலை மாறும்.உங்களின் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் சிற்சிலமாற்றங்கள் ஏற்படும். ஆயுள் தீர்க்கம். முன்னோர்களின் பரம்பரை வியாதிகளான மூட்டு வலி, வாதம், பிரஷர், சுகர் போன்ற கர்ம வினை நோய்க்கு வைத்தியம் செய்பவர்கள் இயற்கை வைத்தியத்தை நாடினால் நோய் தாக்கம் விரைவில் கட்டுப்படும். சிலருக்குஉடல் பெருக்கம் ஏற்படும். தாய்மாமன் வழி ஆதாயம் உண்டு.
குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில் 5ம் இடத்திற்கு சனிப்பார்வையும் இருப்பதால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாட்டை , வாக்குவாதங்களை தவிர்ப்பதுநல்லது. ராசிக்கு சனிப் பார்வை இருப்பதால் வட்டித் தொழில் , சீட்டுக் கம்பெனி, ஏலச்சீட்டு, பைனான்ஸ் போன்று பெரிய அளவில் பணம் புரளும் தொழிலில் இருப்பவர்களுக்கும் மிகப் பெரியமுதலீட்டில் தொழில் நடத்துபவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து பிரச்சனை, கடன் கொடுத்து மாட்டிய பிரச்சனை, செக் மோசடி பிரச்சனைகள் 17.1. 2023 அன்று ஏற்படும் சனி பெயர்ச்சிக்குபிறகு முடிவுக்கு வரும்.
பெண்கள்: அதிர்ஷ்டமும், பேரதிர்ஷ்டமும் முன்னேற்றமும் உங்களை சிறப்பாக வழி நடத்தும் காலம்.பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமிதம் அடைவீர்கள். பிள்ளைகளுக்கு சடங்கு, வளைகாப்பு, திருமணம் என அனைத்து விதமான சுப காரியங்களும் நடத்தி மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.
பரிகாரம்: பௌர்ணமி அன்று குல தெய்வத்திற்கு சர்க்கரை பொங்கல் படைத்து, ரோஜா மாலை அணி வித்து வழிபடவும். அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
ஆறில் ராகு/பனிரென்டில் கேது
வீரம் நிறைந்த விருச்சிக ராசியினரே ராசிக்கு 6ல் ராகுவும், 12ல் கேதுவும் 5, 6ம் இடத்தில் குரு பகவானும், சனிபகவான் 3 , 4ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
6ம்மிட ராகுவின் பொதுபலன் கள்:6ம்மிடம் என்பது மறைவு ஸ்தானம். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வருவது நன்மைதான். அதுவும் உப ஜெய ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு வரும் அசுப கிரகம் சுபத்துவத்தை அதிகப்படுத்தும். தொட்டது துலங்கும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றம் பற்றிய கனவுகள் பலிதமாகும். உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும் .ஆன்ம பலம் பெருகும்.
பல வருடங்களாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். விருச்சிக ராசியினரின் திறமைகளை வெளிக்காட்ட கிடைத்த அரிய சந்தர்ப்பமாக இந்த ராகு/கேது பெயர்ச்சி இருக்கும். உங்களை வம்பில் மாட்டிய எதிரிகள் இருந்த இடம் தெரியாது. நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் தொகை தாய்மாமன் மூலம் கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும்.
உடல் பெருக்கம் ஏற்படும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். சகோதர சகோதரி மேல் அன்பு அதிகரிக்கும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது. ராகு மேஷ ராசியில் உள்ள நட்சத்திரப் பாதங்களான கிருத்திகை, பரணி, அசுவினி நட்சத்திரங்களில் மூலம் ராசியை கடக்கிறார்.
12.4.2022 முதல்14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:
கிருத்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் விருச்சிகத் திற்கு 10ம் அதிபதி. மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கௌரவம் உயரும். கௌரவ பதவி தேடிவரும். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். தொழிலில் நிலவிவந்த மந்தநிலை மாறி, தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:
பரணி சுக்ரனின் நட்சத்திரம். சுக்ரன் விருச்சிகத்திற்கு 7,12ம் அதிபதி. சிலருக்கு கலப்புதிருமணம் நடக்கும். சிலரின் மறுமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகமாகும். சிலருக்கு எதிர் பாலினத்தினரால் மனச்சுமை அதிகரிக்கும். சில தம்பதிகள் வியாபாரம் அல்லது வேலைக்காக குடும்பத்தை பிரிந்து வாழ்வார்கள். சில தம்பதிகளின் விவாகரத்து வழக்கு சாதகமாகும். வெளிநாட்டில் அந்நிய மொழி பேசுபவர்கள் மத்தியில் குடியிருக்கும் நிலை ஏற்படும். சிலர் வயது மூப்பு காரணமாக வீட்டில் தனிமையில் ஓய்வு எடுப்பார்கள். சிலரின் வாழ்க்கை துணை பணியிலிருந்து ஒய்வு பெறலாம். திருமண பட்ஜெட் எகிறும். சம்பந்திகளுக்குள் வரதட்சணை தகராறு அதிகமாகும்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:
அசுவினி கேதுவின் நட்சத்திரம். கோட்சாரத்தில் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் கேதுவின் நட்சத்திரத்தில் ராகு பயணிக்கும் காலம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பொன், பொருள் பற்று குறையும். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூட எளிமையான உணவு சாப்பிடவும் எளிய உடை உடுத்தவும் துவங்குவார்கள். வெகு சிலர் இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் மனைவி, குழந்தைகள், நண்பர்களின் ஆதரவில் ஜீவனம் செய்ய நேரும். கேது ராசியை கடக்கும் முன்பு உங்களின் மேல் அக் கறை மதிப்பு மரியாதை உள்ளவர் யார் என்பதை புரிந்து கொள்ள கடவுள் வழங்கும் சந்தர்ப்பமாக இதை எடுத்துக் கொண்டு வாழ வேண்டிய காலம்.
