
இன்றைய ராசி பலன்கள்
வார பலன்கள்
இந்த வாரம் எப்படி 23-5-2022 முதல் 29-5-2022 வரை
ராசியில் 2,5ம் அதிபதி புதனுடன் 4ம் அதிபதி சூரியன் இணைவு அற்புதான கிரகச் சேர்க்கை . இதனால் புதிய சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு தாய் வழி உறவுகள் மூலம் அன்பளிப்பு கிடைக்கும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். சிலரின் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். ராசி அதிபதி சுக்ரன் விரய ஸ்தானத்தில் ராகுவுடன் நிற்பதால் தொழில் உத்தியோகத்தில் காரியத் தடை, மறைமுக எதிர்ப்புகள் உண்டாகலாம். சிறு வைத்தியச் செலவுகள் ஏற்படலாம். கொடுக்கல், வாங்கல் மற்றும் ஜாமீன் விசயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சகோதர, சகோதரிகளுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது.
ரிஷப ராசி ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக பழகவும். வழக்குகளில் புதிய திருப்பங்கள் உண்டாகும். அமாவாசையன்று கோ பூஜை செய்யவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை
விடாமுயற்சியும், மன உறுதியும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உச்சம் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அங்குள்ள லாபாதிபதி குருவோடு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும்.
மீன - செவ்வாய் சஞ்சாரம்
வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, விரயத்திற்கேற்ற பணம் வந்துசேரும். காரியங்கள் கடைசி நேரத்தில் எப்படியாவது கை கூடிவிடும். நண்பர்கள் உதவுவார்கள். ஊர் மாற்றம், வீடு மாற்றத்துக்கான முயற்சி கைகூடும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு.
சனி - செவ்வாய் பார்வைக் காலம்
வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். உங்கள் ராசி அடிப்படையில் சனி யோகம் செய்யும் கிரகமாகும். அவர் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், எதிர்பார்த்த நல்ல திருப்பங்கள் ஏற்படும். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். கடன்சுமை குறையும்.
புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்
வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே அவர் வக்ர நிவர்த்தியாவதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்பதவி கிடைப்பதற்கான அறிகுறிதென்படும். வைகாசி 23-ந் தேதி அன்று ரிஷப ராசியான உங்கள் ராசிக்கு புதன் வருகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும்.
மேஷ - சுக்ரன் சஞ்சாரம்
இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி மேஷ ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, கொஞ்சம் கவனத்துடன் செயல்பட வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மருத்துவச் செலவு கூடும். எதையும் துணிந்து செய்ய இயலாது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.
மகரச் சனியின் வக்ர காலம்
உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். அவர் வைகாசி 11-ந் தேதி வக்ரம் பெறுகிறார். அது அவ்வளவு நல்லதல்ல. பெற்றோர் வழி பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். பாகப்பிரிவினை முடிவுக்கு வராது. எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள்.
இம்மாதம் வெள்ளிக்கிழமைகளில் அம்பிகையை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 21, 22, 25, 26, ஜூன்: 1, 2, 6, 7மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் விரய ஸ்தானம் வலுப்பெறுவதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை வரலாம். கணவன் - மனைவி உறவு திருப்திகரமாக இருந்தாலும், உறவினர்கள் வாயிலாக சில பிரச்சினைகள் உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைப்பது அரிது. நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலமாக நினைத்தது நிறைவேறும்.
ஆண்டு பலன் - 2022
கலையார்வம் மிகுந்த ரிஷப ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு முழுவதும் குரு மற்றும் சனியின் சஞ்சாரங்கள் ஓரளவு சாதகமாகவே உள்ளது. ஏப்ரல் 2022-க்கு பிறகு ராகு/கேதுக்கள் 6,12-ம் இடங் களுக்கு மாறும் போது ராகு/ கேதுவால் ஏற்படும் இன்னல்கள் அகலும்.
இந்தப் புத்தாண்டில் தொழில் மேன்மை உண்டாகும். ஊதியஉயர்வு, பதவி உயர்வு உண்டாகும். காரியத்தடை நீங்கும். புதிய எண்ணத்துடன் பாடுபட மனதில் தெம்பு பிறக்கும். தொட்டது துலங்கும். ஆன்மீகத் தேடுதல் கூடும். மன வேதனை மறையும். உங்களின் குலதெய்வ அருள் கிடைப்பதை உணருவீர்கள். பக்தி அதிகமாகும். நீங்கள் நினைத்த அத்தனையும் படிப்படியாக நடக்கும். இந்த புத்தாண்டிற்கான விரிவான பலன்களை காணலாம்.
குரு சஞ்சார பலன்:- ஏப்ரல் 13, 2022 வரை குரு பகவான் 10ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். வியாபாரமே செய்ய முடியாத நிலை, இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருப்பவர்கள், வேலை யாட்களால் தொழில் நெருக்கடியில் இருந்தவர்களுக்கு கும்ப குருவால் நம்பிக்கை துளிர் விடும். தொழில், உத்தியோகத்தில் நிலவிய வெறுப்புகள் மறையும்.
தொழில் மற்றும் பிற தேவைக்காக கடன் வாங்கலாம். எதிரி, கடன், வைத்தியச் செலவு அதிகரிக்கும். போட்டி, பொறாமை உருவாகும். இவற்றை சமாளிக்கும் வைராக்கியம் உருவாகும். போட்டியையும், எதிரியையும் சமாளிக்கும் வல்லமை பெற்றவரே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.
நீண்ட காலத் திட்டங்களும், லட்சியங்களும், கனவுகளும் நிறைவேறும். கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு வட்டி தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி ஏற்பட வாய்ப்ப்பு உள்ளது. குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்கள் பெயரில் இருந்த கலங்கங்கள் மறையும். ஏப்ரல் 13-க்கு பிறகு 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு மாறும் குருவால் பயம், குழப்பம் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பல்வேறு விதமான தொடர் ஆதாயங்கள் கிடைக்கும். புதிய எண்ணத்துடன் உழைக்க மனதில் தெம்பு பிறக்கும். தொழிலிலும் குடும்பத்திலும் விரும்பத்தகுந்த மாறுதல்கள் நடக்கும். அவமானப்படுத்திய மனைவி, பிள்ளைகள் மதிப்பு, மரியாதை தருவார்கள். கடன் தொல்லை படிப்படியாக குறையும். சிலருக்கு கடன் இருந்த சுவடே தெரியாது.
தொட்டது துலங்கும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். புதிதாக வாங்கப் போகும் சொத்தின் மதிப்பும் பல மடங்கு உயரும். விற்காமல் கிடந்த சொத் துக்கள் நல்ல லாபத்திற்கு விற்கும். தடைபட்ட உடன் பிறந்தவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெறும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். குல, இஷ்ட தெய்வம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். வாரிசுகளுக்கு திருமணம், பிள்ளைப் பேறு, நிலையான சொத்து அமைவது, தொழில், உத்தியோக வாய்ப்பு போன்ற சுப நிகழ்வுகளால் மனதில் நிம்மதி கூடும்.
சனியின் சஞ்சார பலன்கள்:- 9-ம் இடச்சனி என்பதால் இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில்/ வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்ல நேரலாம். மோசமான பிரச்சனைகளை சந்தித்தவர்கள் கூட தலை நிமிர்ந்து நிற்க கூடி நல்ல நேரம் ஆரம்பம். டிரேடிங் துறையில் குறிப்பாக ஜவுளி அழகு ஆடம்பர பொருள், விற் பனையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், மருத்துவ துறையில் உள்ளவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கப் பெற்று முன்னேற்றப் பாதையில் செல்லுவார்கள்.பகல், இரவு பாராமல் அல்லும் பகலும் உழைத்த உழைப்பு பணமாக காய்க்கப்போகிறது.
26-2-2022 முதல் 6-4-2022 வரை சனி பகவானும் 7, 12-ம் அதிபதியான செவ்வாய் இணைகிறார்கள்.சிலருக்கு தடைபட்ட திருமணம் கைகூடும்.தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக இக்கால கட்டத்தில் சிலர் வாழ்க்கை துணையை பிரிந்து வாழ நேரலாம் அல்லது கணவன் மனைவி கருத்து வேறுபாட்டாலும் பிரிய நேரும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு பஞ்சாயத்து நீதி மன்றம் செல்லும் நிலையை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். தவறான நட்பு வலையில் மாட்டலாம்.களத்திரம், நண்பர்கள் மூலம் வம்பு, வழக்கு, கோர்ட் கேஸ் பிரச்சனை வரும். வம்பு வழக்கிற்கு நீதி மன்றம் செல்லாமல் பெரியோர்களின் முன்னிலையில் பேசி தீர்த்தல் நலம் தரும்.
ராகு/கேது சஞ்சார பலன்:- ஏப்ரல் 12, 2022 வரை ராசியில் சஞ்சரிக்கும் ராகு/கேதுவால் சிலருக்கு ஆழ்மனதில் இனம் புரியாத கலக்கம் தோன்றும்.
தனித்திறமைகள் வெளிப்படும். எல்லாம் சரியாகவே நடந்தால் கூட நாம் செய்வது சரியா? என்ற இனம் புரியாத பய உணர்வு உங்களுக்குள் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு சிலருக்கு செரிமானக் கோளாறு இருக்கும்.
ஜென்ம ராசி மற்றும் ஏழில் ராகு/கேதுக்கள் என்பதால் நாக தோஷம் உண்டாகும். நாக தோஷத்தால் திருமணத்தடை மற்றும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமை குறைவு, உடல்நலக்குறைவு, கருச்சிதைவு போன்ற பிரச்சினைகள் எழும். ஜனன கால ஜாதகத்தில் தற்போது நடைபெறும் தசாபுத்திக்கு ஏற்பவே அசுப பலன்களின் பாதிப்பு இருக்கும் என்பதால் பயப்பட தேவையில்லை.
லக்னத்தில் உள்ள ராகு உங்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க வைத்து பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். சுக்கிரன் வீட்டு ராகு பணத்தை அள்ளி அள்ளி கொடுப்பார். நிறைய பணம் வரும். ஆனால் கையில் பணம் தங்காது. ராகு அள்ளிக் கொடுக்கும் பணத்தை விருச்சக கேது அளவில்லாத செலவை கொடுத்து சேமிப்பை கரைப்பார். குடும்ப உறுப்பினர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்களின் எதிர்பாராத பொருளாதார தேவையை நிறைவு செய்ய அதிக பண உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
எனினும் கடன் பிரச்சனையிலிருந்து பூரண விடுதலையாகுவீர்கள். ஏப்ரல் 12-ல் ராகு பகவான் பனிரெண்டாம் இடமான மேஷத்திற்கு மாறுகிறார். கேது ஆறாம் இடமான துலாத்திற்கு மாறுகிறார். மறைவு ஸ்தானத்தில் ராகு/கேதுக்கள் வரும் போது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த மாட்டார்கள். விரயத்தை ராகு மிகுதிப்படுத்துவார். வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.