12-ம்மிட கேதுவின் பொதுபலன்கள்:
12--ம் இடம் என்பது மோட்சம் தனிமை, வெளிநாட்டு வாழ்க்கை, தூர தேசப் பயணம் ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம்.
மனம் பற்றற்ற நிலையை விரும்பும். எதிர்மறை எண்ணங்கள் சீராகும். தீய, கெட்ட சிந்தனைகள் நீங்கி தெளிவு பிறக்கும். சிலருக்கு தனிமையில் வாழ வேண்டும் என்ற உணர்வு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.மனம் எளிமையை விரும்பும்.சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிலர் குறுகிய காலம் வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் மகன் அல்லது மகள் வீட்டிற்குச் சென்று வரலாம். சிலர் பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் பக்தி மார்க்க இயக்கத்தில் சேரலாம். சிலர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு செல்லலாம். சிலருக்கு சொத்து விற்பனையில் இழப்பு உண்டாகலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். திருமண முயற்சிகள் இழுபறியாகும். சிலர் இரண்டாவது தொழில் தொடங்கலாம். பண விஷயத்தில் சற்று நெருக்கடி இருக்கும் அல்லது விரையச் செலவு அதிகமாகும். கேது துலாம் ராசியில் உள்ள விசாகம், சுவாதி, சித்திரை நட்சத்திரங்கள் மூலம் தன் பயணத்தை செலுத்துகிறார்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:
விசாகம் குருவின் நட்சத்திரம். குரு விருச்சிகத்திற்கு 2,5ம் அதிபதி. இதுவரை பங்கு சந்தை பற்றி யோசிக்காதவர்களுக்கு கூட அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் ஏற்படும். சிறிய பங்குச் சந்தை முதலீட்டில் பெரிய லாபத்தை கொடுத்து பெரிய முதலீட்டிற்கு உங்களை தயார்படுத்தி பெரிய இழப்பை சந்திக்கச் செய்வார் என்பதால் பெரிய முதலீட்டை தவிர்க்க வேண்டும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்பார்கள் அல்லது பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினை உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களுக்கு தொழிலில் திருப்புமுனை உண்டாகும். பிள்ளைகள் கல்வி, உத்தியோகத்திற்காக இடம் பெயரலாம். சிலருக்கு வாலிபக் கோளாறால் தேவையற்ற வம்பு உருவாகும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:
ராசிக்கு 6ல் சஞ்சரிக்கும் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கோட்சார கேது சஞ்சரிக்கும் காலம் என்பதால் குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி சம்பாதிக்க வைத்து குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிக்க வைப்பார். பணத்தின் சுவையை அனுபவிக்கும் முன்பு அதை பிடுங்குவார். அல்லது சட்டச் சிக்கலில் மாட்ட வைப்பார். ஒரு சிலருக்கு திடீர் பக்தியை கொடுப்பார். பக்திக்கு பின் பெரிய பதவி ஆசையை புகுத்துவார். பதவியை கொடுப்பார். பதவி எப்பொழுது பறிபோகுமோ என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகளை செய்து பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவார். இது போன்ற பின்விளைவுடன் கூடிய பலனே கேது வழங்குவார். இது போன்ற காலகட்டத்தில் எது சரி? எது தவறு? என்று பகுத்தாயும் தன்மை மற்றும் நிதானம் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:
சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் விருச்சிகத்திற்கு ராசி அதிபதி 6ம் அதிபதி. ராசி அதிபதியின் நட்சத்திரத்தில் கேது செல்வதால் செயல் பாடுகளில் மந்தத் தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். சிலர் கடன் பெற்று வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வீடு, வாகன வகையில் ரிப்பேர் செலவு கையை கடிக்கும். சிலர் ஜாமீன் போட்டு ஏமாறலாம். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடுகள் அகலும். நீண்ட நாள் நோய்க்கு அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தரும். சட்ட விரோத செயல்களால் சிலருக்கு அரச தண்டனையும் கிடைக்கும்.
எந்த கிரகங்கள் எங்கு இருந்தாலும் சரி, தெய்வ சக்தியை அடி பணியுங்கள். அனைத்தும் சுபமான மாற்றங்களாகவே இருக்கும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406