குழந்தைகளின் படிப்பு, திருமணம் வீடு, வாகன செலவு என வாழ்க்கைக்கு அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரும். எலும்பு தேய்மானம், மூட்டு வலி தொடர்பான பிரச்சினைகள் கடுமையாக பாதிக்கும். ஒரு சிலருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நேரும். எது எப்படி இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.
ஆறாமிட கேது பொருள் கடன் மட்டும் அல்ல ஊழ் வினையால் ஏற்படும் உடல் உபாதைகள். எதிரிகள், பிறவிக் கடன், பித்ரு கடனையும் தீர்க்க உதவுவார்.
திருமணம்:- ராசியில் ராகுவும் ஏழில் கேதுவும் நின்று கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தை வெளிப்படுத்துகிறது.மேலும் 9-ல் ஆட்சி பலம் பெற்று நிற்கும் பாக்கியாதிபதி சனி ஆன்மீக நாட்டத்தையும், வெளியூர் வெளிநாட்டு வாழ்க்கையையும் ஏற்படுத்தியதால் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பும் குறைவுபட்டு இருக்கும். தற்போது ராசிக்கு 10-ம் இடமான கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தைப் பார்க்கிறார். நான்காம் இடமான சுக ஸ்தானத்தை பார்க்கிறார். தடைபட்ட அனைத்து வழிகளும் திறந்து 2022 ஏப்ரல் மாதத்திற்குள் உங்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும்.
பெண்கள்:- கணவன், மனைவியிடம் நிலவிய கருத்து வேறுபாடு குறையும். சில பெண்களின் விவாகரத்து வழக்கு சாதகமாகி விரும்பிய ஜீவனாம்சம் கிடைக்கும். உங்களுக்குள் நிலவிய மறைமுகப் போர், மனஸ்தாபங்கள் முடிவுக்கு வரும். சக உழியரால் ஏற்பட்ட அவமானம் மறையும். மாமியார், மாமனார், நாத்தனார், மச்சினர் பிரச்சனை குறையும்.
விவசாயிகள்: -கடந்த ஆண்டு ஏற்பட்ட இழப்புகளால் உங்களுக்குள் பதிந்த எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது. இந்த ஆண்டு நீங்கள் பயிருடன் பணத்தையும் சேர்த்து தான் அறுவடை செய்வீர்கள். பங்குதாரர் இல்லாத விவசாயமாக இருந்தால் பயிருடன் பணமும் வீடு வந்து சேரும். விவசாயிகள் நீண்ட காலமாக செலுத்தாக கடன் பாக்கிகளை அரசு தள்ளுபடி செய்யும்.
உத்தியோகஸ்தர்கள்:- உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் சிறிது சிறிதாக மேலதிகாரியுடன் இருந்த கருத்து வேறுபாடு மாறும். உங்களுக்கு ஆதரவு தரும் புதிய மேலதிகாரி வரலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். வேலையில் நாட்டம் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். அரசு, வெளிநாட்டு வேலைக் கான முயற்சிகள் பலிதமாகும்.
முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்:- புதிய தொழில் திட்டங்களுடம் போதிய முதலீடுகள் வைத்துள்ள புதிய தொழில் பங்குதாரர் அல்லது நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் தடவாளப் பொருட்கள் வாங்க அரசின் நிதியுதவி மற்றும் நலத்திட்டங்கள் பயன்படும். வேலையாட்களின் அனுசரனை தொழிலில் தடையற்ற வளர்ச்சி உண்டாகும். மதி நுட்பம் நிறைந்த நல்ல தொழில் ஆலோசகர் மற்றும் வேலையாட்கள் அமைவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொழில், வியாபாரம் செய்பவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
அரசியல்வாதிகள்: 9-ல் சனி இருப்பதால் பெயர், புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். நினைத்ததை நிறை வேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றி மக்களின் ஆதரவை பெறுவீர்கள். பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உயர் பதவி கிடைக்கும்.
மாணவர்கள்: -படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். முன்பை விட அதிக ஈடுபாட்டுடன் படித்து நல்ல மதிப்பெண் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர்வார்கள். அரியர்ஸ் வைத்தவர்கள் மீண்டும் எழுதி வெற்றி பெறுவார்கள்.
கிருத்திகை 2,3,4-ம் பாதம்: குடும்ப உறவுகளுடன் எல்லா விஷயங்களையும் மனம் விட்டுப் பேசி மகிழும் படியான சூழல் உருவாகும். சனிக்கிழமைகளில் வரும் பிர தோஷ நாளில் ஈஸ்வரனை வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபட நன்மை அதிகமாகும்.
ரோகிணி:- ஏற்றமும், இறக்கமும் நிறைந்தது தான் மனித வாழ்க்கை என்பதை உணர்ந்து எதர்த்தமாக வாழப் பழகுவீர்கள். திங்கட்கிழமைகளில் மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து அம்பிகையை வழிபட மன நிம்மதி உண்டாகும்.
மிருகசீரிஷம் 1,2 :- இந்த ஆண்டு உங்கள் கவலைகள், கடன்கள் அனைத்தையும் கோட்சார குரு, சனி, ராகு/ கேதுக்கள் தீர்த்து வைப்பார்கள். செவ்வாய்கிழமை 9 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி நவகிரக அங்காரகனை வழிபட இன்னல்கள் அகலும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விளம்பி வருட பலன்
நினைப்பதை சாதிக்கும் ஆர்வம் மிகுந்த ரிஷப ராசியினருக்குஇந்த தமிழ் புத்தாண்டில்சொல்வாக்கு, செல்வாக்கு அதிகரிக்க நல் வாழ்த்துக்கள்.
ராகு கேதுக்கள் ராசிக்கு 12, 6ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள். குரு பகவான் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் உலா வருகிறார். சனிபகவான் 9ம் இடத்தில் நிற்கிறார். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும்.உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். புதிய எண்ணங்கள்மற்றும் திட்டங்கள் தோன்றும். சேவை மனப்பான்மையை மிகும். ஆன்மீக தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இணைந்து சேவை செய்வீர்கள். வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறுவார்கள் உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும்.
தடைபட்ட அனைத்து சுப பலன்களும் தேடிவரும்.உங்களின் புகழ்,அந்தஸ்தை உயர்த்த அதிகம் உழைக்க நேரும்.பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்துவிதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். கடந்த ஆண்டு ரிஷப ராசியினர் அனுபவித்த இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்.
குடும்பம்: தாயின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவு செய்வீர்கள். சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள்வாங்கி மகழ்வீர்கள். வாடகை வீட்டு தொல்லை அகலும். இதுவரை விற்காமல் கிடந்த அசையாச் சொத்துக்கள் விற்று விடும். பல தலைமுறையாகவிற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். அண்டை அயலார் சச்சரவு முற்றிலும் நீங்கும்.
ஆரோக்கியம்: நாள்பட்ட வியாதிகள் மறையும்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.பயண அலைச்சலால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்கள் எழுந்து நடமாடுவார்கள். மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு கூட நோய் தாக்கம் குறையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கை, கால் மூட்டு வலி குறையும்.. ஆயுள் தீர்க்கம். சிலருக்கு கண்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய நேரும்.
பெண்கள்: தாய் மற்றும் தாய் வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் கல்வி ஆர்வம் , முன்னேற்றம் மன நிம்மதி தரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும்.
மாணவர்கள்: உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்திற்கு குரு பார்வை இருப்பதால் இந்த குருப் பெயர்ச்சி ரிஷப ராசி மாணவர்களுக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்கித்தரும். பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். 12 ம் இடத்திற்கு ராகு செல்வதால்உயர் கல்விக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகிட்டும். அல்லது விடுதியில் தங்கி படிப்பார்கள். நீங்கள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாட திட்டத்தில் சேர்ந்து படிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்: வேலையில்லாமல் திணறிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அனுசரனையும் ஆதரவும் உண்டு.
முதலீட்டாளர்கள்: சனி மற்றும் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால்இழுத்து மூடிவிட்டுச் செல்லும் நிலையில் இருந்த தொழில் கூட விருவிருப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்ச்சிப்பீர்கள். நீண்ட காலமாக உங்களுக்கு வர வேண்டிய பணம் தாமதமாகிக் கொண்டு இருந்தால் இப்பொழுது வசூலாகும். தொழில்சிறப்பாகஇருந்தாலும் 12ம் இடமான விரைய ஸ்தானத்தில் ராகுஇருப்பதால்எவ்வளவு லாபம் இருந்தாலும் உபரி வருமானம் இருக்காது. கோட்சார குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சிலருக்கு அதிக முதலீட்டில் தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உதயமாகும். ராகு விரய ஸ்தானத்தை கடக்கும் வரை முதலீட்டாளர்கள் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.
அரசியல்வாதிகள்: 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு உண்டு. பொது மக்களின் ஆதரவு. 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் நீங்கள் சார்ந்து இருக்கும் கட்சியில் உங்களுக்கு தலைமைப் பொறுப்புகள் உண்டு. நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்த்த பதவிகள் தேடி வரும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் தன்னலமற்ற சேவை செய்வீர்கள்.
கலைஞர்கள்:சுக்ரனின் வீடான ரிஷபத்தில் பிறந்த நீங்கள் கலைத் துறையில் உங்களுக்கென்று தனி இடம் பிடிப்பீர்கள். 5ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
விவசாயிகள்: நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம்பாதுகாப்பான முறையில் விவசாயம் செய்வீர்கள். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு உபரி உற்பத்தியும், உபரி வருமானமும் கிடைக்கும்.
ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார். ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் ராகு/கேதுக்கள் 12, 6ம் இடத்தில் சஞ்சரிப்பதால் சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும். சிலருக்கு தகாத பெண்களின் நட்பு உருவாகும். கடன் தொல்லை அதிகரிக்கும். தாய்மானுடன் சிறிய மன பேதம் உண்டாகும். சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மருத்துவ செலவு அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள். சேமிப்புகள் கரையும்.
குரு: 29.7.2022 முதல் 23.11. 2022 வரை கோட்சாரத்தில் ராசிக்கு 9ல் சஞ்சரிக்கும் சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் வெளியூர், வெளிநாட்டு பயணத்தில் தடை, தாமதம் ஏற்படும். தொழில் போட்டி அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளுடன் மனகசப்பு உண்டாகும். தந்தை குடும்பத்தை பிரிந்து தூர தேசம் செல்லலாம்.சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோபிரிந்து வாழலாம். தொழில் கூட்டாளிகளிடம்கருத்து வேறுபாடு அல்லதுபிரியும்நிலை ஏற்படும்.
பரிகாரம்: முறையான பித்ருக்கள் வழிபாடு இன்னல்களை நீக்கும்.
வரவும் செலவும்
லாப ஸ்தான குருவால் பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். இது பொற்காலம் என்று சொல்லும் வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். லாப குருவினால் கிடைக்கும் வருமானத்திற்கு விரய ஸ்தான ராகுசெலவுகளை இழுத்து விடுவார்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
சனிப்பெயர்ச்சி பலன்கள்
ஒன்பதாமிடத்தில் சனி, உயர்வுகள் வந்திடும் இனி!
ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 9-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. எனவே இனி தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் என்பதால், சனி பகவான் தன் சொந்த வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் பொழுது எண்ணற்ற நற்பலன்களை வழங்குவார். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அந்த குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. மேலும் அங்குள்ள குருவோடு இப்பொழுது சனியும் சேர்ந்து ‘நீச்சபங்க ராஜயோகம்’ ஏற்படப் போகின்றது. மகரத்தில் குரு இருக்கும் பொழுது, சனி சாதகமான பலன்களை ஏராளமாக கொடுக்கலாம்.
பொன் பொருள் சேர்க்கை உண்டு
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு சனி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் 9-ம் இடம் பாக்கிய ஸ்தானமாகவும் கருதப்படுகின்றது. அதே நேரத்தில் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், இதுவரை தடைப்பட்ட உயர்வுகள் தானாக வந்து சேரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும் விதத்திலேயே இந்த சனிப்பெயர்ச்சி அமைகின்றது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும், எதிர்பார்த்த ஊதிய உயர்வும் வந்து சேரும். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். உடல்நலம் சாதாரண சிகிச்சையிலேயே குணமாகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 3, 6, 11 ஆகிய மூன்று இடங்களையும் முறையாகப் பார்க்கின்றார். எனவே இதுவரை பிரச்சினையுடன் வாழ்ந்த உங்களுக்கு மன அமைதி கிடைக்கப்போகின்றது. 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். மேலும் யோககாரகனாக சனி விளங்குவதால், உத்தியோகத்தில் திடீரென புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற விதம் சம்பள உயர்வுகளும் கூட கிடைக்கலாம்.
சனியின் பார்வை 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் பதிவதால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரிய சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். சுக ஸ்தானாதிபதி சூரியன் என்பதால், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். குடும்பத்தில் விரிசல்கள் அகன்று உறவு பலப்படும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி தொடரும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, திருமண வாய்ப்புகள் கைகூடும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். இடையில் கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கப் போகின்றார். எனவே ‘சொந்த வீடு கட்டியும் அதில் வசிக்க முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதில் குடியேறும் முயற்சி கைகூடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில், மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 10-ல் குரு வருவதால் பதவி மாற்றங்களும், இடமாற்றங்களும் உருவாகலாம். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘விபரீத ராஜயோக’ அடிப்படையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. அப்போது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மனநிம்மதி குறையும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்க நேரிடும். தூரதேசத்தில் உள்ள சொந்தங்களால் சில நன்மைகள் ஏற்படும். குடும்ப ரகசி யங்களை வெளியில் சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம்.
8.10.2023-ல் நடைபெறும் பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அப்பொழுது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் பலம்பெறுகின்றது. வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். பிள்ளைகள் வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இதுவரை கேட்டுக் கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கலாம்.
வெற்றிக்குரிய வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபட்டு வருவதோடு, இல்லத்து பூஜை அறையில் அபிராமி அம்மன் படம் வைத்து, அபிராமி அம்மன் பதிகம் பாடி வழிபட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எளிதில் வெற்றி கிடைக்கும்.
குருப்பெயர்ச்சி பலன்கள்
இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து பதவி, அந்தஸ்து, கௌரவம் ஆகியவற்றைதந்து கொண்டுஇருந்த குரு பகவான் இனி 11ம்இடமான லாபஸ்தானத்திற்குபெயர்ச்சி ஆகி வந்து பெரும் லாபத்தை தர இருக்கிறார். குரு பகவான்உங்கள் ராசிக்கு 8, 11ம் அதிபதி.லாபாதிபதி லாப ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவது மிகச் சிறப்பு. தொட்டது துலங்கும். ரிஷபத்திற்கு குரு அஷ்டமாதிபதி என்பதால் பெரியதாக நன்மை செய்வதில்லை. ஆனால் கோட்சாரத்தில் 11ம் இடத்திற்கு வரும் அனைத்து கிரகங்களும் நன்மையை மட்டுமே செய்யும்.
பணம் இருந்தால் முகத்தில் தனி கலை தென்படும், என்பது உங்களைப் பார்த்து மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு வசீகரமான தோற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பொருளாதார நிலை சீராகும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். பற்றாக் குறை வருமானத்தில் சொற்ப்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியவர்களுக்கு பணம் எனும் தனம்சமூக அங்கீராத்தை பெற்றுத் தரும். ராஜ மரியாதை கிடைக்கும். உங்கள் முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். தாய், தந்தை மற்றும் பெற்ற மக்களால் செல்வம் சேரும்.
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து நல்ல பெயர் கிடைக்கும். கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள்.
வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள். உங்களின் 4ம் அதிபதி சூரியன் என்பதால் சிலர்அழகும், அந்தஸ்தும், ஆடம்பரமும் நிறைந்த அப்பார்மென்ட் வீடு வாங்கி குடியேறுவீர்கள். பழைய வாகனத்தை கொடுத்து புதிய 2 , 4 சக்கர வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தைதக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. லாப ஸ்தானத்தில் குரு பகவான் இருந்தாலும் விரய ஸ்தானத்தில் ராகு இருப்பதால் வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும்
5ம் பார்வை பலன்கள்:குருவின் 5ம் பார்வை 3ம் இடமான முயற்சி மற்றும் இளைய சகோதர ஸ்தானத்திற்கு உள்ளது. மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இடப் பெயர்ச்சி செய்யும் வாய்ப்பு உள்ளது. சிலர் தொழில் அல்லது வேலைக்காகசிறு தூரப் பயணம் செய்வார்கள். சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவீர்கள். இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடையதிறமைகள் அனைவருக்கும்தெரியவரும்.
தங்களின் செயல் திறனில்மாற்றம் ஏற்பட்டுலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உருவாகும். வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும். மனோதிடம்கூடும். 3ம் இடத்திற்கு அஷ்டமாதிபதி குரு மற்றும் பாதகாதிபதி சனியின்பார்வையும் இருப்பதால் கூட்டுத் தொழில் செய்யும் சகோதரர்களாக இருந்தால் உங்களின் சகோதர்உழைப்பை தராமல்லாபத்தை மட்டும் எடுத்து செல்வார். கணக்கில் முறைகேடு செய்யவும் வாய்ப்புள்ளது .நிர்வாக கணக்கில் குழப்பம்செய்து கூட்டுத் தொழில் பிரியும் வாய்ப்புள்ளது.
7ம் பார்வை பலன்கள்: குருவின் 7ம் பார்வை 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உள்ளது. 5ம் இடம் என்பது பதவி ஸ்தானம், புத்தி ஸ்தானம் , பூர்வ புண்ணிய ஸ்தானம், புத்தி கூர்மை, தெய்வ அனுகிரகம் பற்றி கூறும் இடம் . கோச்சாரத்தில் 5ம் இடத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் இதுவரை கருத்தரிக்காத பெண்களுக்கு பூர்வ புண்ணிய பலத்தால் கரு உருவாகும். கருத்தரிப்பில் சிரமம்உள்ளவர்களுக்கு வைத்தியம் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். எப்பொழுது வீட்டில் மேளச் சத்தம் கேட்கும் என்று எதிர்ப்பார்த்த பெற்றோர் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள்.
கவுரவப் பதவிகள் தேடி வரும். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் குறையும். குல, இஷ்ட,தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றஏற்ற காலம் இது.இதுவரைகுல தெய்வம்தெரியாமல்இருந்தவர்கள் முயற்சியின் பேரில் குல தெய்வத்தை கண்டறிய முடியும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சாஸ்திர ஞானம் கிடைக்கும். விமானம் மூலம்ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு வரும்.
11ம் இடம் இரண்டாம் திருமணத்தைக் குறிக்குமிடம். 11ம் அதிபதி குரு 11ல் ஆட்சி பலம் பெற்று 5ம் இடத்தை 7ம் பார்வையாக பார்ப்பதால் இக்கால கட்டத்தில்திருமணம்ஆனவர்கள் கூட தவறான நட்பில்விழுந்துவாழ்கை கேள்விக்குறியாக்கி கொள்வார்கள். ஒருவனுக்குஒருத்தி என்பதே நம் மரபு என்பதை உணர்ந்து செயல்படாவிட்டால் வீட்டு விசயம் வீதி வரை வந்து அவமானப்படுத்தும். மேலும் சுக்ரனின் வீடான ரிஷபத்தில் பிறந்த கலைஞர்கள் கலைத் துறையில் தங்களுக்கென்று தனி இடம் பிடிப்பார்கள். 5ம் இடத்திற்கு குருப் பார்வையும் இருப்பதால் மிகப் பெரிய விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். அற்புதமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும். தயாரிப்பாளர்கள் சுய ஜாதக பரிசீலினைக்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க வேண்டும்.
9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 7ம் இடத்திற்கு இருப்பதால் திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார்கள். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுதுஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம்.
திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்துவாழும் கணவன், மனைவிமீண்டும் சேர்ந்து வாழ்வர். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். களத்திரத்தின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். மனக்கசப்பு மாறும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.நண்பர்களுடன்விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
குருவின் வக்ர பலன்:29.7.2022 முதல் 23.11.2022 வரை
குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கும் காலம் தந்தை வழிச் சொத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். முன்னோர்கள் வழி நரம்பு சம்பந்தமான நோய்க்கு உடனே சிகிச்சை எடுத்தல் அவசியம். சிலர் குடும்ப உறுப்பினர்களால்கடன் பட நேரும். தொழில் நெருக்கடி இருக்கும். தொழில் வாய்ப்புகள் கைநழுவிப் போகும்.
வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள்.முதலாளி தொழிலாளி கருத்து வேறுபாடு மிகும் அல்லதுதொழிலாளிகள் மூலம் வழக்கை சந்திக்க நேரும். வேலை பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவும். சிலர் வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சினை காரணமாக வேறு வேலை மாற நேரும் அல்லது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது . சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை இருக்கும்.தொழிலை தக்க வைக்க கடுமையானமுயற்சியையும் போராட்டத்தையும் அதிக உழைப்பையும் செலவிட வேண்டும்.
பெண்கள்:பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். 12ல் ராகு இருப்பதால் பொருளின் தரம், பயன்பாடு, தேவை அறிந்து வாங்கி பயன்படுத்துவது சிறப்பு. தவறான பயன்படாத பொருள் விரயத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனம் தேவை.
பரிகாரம்:சனிக்கிழமை இஷ்ட ,குலதெய்வம், பைரவரைவழிப்பட்டால் கவலை தீரும். தினமும் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட 12 மிட ராகுவினால் ஏற்படும் விரயம் மட்டுப்படும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
12.4.2022 முதல் 30.10.2023 வரை
பனிரென்டில் ராகு/ ஆறில் கேது
அழகான ரிஷப ராசியினரே ராகு கேதுக்கள் ராசிக்கு 12, 6ம் இடத்திலும் குரு பகவான் 11, 12ம் இடத்திலும் சனிபகவான் 9,10ம் இடத்தில் சஞ்சரிக்கிறார்கள்.
12ம்மிட ராகுவின் பலன்கள்:இதுவரை ராசியில் சஞ்சாரம் செய்து மன உளைச்சலை அதிகரித்த ராகு 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்குச் சென்றதால் மன நிம்மதி அதிகரிக்கும். ராகு அந்நிய தேசத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் சிலர் பிழைப்பிற்காக வெளிநாட்டை நோக்கிச் செல்வார்கள். ரிஷபம் கால புருஷ குடும்ப ஸ்தானம் என்பதால் தலை மறைவாக வாழ்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். ராகு தான் நின்ற இடத்தின் பலனை பிரமாண்டப்படுத்துவார் என்பதால் விரயம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். வீடு கட்டப் போட்ட பட்ஜெட் எகிறும். கல்யாண செலவு திட்டமிட்டதை விட இரட்டிப்பாகும்.இப்படி தொட்டதெல்லாம் செலவில் கொண்டு போய் நிறுத்திவிடும்.
அதனால் குழந்தைகளின் படிப்பு, சுப விசேஷங்கள் என வாழ்வின் அனைத்து தேவைகளையும் ராகு நிறைவேற்றி வைப்பார். சிலருக்கு இடது கண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும்.
12.4.2022 முதல் 14.6.2022 வரை ராகுவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள்:ரிஷபத்திற்கு 4ம் அதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிக்கும் காலத்தில் தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். சிலருக்கு வீடு கட்ட அரசின் மானியம் கிடைக்கும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு வாகன பிராப்தம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான அழகு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தாயுடன் புரிதல் உண்டாகும். சிலருக்கு நாய், பூனை, மீன், பறவைகள் என உயிரின வளர்ப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெகு சிலர் தங்கள் பெயருக்கு அவப் பெயரை தேடிக் கொள்வார்கள்.
15.6.2022 முதல் 20.2.2023 வரை ராகுவின் பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள்:சுக்ரனின் நட்சத்திரமான பரணி ரிஷபத்திற்கு ராசியதிபதி மற்றும் ஆறாம் அதிபதி. ராசி அதிபதி மற்றும் ஆறாம் அதிபதியும் சுக்ரன் என்பதால் உங்களுக்கு நடக்கும் நல்லது, கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். சிலர் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு பார்த்துக் கொண்டு இருந்த உத்தியோகத்தை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்வார்கள். சிலருக்கு பார்த்த வேலைக்கு உடனே ஊதியம் வராமல் தடை தாமதமாகும். சிலருக்கு தகாத பெண்களின் நட்பு உருவாகும். கேட்ட, கேட்காத இடத்திலும் கடன் கிடைக்கும்.
தாய்மானுடன் சிறிய மன பேதம் உண்டாகும். ராசி அதிபதியின் நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிப்பதால் சிலருக்கு கண் திருஷ்டி, உடல் அலர்ஜி, செரிமானக் கோளாறு, காய்சல், தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றும். இந்த காலகட்டத்தில் ஏதேனும் போட்டி பந்தயங்களில் கலந்து கொண்டால் வெற்றி நிச்சயம். தொழில் எதிரிகள் உங்களை கண்டு விலகுவார்கள்.
21.2.2023 முதல் 30.10.2023 வரை ராகுவின் அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்:அசுவினி கேதுவின் நட்சத்திரம். கோட்சாரத்தில் 6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார்.கேது தான் நின்ற பாவக பலனை சுருக்குவார் என்பதால் எதிரி, கடன், வட்டி தொல்லையிலிருந்து விடுவிப்பார். நாள்பட்ட வியாதிகள் மறையும். வாடகை வீட்டு தொல்லை, அண்டை அயலார் சச்சரவு முற்றிலும் நீங்கும். உங்கள் வாழ்வில் நடந்த கெட்ட சம்பவங்களின் தாக்கம் குறையும்.
தாய், தந்தை வழி உறவுகளிடம் அறியாமல் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு குடும்பத்தில் இணைவீர்கள். பகைமை மறந்து உறவுகள் ஆறுதலாக இருப்பார்கள். செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்தவர்கள் நன்னடத்தையால் விடுபடுவார்கள். இழுத்தடித்த, நிலுவையில் இருந்த வம்பு வழக்குகள் தீரும்.
6ம்மிட கேதுவின் பலன்கள்:ராசிக்கு 6ம் இடமான துலாத்தில் சஞ்சரிக்கும் கோட்சார ருண ,ரோக, சத்ரு ஸ்தானத்தை இயக்கப் போகிறார். அதன் பலனாக எதிரி தொல்லை முற்றிலும் அகன்று விடும்.
கடந்த ஒன்றறை ஆண்டுகளாக ரிஷப ராசியினர் பட்ட இன்னல்களுக்கு கேது முற்றுப் புள்ளி வைப்பார். விவாகரத்து வழக்கை சாதகமாக்குவர்.
வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும். இதுவரை விற்காமல் இருந்த அசையாச் சொத்துக்கள் விற்று விடும். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும்.
“ கடனா “ அப்படின்னா என்ன? என்று கேட்கும் அளவிற்கு பணம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்.ஜாமீன் பொறுப்பால், வராக்கடனால் இழந்த பணம் வசூலாகும். திருடு போன பொருட்கள் கிடைக்கும். அடமான நகை, வீடு, நிலம் மீளும். இது நாள் வரை பட்ட கடன், அவமானதால் பாவம், புண்ணியம் பற்றிய புரிதல் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் எதிர்பாராத பணவரவு உங்களை திணற வைக்கும். வர வேண்டிய பணம்வரும்.
12.4.2022 முதல் 17.10.2022 வரையான கேதுவின் விசாகம் நட்சத்திர சஞ்சார பலன்கள்:ரிஷப ராசிக்கு 8,11ம் அதிபதியான குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் கேது பகவான் திடீர் அதிர்ஷ்டத்தையும் விபரீத ராஜ யோகத்தையும் வழங்குவார். ஜனன கால ஜாதகத்தில் குரு, கேது தசை புத்தி நடப்பவர்களுக்கு சமுதாய அங்கீகாரத்தை தரக்கூடிய தொழில் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் தோன்றும். மிகக் குறுகிய காலத்தில் பணக்காரர் ஆகும் தொழில் சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளை பன் மடங்காக பெருக்கும் குறுக்கு வழியில் நாட்டம் மிகும்.அதற்காக புதிய பங்கு தாரர்களை தேடும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பல புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முதலீட்டாளர்கள், ஏஜென்சி நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் தேடி வரும். சிலர் இலவச ஆபர் கொடுப்பது, முதலீட்டை இரட்டிப்பாக்கி தருவது , ஆன் லைன் வணிகம், ஷேர் மார்க்கட்,சதுரங்க வேட்டை படத்தில் மண் பாம்பை வைத்து பணம் சம்பாதிப்பது போன்ற அவயோக தொழிலவை தேர்வு செய்து சட்ட சிக்கலில் மாட்ட நேரும். மற்ற தசை நடப்பவர்களின் தொழில் முயற்சிகள் சுப பலனை தரும்.
18.10.2022 முதல் 26.6.2023 வரையான கேதுவின் சுவாதி நட்சத்திர சஞ்சார பலன்கள்:ராசிக்கு 12ல் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் கோட்சார ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது சேவை மனப்பான்மையை மிகைப்படுத்துவார். ஆன்மீக தொண்டு நிறுவனங்கள், சங்கங்களில் இணைந்து சேவை செய்வீர்கள். வயதான சிலர் அல்லது மத்திம வயதினர் கோவில்களில் உலவாரப் பணிகள் செய்து முக்திக்கு வித்திடுவார்கள்.
சிலர் முழு நேர அரசியல்வாதியாக மாறி மக்களுக்கு சேவை செய்வார்கள். நீண்ட நாட்களாக படுக்கையில் கிடந்தவர்கள் எழுந்து நடமாடுவார்கள். மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு கூட நோய் தாக்கம் குறையும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான சுகர், பிரஷர் போன்றவற்றிற்கு மாற்று மருத்துவம் நல்ல பலன் தரும். கை, கால் மூட்டு வலி குறையும்.
நீண்டதூர பிரயாணத்தை தரும் ஆன்மீக சுற்றுலா தலங்களான கேதார்நாத், பத்திரிநாத், கைலாஷ், மானசரோவர் போன்ற தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.நெடுந்தூர வெளிநாட்டு பயணம் , இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.
27.6.2023 முதல் 30.10.2023 வரை கேதுவின் சித்திரை நட்சத்திர சஞ்சார பலன்கள்:ரிஷபத்திற்கு 7, 12ம் அதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் திருமணத் தடையைத் தருவார். அல்லது தவறான கலப்பு திருமணத்தை ஏற்படுத்துவார் அல்லது களத்திர விரோதத்தை ஏற்படுத்துவார். சில தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாகவோ, தொழில் நிமித்தம் காரணமாகவோ பிரிந்து வாழலாம். தொழில் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பிரியும் நிலை ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தம், பங்குச் சந்தை முதலீட்டை தவிர்க்க வேண்டும். விரையங்கள் அதி கரிக்கும். குடும்ப வாழ்வில் நாட்டக்குறைவு உருவாகும்.
வேற்று மொழி பேசுபவர்களுடன் அந்நிய தேசத்தில் குடிபுகும் நிலை ஏற்படும். சிலர் மதம் மாறுவார்கள்.
இந்த ராகு/கேது பெயர்ச்சி கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் இருக்கும். கடன் வாங்குவதை தவித்து நம்பிக்கையோடு உழைக்க நல்லதே நடக்கும்.
பரிகாரம்
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு அருகம்புல், தேங்காய் மாலை சாற்றி வழிபாடு செய்வதால் சகல விதமான தடைகள் சங்கடங்கள் நீங்கும். விநாயகர் அகவல் பராயணம் செய்து வர கஷ்டங்கள் விலகும். வெள்ளிக்கிழமை சக்ரத் தாழ்வாருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபட கடன் தீரும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406